Featured Posts

மாதவிடாய் இரத்தம் பட்ட ஆடையை….

166- ஒரு பெண், நபி (ஸல்) அவர்களிடம் வந்து எங்களில் ஒருத்தியின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், அவள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அந்த இடத்தைச் சுரண்ட வேண்டும், பின்னர் அதைத் தண்ணீரால் தேய்த்துக் கழுவவேண்டும், பின்னர் அந்தத் துணியுடன் நீ தொழுது கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-227: அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி)

Read More »

திரித்துக் கூறப்படும் திருக்குர்ஆன் தொகுப்பு வரலாறு (வீடியோ)

திரித்துக் கூறப்படும் திருக்குர்ஆன் தொகுப்பு வரலாறு வழங்குபவர்: ஜமால் முஹம்மத் மதனி

Read More »

ஆடையில் பட்ட இந்திரியத்தை……..

165- நான் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் ஆடையில் படும் இந்திரியத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு, நான் நபி (ஸல்) அவர்களுடைய ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்காகச் செல்வார்கள். கழுவியதால் ஏற்பட்ட ஈரம் அவர்களுடைய ஆடையில் ஆங்காங்கே காணப்படும் என்று கூறினார்கள். புகாரி-231: ஸுலைமான் பின் யஸார் (ரலி)

Read More »

நீரைக் கொண்டு தெளித்து சுத்தம் செய்தல்

164- நான் (பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத எனது சிறிய ஆண் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தமது மடியில் உட்கார வைத்தார்கள். அப்போது அக்குழந்தை நபி (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் சொல்லி (சிறுநீர்பட்ட இடத்தில்) தெளித்தார்கள். அதைக் கழுவவில்லை. புகாரி-223: உம்மு கைஸ் (ரலி)

Read More »

சிறு குழந்தைகளின் சிறுநீர்……..

163- நபி (ஸல்) அவர்களிடம் குழந்தைகள் கொண்டு வரப்படுவதுண்டு. அப்போது குழந்தைகளுக்காக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது (சிறிது) தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் தெளித்தார்கள். (அதிகமாகத் தண்ணீர் ஊற்றி) அதனைக் கழுவவில்லை. புகாரி-6355: ஆயிஷா (ரலி)

Read More »

5. முன்னோர்கள் செய்தது மார்க்கமாகி விடாது

ஒரு சிலருக்கு தெளிவு ஏற்பட்டாலும் அவரை ஷைத்தான் இவ்வாறு குழப்புவான். ‘தலைமுறை தலைமுறையாக நமது முன்னோர்களும், தாய், தந்தையரும் நல்லடியார்களிடம் பிரார்த்தித்து வந்திருக்கிறார்களே, அவர்கள் செய்தவை அத்தனையும் தவறானவையா? அவர்கள் எல்லோரும் பாவிகளா? அவர்கள் எல்லோரும் நரகத்திற்குத்தான் செல்வார்களா? என்று ஷைத்தான் சிலரின் உள்ளத்தில் முன்னோர்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தி, அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீதுகள் கூறியவற்றை உதாசீனப்படுத்தி விட்டு, அவர்களின் முன்னோர்களுடைய பாதையை பின்பற்றுமாறு செய்து விடுகிறான். …

Read More »

சிறுநீர் கழித்த இடத்தை கழுவுதல் பற்றி….

162- ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித்தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள் என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணிர் கொண்டுவரச் சொன்னார்கள். பிறகு (தண்ணிர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது. புகாரி-6025: அனஸ் பின் மாலிக் (ரலி)

Read More »

தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழித்தல் பற்றி…

161- ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-239: அபூஹூரைரா (ரலி)

Read More »

நாய் நக்கிய பாத்திரத்தை……

160- உங்களில் ஒருவருடைய (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்து விடுமானால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-172: அபூஹூரைரா (ரலி)

Read More »