Featured Posts

ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி

பிக்ஹுல் இஸ்லாம் – 20 – ஸலாதுல் குஸூப் -கிரகணத் தொழுகை-

சூரிய, சந்திர கிரகணங்களின் போது கூட்டாகத் தொழப்படும் தொழுகைக்கே கிரகணத் தொழுகை என்று கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்களுக்கு ஆன்மீக ரீதியில் ஒரு காரணம் கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்கள் மூலம் அல்லாஹுதஆலா மனித சமூகத்தை எச்சரிப்பதுடன், அல்லாஹ்வின் அருட் கொடையை எண்ணிப் பார்க்கவும் வைக்கின் றான். ஜாஹிலிய்யாக் காலத்தில் யாராவது ஒரு முக்கிய நபர் மரணித்துவிட்டால் அதற்காக சூரியனும், சந்திரனும் துக்கம் கொண்டாடுவதால் ஏற்படுவதே சூரிய, சந்திர கிரகணங்கள் …

Read More »

காதிகளாக இல்லாமல் தாயிகளாக இருப்போம்

மாற்றுக் கருத்துடையவர்களுக்குப் பட்டங்கள், பத்வாக்களாக வழங்கி மகிழ்வடையும் போக்கு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. காபிர், முஷ்ரிக், முனாபிக், பாஸிக், முப்ததிஃ என பத்வா வழங்கும் முப்திகளாக சிலர் மாறி வருகின்றனர். இது ஆபத்தானதாகும். சொல்லப்பட்டவர் அதற்கு உரியவர் அல்லாமல் இருந்தால் அது சொன்னவரைத்தான் குறிக்கும். அதாவது, சொன்னவர் காபிராவார், என ஹதீஸ்கள் கூறுகின்றன. “இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி ‘காஃபிரே!’ (இறைமறுப்பாளனே!) என்று கூறினால் …

Read More »

பெருநாள் தொழுகை தொழும் முறை | பெருநாள் தொழுகை – 3 [பிக்ஹுல் இஸ்லாம்-047]

பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துக் களைக் கொண்டதாகும். ஏனைய தொழுகைகளை விட மேலதிகமாக சொல்லப்படும் 12 தக்பீர்களால் அது வேறுபடுகின்றது. தக்பீரதுல் இஹ்ராமுடன் ஏனைய தொழுகைகள் போன்று தொழுகை ஆரம்பிக்கப்படும்.பின்னர் கிராஅத் ஓதுவதற்கு முன்னர் ஏழு (7) தக்பீர்கள் கூறப்படும்.பின்னர் சூரதுல் பாதிஹாவும் பின்னர் மற்றுமொரு சூறாவும் ஓதப்படும். அதன் பின்னர் ஏனைய தொழுகைகள் போன்று ருகூஃ, சுஜூதுகள் செய்யப்படும்.பின் இரண்டாம் ரக்அத்துக்காக எழும்புவதற்கான தக்பீர் கூறப்படும்.பின்னர் முதல் ரக்அத்தில் …

Read More »

எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே! |அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-35 [சூறா அந்நிஸா–78-79]

‘நீங்கள் எங்கிருந்த போதும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதியான கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால், ‘இது அல்லாஹ்விடமிருந்துள்ளது’ எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், ‘இது உம்மிடமிருந்துள்ளது’ என்கின்றனர். ‘அனைத்தும் அல்லாஹ்விடமிருந்துள்ளவையே’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! எந்தச் செய்தியையும் விளங்கிக் கொள்ள முற்படாமலிருக்க இந்தக் கூட்டத்திற்கு என்ன நேர்ந்தது?’ ‘உமக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதே. …

Read More »

நபி கடுகடுத்தார்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-45]

முஹம்மது நபி, இயல்பிலேயே மென்மையானவர். இலகிய குணமுடையவர். அவர் ஒருமுறை கடுகடுத்தார். முகம் சுழித்தார். அதற்காக அவர் அல்லாஹ்வால் கண்டிக்கப்பட்டார். அவர் யாருக்காக, ஏன் கண்டிக்கப்பட்டார் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்வோம். முஹம்மது நபி வாழ்ந்த சமூகத்தில் சாதி வேறுபாடு ஆழமாக வேரூன்றிக் காணப்பட்டது. சிலர் தம்மை உயர்சாதி என்று கூறிக்கொண்டு பெரும் அடக்குமு¬ணீறயைக் கையாண்டு வந்தனர். முஹம்மது நபி, ஒருவனே தேவன் என்று போதித்ததைக் கூட அவர்களில் சிலரால் …

Read More »

கவலைப்படாதே! அல்லாஹ் எம்முடன் உள்ளான்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-44]

“லா தஹ்ஸன் இன்னல்லாஃ மஅனா” கவலைப்படாதே, அல்லாஹ் எம்முடன் உள்ளான். இந்த வார்த்தை யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பது தெரியுமா தம்பி தங்கைகளே! வாருங்கள் தெரிந்து கொள்வோம். மக்காவில் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை ஆரம்பித்த போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடுமைகளை முஸ்லிம்கள் சந்தித்தனர். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றில் நீந்தி எரிமலைகளைக் கடந்து செல்வது போலிருந்தது. இறை நிராகரிப்பாளர்களின் வதைகள் வரம்பு மீறிப் போன போது நபி(ஸல்) …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம்

முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது ஆட்சி அதிகாரத்துடன் தமது கருத்தை நிலைநாட்டியதுடன் மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் மீது வன்முறைகளையும் …

Read More »

நபித்தோழர்களை குறைகாணும் வழிகேடர்கள் | இறைமொழியும் தூதர் வழியும் – 06

வழிகெட்ட எல்லாப் பிரிவுகளும் நபித்தோழர்களைக் குறை காண்பதை வழிமுறையாகக் கொண்டிருந்தனர். ஷிஆக்களைப் பொருத்தவரை அவர்கள் நபித்தோழர்களில் அதிகமானவர்களைக் காபிர்கள், முர்தத்துகள் என்றே கூறி வந்தனர். இதுகுறித்து இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக இமாம் இப்னுல் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். “ஷிஆக்கள் யஹுதி, நஸாராக்களை விட மோசமானவர்கள். உங்கள் மார்க்கத்தில் மிகச் சிறந்தவர்கள் யார்? என்று யூதர்களிடம் கேட்கப்பட்டால் மூஸாவின் தோழர்கள் எனப் பதில் கூறுவார்கள். உங்கள் மார்க்கத்தில் மிகச் …

Read More »

உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்வோம்

இஸ்லாம் கொள்கையில் உறுதியை வலியுறுத்துகின்றது. ஒரு முஸ்லிம் இஸ்லாமிய கொள்கையில் மலை போன்ற உறுதியுடன் இருக்க வேண்டும். அதில் தளர்வோ தள்ளாட்டமோ இருக்கக் கூடாது. இதே வேளை, இஸ்லாம் பிற சமய, சமூக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவற்றை மதித்து நடக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது. இஸ்லாம் சிலை வணக்கத்தையும், பல தெய்வ வழிபாட்டையும் கடுமையாக எதிர்க்கின்றது. அதனை முட்டாள்தனமாகவும் பார்க்கின்றது. இன்னும் அதை நரகத்திற்கு இட்டுச் செல்லும் …

Read More »

எனக்கு வாசிக்கத் தெரியாதே! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-43]

அதற்கு ‘ஜபலுந்நூர்’ (ஒளி மலை) என்றும் கூறுவார்கள். அந்த மலைக்கு ஏன் அந்தப் பெயர் சொல்லப்படுகிறது தெரியுமா? உலகையே இருளில் இருந்து மீட்டு ஒளியின் பால் இட்டுச் செல்லும் அற்புத வேதம் குர்ஆன் முதன்முதலில் இறக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயது நெருங்கையில் மனித இனத்தின் அவல நிலை குறித்து கவலைப்பட்டார்கள். இதனால் தனித்திருந்து இறைதியானத்தில் ஈடுபட்டார்கள். அந்த மலை உச்சியில் உள்ள குகையில் அவர்கள் இருக்கும் போது …

Read More »