எம்.ஏ.ஹபீழ் ஸலபி
நமது அன்றாட வாழ்வில் பல வித நட்புகள் ஏற்படுவதுண்டு. ஆனால், அந்த நட்புகள் எல்லாம் இறை நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்து காணப்படுவதில்லை.
நட்பு, நேசம், அன்பு அல்லாஹ்வுக்காக மாத்திரம் செலுத்தப்படும் உறவாக அமைதல் வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கிறது. அப்போதுதான் அல்லாஹ்வின் அருளும் ஆசியும் எமக்குக் கிடைக்கும்.
அல்லாஹ்வைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் நாம் ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டால், இன்பத்திலும் துன்பத்திலும் ஏழ்மையிலும் செழுமையிலும் அந்த உறவு நிலைத்து நிற்கும்.
எப்போதும் அது நன்மை பெற்றுத்தரும் ஒரு வணக்கமாக (இபாதத்தாக) அமையும். அது என்றும் களங்கப்படாத அன்பாக நிலைத்து நீடித்து வாழும்.
அல்லாஹ்வுக்காக ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளும் போது, அவர்களது ஈமான் சுவையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும், பொருள் பொதிந்ததாகவும் மாறிவிடுகிறது என்பது இஸ்லாத்தின் நோக்கு என்பதை இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
Pdf Format mobleல் படிக்க முடியவில்லை ! கட்டுரை முழுவதும் தளத்தில் பதிவிட்டால் படிக்க இலகுவாக இருக்கும்.
جزاك الله خيرا