Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

பள்ளிவாயில் கட்டிக் கொடுக்க வேண்டும்

 (. . . مَنْ بَنَى مَسْجِدًا قَالَ بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ )

அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவதற்காக யாரேனும் பள்ளிவாயில் கட்டினால் அல்லாஹ் அவருக்காக சொர்க்கத்தில் அதனைப் போன்று கட்டிக் கொடுக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உஸ்மான்; -ரலி, நூற்கள் : புகாரீ 431, முஸ்லிம்)

 ( مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ كَمَفْحَصِ قَطَاةٍ أَوْ أَصْغَرَ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ )

யாரேனும் அல்லாஹ்வுக்காக புறா போன்ற பறவையின் இறக்கை அளவோ அல்லது அதனை விட சிறிய அளவோ பள்ளிவாயில் கட்டுவதில் பங்கெடுத்துக் கொண்டால் அல்லாஹ் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் -ரலி, நூல் : இப்னுமாஜா 730)

பாங்கிற்கு பதில் கூறவேண்டும்