7. அச்சமூட்டும் செய்திகள்
அச்சத்தையும் பதட்டத்தையும் தரும் செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல் தேவையின்றி பரப்புவது சமூகத்தை பேராபத்தில் கொண்டு போய் சேர்த்துவிடும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக அல்லது சிறுபான்மையாக இருக்கும் சூழலில் பதட்டமான செய்திகளை பரப்பிவிடுவதனால் சமூகத்தில் அமைதி குலைந்து பீதியும் அச்சமும் நிலவி இறுதியில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம்.
“மேலும் பாதுகாப்பு அல்லது பீதியை ஏற்படுத்தும் செய்தி அவர்களிடம் வந்துவிட்டால் அதை அவர்கள் பரப்பிவிடுகின்றார்கள்” (4-83)
மேற்கூறப்பட்டவற்றைத் தவிர மேலும் பல ஊடகவியல் ஒழுக்கங்களை அல-குர்ஆன் அஸ்ஸூன்னா அடிப்படையில் நாம் காண முடியும். எனவேதான் இன்று ஊடக சாதனங்களால் சமூகத்தில் ஏற்படும் தீங்குகளை கட்டுப்படுத்த முடியாது சர்வதேசமே தடுமாறிக்கொண்டிருக்கும் வேளை இஸ்லாம் சிறந்த்தொரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கிறது.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
MASHA ALLAH.
Ungalathu Aakkangal Emakku Ookkangalaha Irukkinrana
jazakallahu Ahsanul Jazaa…