Featured Posts

நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை!

122- ஒவ்வோர் இறைத்தூதரும் ஒரு (பிரத்தியேக) வேண்டுதல் செய்து விட்டனர். அல்லது ஒவ்வோர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (விசேஷப்) பிரார்த்தனை உண்டு. அதனை அவர்கள் (இம்மையிலேயே) கேட்டு விட்டனர். அது ஏற்றுக் கொள்ளப்பட்டும் விட்டது. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய வைத்துள்ளேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-6305: அனஸ்(ரலி)

Read More »

1. இறைவனுக்கு உவமை மனிதர்களில் உள்ள நீதிபதியா?

இறைநேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் முஸ்லிம்களில் சிலர் அவர்களுடைய அறியாமையினால், ‘நீதிபதியிடம் வாதாடுவதற்கு நமக்கு ஒரு வக்கீல் தேவையல்லவா? அல்லது ஒரு பெரிய அமைச்சரிடம் நமது தேவையை கேட்டுப் பெறுவதற்கு அவருக்கு நெருக்கமானவரை பரிந்துரை செய்வதற்காக நியமிப்பதில்லையா? அதுபோல் தான் நாங்களும் இறைவனிடம் எங்களுக்காக வாதாடி, கேட்டுப் பெறுவதற்காக இறைவனுக்கு நெருக்கமான இறைநேசர்கள் மூலம் வேண்டுகிறோம்’ என்று கூறுகின்றனர். …

Read More »

மகாராஷ்டிரா மசூதி அருகே குண்டு வெடிப்பு – 30 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் மலேகாவ்ன் நகரில் இன்று மசூதிக்கு வெளியே பயங்கர குண்டு வெடித்தது. இதில், 30க்கும் மேற்பட்டவர் பலியாயினர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மதக் கலவரங்களுக்குப் பேர் போன இந்த நகரில் நடந்துள்ள இந்த குண்டு வெடிப்பால் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. படா கபரிஸ்தான் பகுதியில் உள்ள நுரானி மஸ்ஜித் என்ற மசூதிக்கு வெளியே இந்த குண்டு வெடிப்பு நடந்தது. இன்று ஷபாப்ஏராத் (ஷபே பராஅத்) என்ற …

Read More »

அல்லாஹ் நாடினால்……..

121- ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தவருக்காகப் பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பெற்ற) ஒரு பிரார்த்தனை உண்டு. அல்லாஹ் நாடினால் என் பிரார்த்தனையை மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரைக்க பத்திரப்படுத்தி வைக்க நான் விரும்புகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-7474: அபூஹூரைரா(ரலி)

Read More »

மதமாற்றம் ஏன்? -4

இஸ்லாம் இயற்றியுள்ளக் குற்றவியல் சட்டங்கள் மனிதாபிமானமற்றவை, கொடுரமானவை என்றும் குற்றம் புரிந்தவருக்குக் கடுமையான தண்டனையை இஸ்லாம் வழங்குகிறது. என்றெல்லாம் விமர்சிப்பவர்கள், இஸ்லாம் மட்டும் குற்றங்களுக்குத் தண்டனை வழங்கவில்லை, உலகநாடுகள் அனைத்தும் குற்றங்களுக்கான தண்டனைகளை நிர்ணயித்து குற்றவாளிகளை தண்டித்து வருகின்றன என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் செய்கின்றனர். குற்றவாளித் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாரிடமும் மாற்றுக் கருத்தில்லை. தண்டனை கூடுதல் என்பதில் தான் இஸ்லாம் முரண்படுகிறது. தண்டனை கூடுதல் போல் தோன்றினாலும் பாதிக்கப்பட்டவனின் …

Read More »

இறைவனிடம் பரிந்துரைக்கு தகுதியானவர்!

120- அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டு வரப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) புஜம் (முன்கால் சப்பை) ஒன்றை அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதை) வாயாலேயே (பற்களால்) பற்றிக் கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன் (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் …

Read More »

லாஇலாஹ இல்லல்லாஹ்!

119- அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று (இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரைச் செய்யுங்கள் என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் …

Read More »

1.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்

மக்கத்துக் காஃபிர்களா..? பக்கத்துக் காஃபிர்களா..? இஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிப்பவர்கள் திருக்குர்ஆன் 2:191 வசனத்தில் ”அவர்களைக் கொல்லுங்கள்” என்ற வாசகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, ”முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும்” கொன்று விடும்படி திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகிறது என்று தவறானப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த அவதூறுப் பிரச்சாரம் இந்தியாவிலும் உலக அளவிலும் அரங்கேற்றப்படுகின்கிறது. முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாத்தின் கொள்கைகளின் பால் கவரப்பட்டு விடக்கூடாது, இஸ்லாத்தை விஷமென வெறுக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு …

Read More »

நிரந்தர நரகம் விதிக்கப்பட்டவர்களைத் தவிர…

118- அல்லாஹ் மறுமை நாளில் மக்களை ஒன்று கூட்டுவான். அப்போது அவர்கள் (அதிபயங்கரமான)இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாராவது) நாம் கேட்டுக் கொண்டால் நன்றாயிருக்குமே! என்று கூறியவாறு (ஆதி மனிதரும் ஆதித் தூதருமான)ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள். அவரிடம் அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான். தன் (தன்னால் படைக்கப்பட்ட) உயிரை உங்கள் உடலுக்குள் ஊதினான். மேலும் தன் வானவர்களுக்கு அவன் கட்டளையிட ,அவர்கள் உங்களுக்குச் …

Read More »

குறைந்த அந்தஸ்து உடைய சொர்க்கவாசி

117- நபி (ஸல்) அவர்கள் (சுவர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின் வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ் நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள் என்பான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் அது நிரம்பியதைப் போன்று அவருக்குத் தோன்றும் உடனே அவர் திரும்பி …

Read More »