Featured Posts
Home » ஷைய்க் அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி (page 12)

ஷைய்க் அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி

[தொடர் 13] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

கப்று வணங்கிகள் என்போர் யார்? சாதராண இந்திரியத்துளியில் இருந்து மனிதைனைப் படைத்து, பின்னர் அவனை மரணிக்கச் செய்து, அதன்பின்பும் அவனது விரல்ரேகைளில் கூட எவ்வித மாற்றமும் இல்லாது அதே அமைப்பில் அவனை எழுப்புவற்கு சக்தி பெற்ற அகலங்களின அதிபதியாகிய அல்லாஹ்வைவிட்டுவிட்டு, மரணித்த சிலருக்கு தாமாக சில சிறப்புக்களையும், கராமத்துக்களையும் வழங்கி அவர்கள் பேரில் கப்றுகளை கட்டி அவர்களின் மகிமைகளை எடுத்துக் கூறி அல்லாஹ்விடம் நேரடியாகப் பிரார்த்திப்பதை விட்டும் முஸ்லிம்களை தடுக்கின்ற …

Read More »

[தொடர் 12] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

கப்று வணங்கிகள் பற்றிய முன்னறிவிப்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது மரணத்தின் பின்னர் தோன்றவிருக்கும் வழிகெட்ட பிரிவுகள் பற்றியும், குழப்பங்கள் பற்றியும் முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள். அந்தப்பிரிவில் ஹவாரிஜ்கள் எனப்படும் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வோர் பற்றித் தெளிவாகவும், ஏனைய பிரிவுகளும் சூசகமாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.

Read More »

[தொடர் 11] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

மக்காவாழ் காஃபிர்களின் நம்பிக்கையும், நபி (ஸல்) அவர்களும் இஸ்லாம் அல்லாஹ்வை மாத்திரம் வணங்குமாறு பணிக்கின்ற மார்க்கமாகும். அதற்காகவே மனித, மற்றும் ஜின் இனத்தினர் படைக்கப்பட்டுள்ளனர், உலகில் முதல் மனிதராக படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்களின் காலம் முதல் கிட்டதட்ட பத்து நூற்றாண்டுகள் வரை மனிதர்கள் ஓரிறைக்கொள்கையிலேயே இருந்து வந்துள்ளனர் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். (இப்னு கஸீர்).

Read More »

[தொடர் 10] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

மரணித்தவர்களும், மார்க்கமும் மனிதனாக படைக்கப்பட்ட அனைவரும் ஒருநாள் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். அகிலங்களின் அதிபதியும், அர்ஷின் இரட்சகனுமாகிய அல்லாஹ் மாத்திரமே என்றும் நிலையானவன், நித்தியஜீவன்.

Read More »

[தொடர் 9] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

மார்க்கத்தைப் புரிந்து கொள்ள சில அடிப்படைகள் மார்க்கத்தில் மனித விருப்பு வெறுப்பிற்கு இடமில்லை இஸ்லாம் பரிபூரணமான வாழ்க்கை நெறியாகும். மலசலம் கழிப்பது முதல் அரசியல் விவகாரம் வரையுள்ள சகலவிதமான அம்சங்களையும் அது தெளிவுபடுத்தி விட்டது. அதில் கூடுதல், குறைவு செய்யவோ, அல்லது அதை மூதாதையர் மயமாக்கல் செய்யவோ எவருக்கும் அதிகாரம் கிடையாது. இதை அல்லாஹ்வின் திருமறை வசனங்களும், அவனது இறுதித்தூதரின் போதனைகளும் உறுதி செய்கின்றன.

Read More »

[தொடர் 8] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

முன்னோர்களின் (ஸலபுக்களின்) அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து விலகுதல் அல்குர்ஆனையும், அல்ஹதீஸையும் அதிமதிகம் அறிந்தவர்கள் ஸஹாபாக்களும், அவர்களின் வழி வந்தவர்களுமே! அவர்களின் விளக்கத்துடன் குறிப்பாக அகீதாவுடன் தொடர்புடைய விளக்கத்தோடு நமது விளக்கம் முரண்படுகின்ற போது நாம் அவர்களின் விளக்கத்தையே முன்னிலைப்படுத்த வேண்டும்.

Read More »

[தொடர் 7] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

தனது அறிவுக்கு முக்கியத்துவம் வழங்குதல் ஆதம் (அலை) அவர்களுக்கு சுஜுத் செய்யுமாறு அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட சைத்தான் சுஜுத் செய்ய மறுத்ததான். அவனிடம் அதன் காரணம் பற்றி கேட்கப்பட்டது, நீ என்னை நெருப்பினால் படைத்துள்ளாய், ஆதமை களிமண்ணால் படைத்துள்ளாய். களிமண்ணால் படைக்கப்பட்ட ஒருவனுக்கு நான் சுஜுத் செய்வதா என்ன! என அல்லாஹ்விடம் சைத்தான் கூறியதைக் கவனித்தால் தனதறிவிற்கு முக்கியத்துவம் அளித்து, நரகத்திற்கு இடத்தை அவனே தேடிக்கொண்டதைப் பார்க்கின்றோம்

Read More »

[தொடர் 6] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

அல்குர்ஆனைத் தவறாகப் புரிதல் இந்தப்பிரிகள் அல்குர்ஆனையும், ஹதீஸையும் தவறாகப்புரிந்தோ, அல்லது வியாக்கியானம் செய்தோ, அல்லது தமது வழிகேட்டுக்கு ஏதுவாக அவற்றை வளைத்துக் கூறியோ வழிகெட்ட தோற்றம் பெற்றிருக்கின்றன.

Read More »

[தொடர் 5] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

வழிகேடுகளை வரவழைப்பவை: மனோ இச்சை நேர்வழிக்கு பிரதான தடைக்கல்லாக உள்ளதும், உலகில் வழி கெட்ட கொள்கைகள் விரிவடைவதற்கும் மனோ இச்சைகளும் ஒரு காரணமாகும். வழிகேடுகளும், சீரழிவுகளும் நிகழ பெரிதும் பங்காற்றும் இந்த ‘மனோ இச்சை’ பற்றிய தெளிவும், எச்சரிக்கையும் ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டும்.

Read More »

[தொடர் 4] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

பெயர்கள் வரக்காரணம்: இந்தப் பிரிவுகளுக்கான பெயர்கள் அந்த சிந்தனையை முதல் முதலில் பிரதிபலித்தவர், அல்லது அவரது கருத்தைப்பிரதி பலித்த பிரபல்யமிக்க மாணவர், அல்லது அந்தக்கருத்தின் அடிப்படையில் பெயர்கள் சூடப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளவேண்டும். உதாரணமாக கத்ரிய்யா என்ற பிரிவனர் ‘விதி’ கத்ரை மறுத்ததனால் வந்ததாகும். அந்த சிந்தனையை முதன் முதல் முதலில் கைலான் அத்திமஷ்கி என்பவனே முன்வைத்தவன். அவனது பெயரில் அந்தப் பிரிவின் பெயர் இடம் பெறவில்லை.

Read More »