மார்க்கத்தில் ஓரளவு விபரமுள்ள இன்னும் சிலர் அவ்லியாக்களிடம் நேரடியாக கேட்டுப்பெறுவது தான் பாவம். ஆனால் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாக பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம் என்கின்றனர். இவ்வாறு கேட்பதற்கு மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தால் நம்மைவிட நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள். அதிலும் உமர் (ரலி) அவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவர்களின் மார்க்க ஞானத்தை எவராலும் குறைவாக எடை போட்டுவிட …
Read More »Monthly Archives: October 2006
இறைவனின் நியதிகள்!
இஸ்லாம் மார்க்கத்தை இறைவன் தேர்ந்தெடுத்து, இறைத்தூதர்களின் வழியாக ஆன்மீகப் போதனைகள் மக்களுக்குப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இறை வழிகாட்டியாக, இறைத்தூதர்கள் கொண்டு வந்த வேதங்களில் ”முந்தய வேதங்கள் ஏன் பாதுகாக்கப்படவில்லை?” என்ற கேள்விக்கு ”திருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?” என்ற தலைப்பில் விளக்கம் எழுதியிருந்தோம். சகோதரர் எழில் என்பவர் நாம் எழுதிய விளக்கத்தைப் படித்து விட்டு இறைவனுக்கு அறிவுரை வழங்கும் சில கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். பொதுவாக கடவுளைப் படைப்பவர்களுக்கு கடவுளுக்கே …
Read More »சஹாபாக்களுக்கு எதிராக பீஜே-யின் விமர்சனங்கள்
நபித்தோழர்களுக்கு எதிராக பீஜே-யின் விமர்சனங்கள்
Read More »நீரால் சுத்தப்படுத்துதல் பற்றி…
153- நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் செல்லும் போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரப்பிய தோல் பாத்திரத்தையும் ஒரு கைத்தடியையும் சுமந்து செல்வோம் (தேவையை முடித்து) தண்ணீரால் அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள். புகாரி-152: அனஸ் (ரலி)
Read More »அத்வானியைக் கொல்ல ஐ.எஸ்.ஐ. சதி!!!
மும்பை ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக சிலரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் பைசல் என்பவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ஷேக் என்பவர் தான் எங்களை ஒருங்கிணைத்து மும்பை தொடர் குண்டுவெடிப்புத் திட்டத்தைத் தீட்டிக் கொடுத்தார். 2002ம் ஆண்டு ஷேக் ஏற்பாட்டின் பேரில் நாங்கள் பாகிஸ்தான் சென்றோம். அங்கு ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளை சந்தித்தோம். அப்போது அத்வானி குறித்த தகவல்களை தங்களுக்குத் திரட்டித் தருமாறு ஐஎஸ்ஐ அதிகாரிகள் …
Read More »நபி (ஸல்) அவர்கள் விரும்பிய வலதுபுறம்!
152- நபி (ஸல்) அவர்கள் செருப்பு அணிவதிலும் தலை முடி சீவுவதிலும் சுத்தம் செய்வதிலும் அவர்களுடைய எல்லா விஷயங்களையும் வலது புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள். புகாரி-168: ஆயிஷா (ரலி)
Read More »மறைவிடங்களைச் சுத்தம் செய்வது பற்றி….
151- உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விடவேண்டாம். கழிப்பிடம் சென்றால் ஆண்குறியைத் தமது வலக் கரத்தால் தொடவோ தூய்மைப் படுத்தவோ வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-153: அபூ கதாதா (ரலி)
Read More »திருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது?
இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி வேதமாகிய திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவது போல், திருக்குர்ஆனுக்கு முந்தய வேதங்களும் ஏன் பாதுகாக்கப்படவில்லை? //பல நபிகள் மூலமாய் பல கட்டளைகள் இறைவனால் கொடுக்கப் பட்டும் அவைகள் பல மாற்றங்கள் பெற்றமையால் இறுதி வேதமாக முகம்மது மூலமாய் இப்போதைய குரான் இறக்கப் பட்டதல்லவா; இந்த வேதம் இதுவரை மாறாமல் காக்கப் பட்டது போல் மற்றைய முந்திய வேதங்களையும் இறைவன் காத்திருக்கக் கூடாதா; முடியாதா? பின் ஏன் அப்படி நடக்கவில்லை?//– …
Read More »தேசிய ஒருமைப்பாட்டிற்கு தீங்கிழைத்தவர்களுக்கு…
கடந்த 2001 ஆண்டு நமது நாடாளு மன்றத்தில் ஆயுத தாக்குதல் நடந்த போது பாதுகாப்புப் படைவீரர்கள் பதினொரு பேர் கொல்லப் பட்டார்கள். தாக்குதல் நடத்தியவர்களும் அப்போதே சுட்டுக் கொல்லப் பட்டார்கள். இத்தாக்குதலுக்கு பின்னனியில் உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட முஹம்மது அப்ஷல் குரு என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இதற்கிடையில் அப்ஷலின் மனைவி, குடியரசுத் தலைவருக்கு தன் கணவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை …
Read More »இப்னு உமர் (ரலி)யின் கூற்று!
150- ஹப்ஸா (ரலி)வின் வீட்டுக் கூரை மீது ஒரு வேலையாக நான் ஏறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் சிரியாவை முன்னோக்கியும் கிப்லாவின் திசையை பின்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் தமது (இயற்கைத்) தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கண்டேன். புகாரி-149: இப்னு உமர் (ரலி)
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library