மரணத்துக்குப் பின் வரவுள்ள நிரந்தர மறுமை உலகத்துக்காகத் தம்மைத் தயார்ப் படுத்திக் கொள்ளச் செய்வதற்கான செயற்களமே இந்த உலகம் என்று யூதர்கள், கிறிஸ்தவர்களைப் போன்றே முஸ்லிம்களும் நம்புகின்றனர்.
இறுதித் தீர்ப்பு நாள், மீண்டும் உயிர்தெழுதல், சுவனம்-நரகம் ஆகியன இறைநம்பிக்கையின் அடிப்படை விஷயங்களில் அடங்கும். ஒரு முஸ்லிம் – அவர் ஆணாக இருப்பினும் சரி, பெண்ணாக இருப்பினும் சரி மரணமடைந்து விட்டால் முதலில் அவர்கள் குளிப்பாட்டப்படுகின்றார்கள். அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் அவர்களைக் குளிப்பாடுவது வழக்கம். பின்னர் தூய வெள்ளை ஆடை உடுத்தப்பட்டு, அவர்களுக்காக ஜனாஸா தொழுகை எனும் மரணித்தோருக்கான தொழுகை எளிய முறையில் நடத்தப்படுகின்றது. மரணித்த அதேநாளில் அவர்கள் நல்லடக்கம் செய்யப்படுகின்றார்கள்.
மரணித்த தமது உறவினருக்காக தாம் புரியும் இறுதிச் சேவையாக இதனை முஸ்லிம்கள் மேற்கொள்கின்றனர். அதுமட்டுமல்ல, அவர்களைக் குறித்த நினைவுகளை இப்பூமியில் நிலைத்திருக்க வைக்கும் ஒரு வாய்ப்பாக அந்த சேவைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் அருளினார்கள்:
(இந்த உலகில்) ஒருவர் புரிந்த மூன்று செயல்கள் அவருடைய மரணத்துக்குப் பின்னரும் அவருக்கு உதவி புரிந்து கொண்டிருக்கும்: “அவர் புரிந்த தர்மம், (பிறருக்கு) அவர் கற்றுத்தந்த அறிவு, நல்லவர்களான அவருடைய பிள்ளைகள் அவருக்காகப் புரியும் பிரார்த்தனை!”
நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
masha ALLAH .VERY GOOD SERVICE TO MANKIND.It must be continued.AZEEZ.