Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » கல்லறை மீது பள்ளி கட்டக்கூடாது.

கல்லறை மீது பள்ளி கட்டக்கூடாது.

305– உம்மு ஹபீபா (ரலி)வும் உம்மு ஸலமா (ரலி)வும் தாங்கள் அபீஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்க தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் மிகவும் கெட்டவர்களாவர் என்று கூறினார்கள்.

புகாரி-427: ஆயிஷா (ரலி)

306– நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, ‘யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்” என்று கூறினார்கள். இந்தப் பயம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

புகாரி- 1330. ஆயிஷா (ரலி)


307– ”தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூதர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி:437 அபுஹூரைரா (ரலி)


308– நபி (ஸல்) அவர்கள் மரணவேளை நெருங்கிய போது தமது போர்வையைத் தமது முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும் போது அதைத் தம் முகத்தை விட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும் போது தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள்.

புகாரி-435: ஆயிஷா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *