1. கருத்துச் சுதந்திரம்
இஸ்லாம் மனிதனுக்கு கருத்துச் சுதந்திரத்தை வழங்கியுள்ளது.
“விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் கூறுவதை தெளிவாகவே கூறுங்கள்” (33-70)
ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் மிகச் சிறந்த ஜிஹாத் எது என்று வினவப்பட்டது அப்போது தீய ஆட்சியாளன் முன்னிலையில் சத்தியத்தை எடுத்துரைப்பதாகும் என பதில் கூறினார்கள். (அபூ-தாவூத்)
மனிதனுக்கு பேசுவதற்கு சுதந்திரத்தை அளித்த இஸ்லாம் அதற்கு சில ஒழுங்குகளையும் விதித்துள்ளது. கருத்தை வெளிப்படுத்துகையில் பிறர் உள்ளமும் உணர்வுகளும் புண்படாதிருக்கவேண்டும் அவை மதிக்கப்பட வேண்டும் என இஸ்லாம் வழிகாட்டுகிறது. மென்மையையும் நளினமான போக்கையும் கடைப்பிடிக்குமாறு அது உபதேசிக்கிறது.
“நீங்கள் அவர்களுடன் மிகவும் அழகிய வழிமுறையிலேயே விவாதம் புரியுங்கள்” (16-125)
அடுத்து 2. தகவல்களை ஊர்ஜிதப்படுத்தல் (கீழே அடுத்த பக்க எண்ணை கிளிக் செய்யவும்)
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
MASHA ALLAH.
Ungalathu Aakkangal Emakku Ookkangalaha Irukkinrana
jazakallahu Ahsanul Jazaa…