Featured Posts
Home » பொதுவானவை (page 107)

பொதுவானவை

பொது சிவில் சட்டம்

சென்ற மாதம் டெல்லியில் நடந்த பாஜக செயற்குழுவில் பேசிய ராஜ்நாத் சிங், “பொது சிவில் சட்டம்” கொண்டுவரப்பட வலியுறுத்தப்படும் என்றார். இந்திய முஸ்லிம்களைப் பற்றிய மிரட்சித்தீயில் இந்துத்துவா குளிர்காய, ராமர் கோவிலுக்கு அடுத்ததாக சங்பரிவரங்களால் அடிக்கடி உதிர்க்கப் படுவது “பொது சிவில் சட்டம்” என்ற செல்லரித்த முழக்கம். சிவில் பிரச்சினைகளுக்கு அந்தந்த மதச்சட்டங்களின்படி தீர்வுகாணும் உரிமை அனைத்து மதத்தவருக்கும் இந்திய அரசியல் சாசணம் வழங்கி உள்ளது.அரசியலமைப்பையும் அரசியல் சாசனத்தையும் தூக்கி …

Read More »

பணவீக்கமும் அரசியல் கணக்கீடுகளும்

கடந்த பதிமூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு நம்நாட்டின் பணவீக்கம் 10-12% அளவுக்கு உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி ஏறி, சகல தரப்பினரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மத்திய காங்கிரஸ் அரசு, பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறி கொண்டே, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. இவற்றை முன்வைத்து நடத்தப்படும் அரசியல் கணக்கீடுகளைக் அலசி தேசபக்தர்களை அடையாளம் காண்போம்! பணப்புழக்கம் அதிகமாகி,பணத்தின் கொள்வினை மதிப்புக் குறைந்து (Buying Capacity) விலைவாசி கூடுவதை பணவீக்கம் …

Read More »

ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள்

ஐ.ஏ.எஸ். (இந்திய ஆட்சிப் பணி), ஐ.பி.எஸ். (இந்திய பாதுகாப்புப் பணி), ஐ.எஃப்.எஸ் (இந்தியாவின் வெளிவிவகார பணி) உள்ளிட்ட அகில இந்திய அளவிலான அதிகாரிகளாக பணிபுரியக் கூடிய வேலைக்கு மத்திய அரசு தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி) ஆண்டு தோறும் முதல்நிலை மற்றும் மெயின் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த வருடம் 27 முஸ்லிம்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

Read More »

உள்ளூர் கோயபல்ஸ்கள்!

முஸ்லிம்: ஐயா உங்க பேரென்ன? மலர் மன்னன்! முஸ்லிம்: நீங்க எந்த ஊரு? கும்பகோணம்! முஸ்லிம்: கும்பகோணத்துல எந்த இடம்? மேல அக்ரஹாரம்! முஸ்லிம்: உங்களை நான் காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன் என்றுதான் அழைப்பேன்! நான்தான் கும்பகோணம் மேல அக்ரஹாரம் மலர் மன்னன்னு தெளிவாச் சொல்லிட்டேனே! அதனால அப்படியே அழையுங்கள்! முஸ்லிம்: காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன்னு உங்களை அழைப்பதை யாரும் ஆட்சேபிக்கவில்லையே! தவிர உங்கள் …

Read More »

குற்றங்களின் எண்ணிக்கை

ஏப்ரல்-28, 2008 அரப் நியூஸ் நாளிதழ் தெரிவிக்கும் செய்திக் குறிப்பு, கடந்த மூன்று மாதங்களில் மக்கா ரோந்துக் காவல் துறையினரால் 8,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது கடந்த ஜனவரி 10 முதல் ஏப்ரல் 21ஆம் தேதிவரை மக்காவைச் சார்ந்த ரோந்துக் காவல்துறையினர் 8,068 பேரை பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்துள்ளனர். இதில் 6,508 எட்டுபேர் பல்வேறு குற்றங்களில் ஈடுபடடுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

Read More »

ஜித்தாவில் “யூசுப் எஸ்ட்” – இஸ்லாமிய நிகழ்ச்சித் தொகுப்பு

இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதிலும் அதிக மக்களால் படிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக அமெரிக்க நாட்டில் பல ஆண்களாலும் பெண்களாலும் இஸ்லாம் படிக்கப்பட்டும் பரப்பப்பட்டும் வருகின்றது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து சவூதி அரேபியாவிற்கு பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் யூசுப் எஸ்ட் அவர்கள் வருகை புரிந்தார்கள். ஜித்தாவிலுள்ள சவூதி ஜெர்மன் மருத்துவமனை வளாகத்தில்

Read More »

அரபி படிக்கலாமே!

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் முடிந்து தற்போது மாணவர்களும், பெற்றோர்களும் முடிவுகளை எதிர்நோக்கி உள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பின் மேற்படிப்புகளை எப்படித் தொடரலாம், எங்கே தொடரலாம் என்று ஆங்காங்கே கல்வி ஆலோசனை முகாம்கள், கையேடுகள், குறுந்தகடுகள் என பல வகையிலும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

Read More »

ஜித்தாவில் மிதவை தண்ணீர் சுத்திகரிப்புக்கூடம்

தற்போது ஜித்தாவில் நிலவுகின்ற தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக, மிதவை கடல்நீர் சுத்திகரிப்புக்கூடம் ஏப்ரல் இறுதியில் கரையை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உற்பத்திக் கூடம் ஏற்கனவே செங்கடலை அடைந்திருந்தாலும், ஜித்தாவை நோக்கிய தன் பயணத்தில் தற்போது இருக்கிறது. இதுபோன்ற மற்றொரு உற்பத்திக்கூடமும் மே மாத இறுதியில் ஜித்தாவின் கடற்கரையை வந்தடையும். இதனால் ஜித்தாவின் தண்ணீர் தட்டுப்பாடு வெகுவாக நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More »

உங்களுக்குத் தெரியுமா!

– பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தூரம் 150 மில்லியன் கிலோ மீட்டர் (1 மில்லியன் என்பது 10 இலட்சம்) இந்த தூரத்தை ஒரு மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் செல்லும் ஒரு ஜெட் விமானத்தில் நிற்காமல் பயணித்தால் பதினேழு வருடங்களில் கடக்கலாம். – ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்குக்கூட கைரேகைகள் ஒரே மாதிரி இருக்காது.

Read More »

வாழ்க வெறும் தீவிரவாதம்!

* குர்ஆன் வன்முறையத் தூண்டுகிறது * சுவர்க்கத்தில் பெருமுலைக் கன்னியர்கள் கிடைப்பர் என்ற ஆசையில்தான் காஃபீர்கள்மீது முஸ்லிம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள் * இஸ்லாம் என்றால் அமைதி மார்க்கம் என்று சொல்கிறார்கள்;ஆனால் இஸ்லாமிய நாடுகளில்தான் (பாலஸ்தீன், ஈராக், ஆப்கானிஸ்தான்….) அமைதியின்மை நிலவுகிறது. * பாலஸ்தீன தீவிரவாதிகள் அப்பாவி இஸ்ரேலியர்கள் மீது அநியாயமாகத் தாக்குதல் நடத்துகிறார்கள். * காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்திற்கு எதிராகக் குண்டு வைக்கிறார்கள் * * …

Read More »