ரமளான் மாதத்தை விட ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் உங்களில் யாரும் (சுன்னத்தான) நோன்பு நோற்கக்கூடாது. வழமையாக அந்த நாளில் நோன்பு நோற்பவர் நோற்றுக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
விளக்கம்: ரமளான் மாதத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் சுன்னத்தான எந்த நோன்பையும் நோற்கக்கூடாது. இதற்கு சந்தேக நாட்கள் என்று கூறப்படும். ஆனால், திங்கள் மற்றும் வியாழக்கிழமையாகிய இரு நாட்களிலும் வழமையாக நோன்பு நோற்று வந்தவருக்கு, சந்தேக நாட்களிலும், சுன்னத்தான நோன்பு நோற்பதற்கு அனுமதி உண்டு.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
Allhamdullah