Featured Posts

நூல்கள்

நபிக்கு அதிகாரத்தில் பங்கில்லை [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-16]

“(நபியே!) அதிகாரத்தில் உமக்கு யாதொரு பங்கும் இல்லை. (அல்லாஹ்) அவர்களுக்கு மன்னிப்பு வழங்கலாம் அல்லது நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்கள் என்பதால் அவன் அவர்களைத் தண்டிக்கலாம்.” (3:128) உஹதுப் போரில் நபி(ச) அவர்களின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர்களது முகத்தில் இரத்தம் கசிந்தது. அப்போது, ‘தங்கள் நபியைக் காயப்படுத்திய ஒரு சமூகம் எப்படி வெற்றி பெறும் என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள். அப்போதுதான் மேற்படி வசனமும் அருளப்பட்டது.”(முஸ்லிம்: 1791-104) இந்த …

Read More »

இமாமத்தும் அதன் சட்டங்களும் | ஜமாஅத்துத் தொழுகை-5 [பிக்ஹுல் இஸ்லாம்-35]

ஜமாஅத் தொழுவதாக இருந்தால் ஒருவர் இமாமாக தொழுகையை நடத்த வேண்டும். இமாமின் தகுதி என்ன? யார் இமாமத் செய்ய வேண்டும் என்ற விபரம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய தொன்றாகும். காரீஆ? பகீஹா? இமாமத் செய்பவர் அல்குர்ஆனை அழகிய முறையில் ஓதக் கூடியவராக இருக்க வேண்டும் என இமாம்களான அபூ ஹனீபா மற்றும் தவ்ரீ அஹ்மத் ஆகியோர் கருதுகின்றனர். அழகிய தொனியில் ஓதுவதை விட சட்டதிட்டங்கள் பற்றிய அறிவு அதிகம் உள்ள …

Read More »

மலக்குகளின் எண்ணிக்கை எத்தனை? ஏன்? [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-15]

“நீங்கள் பலம் குன்றியிருந்த நிலையிலும் பத்(ர்ப் போ)ரில் அல்லாஹ் உங்களுக்கு நிச்சயமாக உதவி செய்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.” “மூவாயிரம் வானவர்களை உங்கள் இரட்சகன் இறக்கி உங்களுக்கு உதவி புhpந்தது உங்களுக்குப் போதாதா?” என்று நம்பிக்கை கொண்டோரிடம் (நபியே!) நீர் கூறியதை (எண்ணிப் பார்ப்பீராக!) ஆம்! நீங்கள் பொறுமையாக இருந்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடக்கும் போது அ(ப்பகை)வர்கள் உங்கள் மீது திடீரென(த் தாக்க) …

Read More »

சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை காரணம் காட்டி வஹியை மறுப்பது வழி கேடாகும் [02-இஸ்லாத்தின் அளவுகோல் வஹியே…]

சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை காரணம் காட்டி வஹியை மறுப்பது வழி கேடாகும் இஸ்லாமிய நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் மத்தியில் சூனியம் மற்றும் கண்ணேறு ஓர் அலசல் இஸ்லாம் அதன் நம்பிக்கைகளில் ஒன்றாக கூறியுள்ள ஒரு சில விடயங்களை சமூகத்தில் நடக்கும் மூட பழக்க வழக்கங்களுடன் ஒப்பிட்டு ஒட்டு மொத்தமாக அடியோடு அவற்றை மறுப்பதை நாம் இன்று காண்கிறோம். அவற்றில் சிலதை தெளிவு படுத்த விரும்புகின்றேன் உதாரணமாக: 1: சூனியம் …

Read More »

தாலூதும் ஜாலூதும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-19]

மூஸா நபியின் மரணத்தின் பின் இஸ்ரவேலர்கள் வழிகேட்டில் சென்றனர். அல்லாஹ்வின் கட்டளைகளை மீறினர். பாவச் செயல்களை பகிரங்கமாகவே செய்தனர். பலர் சிலைகளைக் கூட வழிப்பட்டனர். எனவே, அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். இஸ்ரவேலரின் எதிரிகள் பலம் பெற்றனர். இவர்களின் அனேகரை அம்லாக்கியர் எனும் எதிரிகள் கொன்றொழித்தனர். பலரைக் கைதிகளாகப் பிடித்து அடிமைகளாக வைத்திருந்தனர். இவர்களின் பல ஊர்களும் எதிரிகளின் வசமாயின. அத்தோடு அவர்களிடம் ‘தாபூத்’ என்றொரு பெட்டி இருந்தது. அதில் மூஸா(அலை) அவர்களின் …

Read More »

இஸ்லாத்தின் அளவுகோல் வஹியே ஒழிய எமது சிந்தனையல்ல | தொடர்-1

அல்லாஹ் இப்படி பேசுவானா..? நபி ஸல் அவர்கள் இப்படி பேசியிருப்பார்களா..? அல்லாஹ் இப்படித்தானே சொல்லி இருக்க வேண்டும்..? நபி ஸல் அவர்கள் இப்படித் தானே நடந்திருக்க வேண்டும். என்று வெறும் ஊகங்களையே மூலாதாரமாக கொண்டு மூலாதாரங்களையே மறுக்கும் வழிகெட்ட சிந்தனை இன்று தமிழ் உலகில் ஏகத்துவ பிரச்சாரமாக முன்வைக்கப்படுவதை நீங்கள் உங்கள் பகுதிகளில் கண்டிருப்பீர்கள். இது பற்றிய சிறு விளக்கத்தை !உங்களுடன் காலத்தின் தேவை கருதி பகிர்ந்து கொள்வது பொறுத்தம் …

Read More »

பிக்ஹுல் அகல்லியா – சமகால நடைமுறைப் பார்வை

ராபிதத்து அஹ்லிஸ் ஸூன்னா வழங்கும் அம்பாறை மாவட்ட இஸ்லாமிய மாநாடு 2018 நாள்: 23-03-2018 இடம்: அக்பர் ஜும்ஆ பள்ளவாசல், மருதமுனை தலைப்பு: பிக்ஹுல் அகல்லியா – சமகால நடைமுறைப் பார்வை வழங்பவர்: அஷ்ஷைக். SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்) நிகழ்ச்சி ஏற்பாடு ராபிதத்து அஹ்லிஸ் ஸூன்னா வீடியோ இஸ்லாமிக் மீடியா சிட்டி பிரதான வீதி, அக்கரைப்பற்று இலங்கை தொடர்புக்கு: 0776507777

Read More »

முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதலுக்கு ஓமல்பே சோபித தேரர் கற்பிக்கும் காரணங்கள்

இலங்கையில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கயும்;, முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும் தொடந்த வண்ணமே உள்ளன. இந்த இனவாத செயற்பாடுகளுக்கு ஓமல்பே சோபித தேரர் சில காரணங்களை முன்வைத்துள்ளதாக ‘திவயின” சிங்களப் பத்திரிகையில் 21.03.2018 ஆம் திகதி வெளிவந்த செய்தியொன்றின் தமிழ் வடிவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது தொடர்பான எனது பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஓமல்பே சோபித …

Read More »

கண்டிக் கலவரத்தின் பின்னணி

கண்டிப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல் ஒரு திட்டமிட்ட செயற்பாடு என்பதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். இலங்கையின் அரசியல் பின்னணி: இலங்கையின் உள்ளாட்சித் தேர்தல் இடம் பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதியின் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியது. இலங்கையின் ஜனாதிபதி ஒரு கட்சியாகவும், பாராளுமன்றம் வேறு ஒரு கட்சியாகவும் உள்ளாட்சி சபை மற்றோர் கட்சியாகவும் உள்ளது. இச்சூழலில் இலங்கை அரசியல் திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது. …

Read More »

இஸ்ராவும் மிஃராஜும்

நபி(ச) அவர்களது வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதங்களில் இஸ்ராவும் மிஃராஜூம் அடங்கும். இது தொடர்பான சில விளக்கங்களை இக்கட்டுரையூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இஸ்ரா: “அஸ்ரா” என்றால் இரவுப் பயணம் செய்தல் என்பது அர்த்தமாகும். நபி(ச) அவர்கள் ஒரு நாள் இரவு மஸ்ஜிதுல் ஹரமில் இருந்து பலஸ்தீனத்தில் பைத்துல் முகத்திஸ் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதுவே இஸ்ரா என்று கூறப்படுகின்றது. “(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, …

Read More »