105- நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அங்கிருந்தவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் கூறும் போது அவனுடைய இருகண்களுக்கு மத்தியில் காஃபிர் என எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றதும் இப்னு அப்பாஸ் (ரலி) நான் இதை நபி (ஸல்) கூறக் கேட்கவில்லை. எனினும் மூஸா (அலை) தல்பியா கூறியவாறு பள்ளத்தாக்கில் இறங்குவதை நான் காண்பது போன்று உள்ளது என நபி (ஸல்) கூற நான் கேட்டிருக்கிறேன் என்றார்.
புகாரி-1555: முஜாஹித் (ரலி)
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library