Featured Posts

குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (தொடர்-4)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) சிநேகம் கொள்ளுதல்: பெரியவர்களிடமிருந்து அறிவையும், ஒழுக்கத்தையும், சமூகப் பண்பாட்டையும் பெற்றுக்கொள்ளும் விதமாகச் சிறுவர்கள் பெரியவர்களுடன் சினேகம் கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளனர். இளம் பிராயத்தினருடன் சமூக அந்தஸ்த்துப் பெற்ற பெரியவர்கள் நெருக்கமாகப் பழகும் போது அவர்கள் மகிழ்வடைகின்றனர். அதைத் தமக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதுகின்றனர். தாமும் சமூகத்தில் மதிக்கத்தக்க பிரஜையாக மாறிவிட்டதாக உணர்கின்றனர்.

Read More »

குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (தொடர்-3)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) சிறுவர்களைக் காணாத போது தேடுதல்: தந்தை வீட்டுக்கு வந்ததும் தனது பிள்ளைகள் குறித்து விசாரிக்க வேண்டும். குழந்தைகள் எங்கேனும் சென்று வரத் தாமதித்தால் அவர்களைத் தேடவேண்டும். இது குழந்தைக்கு எமது பெற்றோர் எம்மீது அக்கறையாக உள்ளனர் என்ற உணர்வை ஊட்டும் நாம் வெளியிடங்களுக்குச் சென்றால் வேலை முடிந்ததும் வீட்டுக்குச் சென்று விடவேண்டும். இல்லை என்றால் எமது பெற்றோர் எமது வருகையை எதிர்பார்த்து ஏக்கத்துடன் வழி …

Read More »

குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (தொடர்-2)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) கத்னாச் செய்தல்: ஆண் குழந்தைகளுக்கு ‘கத்னா’ செய்வது குழந்தையின் ஆன்மீகத்திற்கும், ஆண்மைக்கும், ஆரோக்கியத்திற்கும் ஊக்கமளிக்கும் ஒரு முக்கிய ஸுன்னாவாகும். ஆண்களுக்குப் போன்று பெண் பிள்ளையின் ‘கத்னா’ அவசியப்படுத்தப்படவில்லை. ஆனால் பெரும் தடை என்று கூறுவதற்கும் இல்லை.

Read More »

குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (தொடர்-1)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) இஸ்லாமிய நெறியில் குழந்தை வளர்ப்பு எனும் போது அவர்களது லௌகீக நலன் நாடிய ஆளுமைகள் மட்டுமன்றி, அவர்களின் ‘ஹிதாயத்’ எனும் ஆன்மிக ஆளுமை விருத்தியும் நோக்கமாகக் கொள்ளப்படும். இந்த வகையில் குழந்தைகளின் ஆன்மிக-லௌகீக முன்னேற்றத்திற்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அதற்காக அவர்கள் காட்டிய வழிமுறைகளை இங்கே சுருக்கமாகத் தொகுத்துத் தர விரும்புகின்றோம்.

Read More »

ஸஹாபாக்கள் மத்தியில் காணப்பட்ட கருத்து வேறுபாடுகள்

-அபூ நதா நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தனிப்பட்ட பயணத்தின் போதும், போர்க்களம் சென்றபோதும் ஸஹாபாக்கள் மத்தயில் கருத்து வேறூபடுகள் தோன்றின. இருந்தும் அதற்கான தீர்வாக இஜ்திஹாதின் அடிப்படையில் அவர்கள் கண்டதை நடைமுறைப்படுத்தினார்கள். மதீனா வந்த பின்னால் நபி (ஸல்) அவர்களிடம் அங்கீகரிகூறப்படும். அவற்றில் அவர்கள் அங்கீகரித்தவைகள் உள்ளன, திருத்திக் கொடுத்தவைகளும், அங்கீகரிக்காத அம்சங்களும் காணப்படுகின்றன.

Read More »

ஜனாஸா தொடர்பான துஆக்கள்

– அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி இஸ்லாம் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டுகின்ற அற்புத மார்க்கமாகும். ஜனாஸா தொடர்பான வழிமுறையும் அதில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்கள், பெண்கள் என பல மக்கள் மரணித்துள்ளார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் அடக்கமும் செய்துள்ளார்கள், அவர்களை எவ்வாறு அடக்கம் செய்தார்களோ அவ்வாறோ நாமும் நமது ஜனாஸாக்களை அடக்கம் செய்ய வேண்டும். மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download …

Read More »

நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்?

Download video – Size: 388 MB (768kbps video) Audio Play: [audio:http://www.mediafire.com/download/i9b3wx3m4s3bgam/nonbu_kadamai_yen.mp3] Download mp3 audio – Size: 78.8 MB வழங்குபவர்:கோவை அய்யூப் நாள்: 01-08-2010 இடம்: இக்பால் திடல், கோட்டை, கோவை

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-5-60)

60. மனித வடிவில் வந்த ஜிப்ரீல்! ஒரு நாள் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்பொழுது திடீரென ஒருவர் எங்கள் முன் வந்தார். அவருடைய ஆடை அதிக வெண்மையாகவும் தலைமுடி அதிகக் கருமையாகவும் இருந்தது அவரைப் பார்த்தால் பயணத்திலிருந்து வந்தவர் போன்றும் தெரியவில்லை. ஆனால் அதற்கு முன்னர் எங்களில் எவரும் அவரை அறிந்திருக்கவுமில்லை. அவர் நபியவர்களுக்கு எதிரில் உட்கார்ந்தார். தன்னுடைய முழங்கால்களை அவர்களின் முழங்கால்களுடன் இணைத்து வைத்தார். பிறகு தன் …

Read More »