Featured Posts

தண்ணீர் இல்லாதபோது தயம்மம் செய்க..

206- நாங்கள் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். பைதாவு அல்லது தாத்துல்ஜைஸ், என்ற இடத்தை வந்தடைந்ததும் எனது கழுத்தணி அறுந்து (தொலைந்து) விட்டது. அதை தேடுவதற்காக நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கி விட்டோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூபக்ர் (ரலி)இடம் சிலர் வந்து (உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி (ஸல்) அவர்களையும் மக்களையும் …

Read More »

செத்த ஆட்டின் தோலைப் பதனிடுக…

205- மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு தர்மம் வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இதன் தோலை நீங்கள் பயன் படுத்தியிருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். இது செத்ததாயிற்றே! எனத் தோழர்கள் கூறியதும், இதை உண்பது தான் தடுக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-1492: இப்னு அப்பாஸ் (ரலி)

Read More »

காற்றுப் பிரிந்தால் உளூசெய்க…

204- தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தைக் கேட்கும்வரை தொழுகையிலிருந்து திரும்ப வேண்டாம் என்றார்கள். புகாரி-137: அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி)

Read More »

சமைத்த இறைச்சி உணவை உண்டால்.. …

200- நபி (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஒரு ஆட்டின் தொடைப்பகுதி இறைச்சியைச் சாப்பிட்ட பின் உளூ செய்யாமலே தொழுதார்கள். புகாரி-207: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) 201- நபி (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடை இறைச்சியை வெட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே கத்தியைப் போட்டு விட்டுத் தொழுதார்கள். உளூ செய்யவில்லை. புகாரி-208: அம்ர் பின் உமய்யா (ரலி) 202- நபி (ஸல்) அவர்கள் …

Read More »

இறைவனைப் பார்க்க முடியுமா?

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான். ”இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன், 004:082) ”இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.” (திருக்குர்ஆன், 41:42) ஆனாலும், திருக்குர்ஆனின் …

Read More »

சட்ட மாற்றத்திற்குப் பின்….

199- ஒருவர் தமது மனைவியின் (இரு கால், இரு கை,ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, அவளுடன் உடலுறவு கொள்வாராயின் அவர் மீது குளிப்புக் கடமையாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-291: அபூஹூரைரா (ரலி)

Read More »

வளைகுடாவில் மலம் அள்ளியவர்கள்

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் அயல்நாட்டவர்களில் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களில் பலர் தங்கள் தகுதிக்கு குறைவான சம்பளத்தைப் பெற்று வருகிறார்கள். பெரும்பாலான நாடுகளில் ஆசியர்களின் நிலை கிட்டத்தட்ட இந்த அவலநிலையிலேயே நீடிக்கிறது. அரபு நாடுகளில் நம்மவர்களுக்கு இழிநிலை தொடர்வதற்கு முக்கியக் காரணம், அங்குள்ள நம் இந்தியத் தூதரகங்களின் ஊழலும், ஊழியர்களின் அலட்சியமும் என்பதை நீண்டகாலம் அந்நாடுகளில் இருப்பவர்கள் அறிவார்கள். சவூதி அரேபியா தவிர மற்ற …

Read More »

உடலுறவுக்குப் பின் குளிப்பு அவசியம்….

சட்ட மாற்றத்திற்கு முன் 196- நபி (ஸல்) அவர்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். தலையிலிருந்து தண்ணீர் சொட்டும் நிலையில் அவர் வந்தார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நாம் உம்மை அவசரப்படுத்தி விட்டோம் போலும்? என்றார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். நீர் (மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது) அவசரப்பட்டு எடுத்து விடுவீரானால், அல்லது இந்திரியம் வெளியாகாமலிருந்தால், அதற்காக நீர் உளூ செய்ய வேண்டும் என …

Read More »

மறைவிடங்களைப் பேணுதல் பற்றி…

195- (நபி (ஸல்) அவர்கள் சிறு பிராயத்தில்) கஃபத்துல்லாஹ்வின் கட்டுமானப்பணி நடக்கும் போது அதைக் கட்டுபவர்களோடு கற்களை எடுத்துச் சென்றார்கள். அப்போது அவர்கள் ஒரு வேஷ்டி அணிந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) என் சகோதரரின் மகனே! உன் வேஷ்டியை அவிழ்த்து அதை உன் தோள் மீது வைத்து அதன் மேல் கல்லை எடுத்துச் சுமந்து கொண்டு வரலாமே, என நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். …

Read More »