Featured Posts

அல்லாஹ் தவிர பிறவற்றின் மீது சத்தியம் செய்யத் தடை.

1066. (என் தந்தை) உமர் (ரலி) கூறினார்: என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்களின் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்” என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும் போதும் சரி; பிறரின் பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி; நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை. புஹாரி :6647 இப்னு உமர் (ரலி). 1067. …

Read More »

காற்றைக் கைது செய்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ காட்டுமிராண்டி தாக்குதலில் உயிர் இழந்துள்ளார். இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன், இறந்த அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். அரசியல் படுகொலைகள் இந்தியாவில் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே பாகிஸ்தானில் நடைமுறைக்கு வந்துவிட்டது. என்றாலும் இம்முறை சோகம் அதிகமாவே இருக்கிறது. கொல்லப்பட்டிருப்பவர் ஒரு பெண் என்பது மட்டுமே இதறக்குக் காரணம் அல்ல. ஏற்கனவே தனது தந்தையை அரசியல் படுகொலையில் பலிகொடுத்தவர்; முஸ்லிம் பெண்கள் அடக்கி …

Read More »

கஃபாவுக்கு நடந்து செல்ல நேர்ச்சை.

1064. ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்க, அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘(கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்!” என்று மக்கள் கூறினார்கள், நபி (ஸல்) அவர்கள் ‘இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது!” என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் …

Read More »

இறைவன் கொடியவனா?

புதியபறவை படம் என்று நினைக்கிறேன். அதில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடும் “எங்கே நிம்மதி?” எனத்தொடங்கும் பாடலில் “பெண்ணைப் படைத்து கண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே!” என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் எவரையும் முணுமுணுக்க வைக்கும். “அர்த்தமுள்ள இந்து மதம் ” என்று புத்தகம் எழுதிய கவிஞர் கண்ணதாசன் மிகுந்த இறைநம்பிக்கை உள்ளவர் என்றே நினைக்கிறேன்.(இவரின் சிந்திக்க வைக்கும் பல கவிதைகளை மதுபோதையுடனேயே எழுதுவார் என்று குற்றம் சாட்டப் …

Read More »

நேர்த்திக்கடன் விதியை மாற்றாது.

1062. நபி (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், ‘நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)” என்றார்கள். புஹாரி :6608 இப்னு உமர் (ரலி). 1063. நேர்த்திக்கடனானது, விதியில் எழுதப்படாத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே நேர்த்திக்கடன் அவனைக் கொண்டு செல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து இறைவன் (செல்வத்தை) …

Read More »

நிறைவேற்றப்படாத நேர்ச்சைகளை நிறைவேற்றுதல்.

1061. ஸஅத் இப்னு உபாதா (ரலி) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கோரியவராக, ‘என் தாயார் மீது ஒரு நேர்ச்சை கடமையாகியிருக்க, (அதை நிறைவேற்றும் முன்பே) அவர் இறந்து போய்விட்டார். (என்ன செய்வது?)” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘அவர் சார்பாக நீ அதை நிறைவேற்று” என்று கூறினார்கள். புஹாரி :2761 இப்னு அப்பாஸ் (ரலி).

Read More »

டினோஸாரும் இஸ்லாமியத் தீவிரவாதமும்!

கடந்த பத்து வருடங்களில் உலகின் பலபாகங்களிலும் கையாளப்பட்ட சொல்லாடல் ஒன்று உண்டென்றால் அது “தீவிரவாதம்” என்பதே ஆகும். தீவிரவாதம் என்றதும் உங்கள்முன் தாடி,தலைப்பாகையுடன் ஓர் உருவம் உங்கள் நினைவில் வந்து தொலைத்தால், தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தம் (War Against Terrorism) என்ற பெயரில், இஸ்லாத்தைத் தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி, முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க பாசிச/யூத/அமெரிக்க/ பார்ப்பனீய ஊடகங்கள் பட்ட கூட்டுக் கஷ்டங்கள் வீணாகி விடவில்லை என்று அர்த்தம். உலகின் பல …

Read More »

மோடியின் வெற்றியும் அதில் மகிழ்பவர்களும்

குஜராத் தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி பலரும் பதிவிட்டுள்ளனர். அவற்றில் சிறந்தப் பதிவாக கருதப்படுகிற நண்பன் ஷாஜியின் பதிவுக்கும், பனிமலரின் பதிவுக்கும் நானளித்த பின்னூட்டம் இது: ஜனநாயகம் என்பது பணபலமும் படைபலமும் தான், சாமானியனுக்கு அதில் பங்கில்லையோ என்று எண்ண வைத்தது மோடியின் தேர்தல் வெற்றி. எல்லோருமே எதிர்பார்த்த ‘இந்த வெற்றி’யில் புளகாகிதமடைந்து பதிவிடுபவர்களும் நாம் ‘எதிர்பார்த்தவர்கள்’ தான்.100க்கு 41 பேர் (விருப்புவெறுப்பு, பயம், விரக்தி, அலட்சியம் …

Read More »

தனித்தமிழ்நாடு

வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது என்று சொல்லி 1960களில் திராவிட இயக்கத் தலைவர்கள் தனித்தமிழ்நாடு கோரிக்கை எழுப்பியதால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். சுதந்திரக் குடியரசு இந்தியாவில் தனிமாநிலக் கோரிக்கை வைப்பது கிட்டத்தட்ட தேசத்துரோகமாகவே கருதப்பட்டது. பின்னர் காங்கிரஸும் – திமுகவும் அரசியல் உடன்பாடு கண்டதால், கூட்டனிக் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்ற கூட்டனி தர்மப்படி தனித்தமிழ்நாடு கோரிக்கை கைவிடப்பட்டது.அதன்பிறகு அவ்வப்போது மாநில பிரிவினை கோரிக்கை எழும்போது எல்லாம் மத்திய …

Read More »

மரணசாசனம் அத்தியாவசியமில்லை.

1057. நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் வஸிய்யத் – மரண சாசனம் செய்தார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘இல்லை” என்று பதிலளித்தார்கள். நான், ‘அப்படியென்றால் மக்களின் மீது வஸிய்யத் – மரண சாசனம் செய்வது எப்படிக் கடமையாக்கப்பட்டது? அல்லது மரண சாசனம் செய்யவேண்டுமென்று மக்களுக்கு எப்படிக் கட்டளையிடப்பட்டது?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘அல்லாஹ்வின் வேதத்தின்படி செயல்படுமாறு நபி (ஸல்) அவர்கள் …

Read More »