Featured Posts
Home » ஜாஃபர் அலி (page 45)

ஜாஃபர் அலி

இஸ்லாம் – கிறிஸ்துவம் ஆகிய மதங்களின் தோற்றுவாய் வெவ்வேறானதா?

திண்ணமாக இல்லை! யூத மதத்தைப் போன்றே, இப்ராஹீம் (அலை) அவர்களை இவ்விரு மதங்களும் சிறப்புக்குரிய தமது மூதாதையராகவும், இறைத்தூதராகவும் போற்றுகின்றன. அதுமட்டுமல்ல! அவருடைய இரண்டு புதல்வர்களின் மூலமாக நேரடி வாரிசுகளாக வந்த மூன்று இறைத்தூதர்களையும் இம்மூன்று மதங்களும் நம்புகின்றன. அதாவது, இப்ராஹீம் (அலை) அவர்களின் மூத்த புதல்வர்களான இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியில் வந்தவர்தாம் முஹம்மத் (ஸல்) அவர்கள்!

Read More »

பால் குடித்தல் பற்றி….

1307. நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கி (ஹிஜ்ரத்) சென்றபோது சுராக்கா இப்னு மாலிக் இப்னி ஜுஃஷும் என்பவர் அவர்களைப் (பிடித்து வரப்) பின்தொடர்ந்து சென்றார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கெதிராக (அவரைச் செயலிழக்கச் செய்யும் படிப்) பிரார்த்தித்தார்கள். உடனே, அவரின் குதிரை அவருடனேயே பூமியில் அழுந்திவிட்டது. சுராக்கா (நபியவர்களிடமே), ‘எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். நான் உங்களுக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் …

Read More »

போதை தராதவற்றை பருக அனுமதி.

1304. அபூ உசைத் அஸ்ஸாஇதீ (ரலி), தம் திருமணத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். (அதில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்தார்கள்.) மணப்பெண்ணாயிருந்த அபூ உசைதுடைய துணைவியார் (உம்மு உசைத்) அவர்களே அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடை செய்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்(குப் பருகக் கொடுப்பதற்)காக மணப்பெண் (உம்மு உசைத்) என்ன ஊறவைத்தார் தெரியுமா? இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குகென்றே (தண்ணீரில்) பேரீச்சம் பழங்களை (முந்தைய) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் …

Read More »

போதை தரும் மதுவை அருந்தியவன் திருந்தி தவ்பா செய்க.

1303. எவனொருவன் போதை தரும் மதுவை அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் அவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5575 இப்னு உமர் (ரலி).

Read More »

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.

1301. ‘போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 242 ஆயிஷா (ரலி). 1302. நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, ‘(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பூட்டி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள். (வேறுபட்டு …

Read More »

மது ஊற வைக்கப்படும் குடுவைகள் பற்றி…

1296. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(மது ஊறவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவையிலும், தார் பூசப்பட்ட பீப்பாயிலும் (பேரீச்சம் பழச்சாற்றை அல்லது திராட்சைப்) பழச்சாற்றை ஊற்றி வைக்காதீர்கள்” என்று சொன்னதாக அனஸ் (ரலி) எனக்கு அறிவித்தார்கள். புஹாரி : 5587 அனஸ் (ரலி). 1297. நபி (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவையையும், தார் பூசப்பட்ட பாத்திரத்தையும் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள். புஹாரி : 5594 அலீ (ரலி). 1298. …

Read More »

கனிகளை போதை பெற ஊறவைக்கத் தடை.

1294. நபி (ஸல்) அவர்கள் உலர்ந்த திராட்சையையும் பேரீச்சம் பழத்தையும் கலந்து ஊறவைக்க வேண்டாமென்றும், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் பேரீச்சக் செங்காய்களையும் கலந்து ஊற வைக்க வேண்டாமென்றும் தடை விதித்தார்கள். புஹாரி : 5601 ஜாபிர் (ரலி). 1295. நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச பழத்தையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயையும் ஒன்று சேர்(த்து ஊற வை)ப்பதையும், பேரீச்சம் பழத்தையும் உலர்ந்த திரட்சையையும் …

Read More »

அந்நிய மார்க்கமா இஸ்லாம்?

இன்றைய நவீன உலக கண்ணோட்டத்தின்படி இஸ்லாம் பழமைவாதத்தை வலியுறுத்தும் தீவிரவாத மார்க்கமாகக் கணிக்கப்படுகின்றது. இத்தகைய தவறான கண்ணோட்டம் உருவானது ஏன்? அதற்குரிய பதில் இதுதான்:- பொதுவாக, இன்றைய மேற்குலக நாகரிகத்தில் மதம் என்பது அவர்தம் அன்றாட வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாகவோ அல்லது பின்பற்றத்தக்க கூடியதாகவோ இருப்பதில்லை. 

Read More »

போதை தரும் பானங்கள் பற்றி…

குடி பானங்கள் 1292. பத்ருப் போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து என்னுடைய பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் (முதன் முதலாக) வீடு கூட விரும்பியபோது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை, என்னுடன் வந்து …

Read More »

மாற்றப்பட்ட குர்பானிச் சட்டம்.

1287. குர்பானி இறைச்சிகளை மூன்று நாள்களுக்கு (மட்டும்) உண்ணுங்கள். (இந்த ஹதீஸின்படி செயல்படும் வகையில்) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) மினாவிலிருந்து புறப்படும்போது குர்பானிப் பிராணிகளின் இறைச்சி(யைத் தவிர்ப்பதற்)காக (ரொட்டியை) எண்ணெய் தொட்டு உண்டுவந்தார்கள். புஹாரி : 5574 இப்னு உமர் (ரலி). 1288. நாங்கள் குர்பானி இறைச்சிக்கு உப்புத் தடவி அதை எடுத்துக்கொண்டு மதீனாவில் நபி (ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் ‘மூன்று நாள்களுக்கு மேல் (குர்பானி இறைச்சியை) …

Read More »