அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ்
இஸ்லாம் மனித உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரு மார்க்கம் என்ற வகையில், மனித உறவுகளுக்கு ஒரு பெறுமானத்தை வழங்கி, அதை நெறிப்படுத்துகிறது. இஸ்லாம் வழிகாட்டும் நல்ல நட்பு இந்த உலகத்தில் பல பயன்களைத் தருவதோடு, மறுமையிலும் பெரும் நன்மையையும் பெற்றுத் தரும்.
‘நாம் யாரை நேசிக்கிறோமோ, அவருடன் மறுமையில் நாம் இருப்போம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். தீயவர்களுடைய நட்பு நம்முடைய மறுமை வாழ்வை எரித்து, நாசப்படுத்திவிடும். வீணர்களுடைய சகவாசத்தால் மறு உலக வாழ்கையை தொலைத்தவர்களின் புலம்பல்களை அல்குர்ஆன் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
ஒரு மனிதன் இலகுவில் தனது நண்பனின் மார்க்கத்தில் ஆகிவிடுகின்றான். எனவே, யாரை நண்பனாகத் தேர்வு செய்வது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது மார்க்கத்தில் வலியுறுத்தப்படுட்டுள்ளது. அந்த வகையில், தீய நட்பின் விளைவுகளை இக்கட்டுரை விளக்குகிறது.
கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library