Featured Posts
Home » பொதுவானவை (page 25)

பொதுவானவை

பிரிந்து தனியாக இயங்கினாலும் ஹதீஸ் மறுப்புக்கொள்கையிலே…

இந்தியாவில் PJ வை கொள்கைத் தலைவராக்கொண்டு இயங்கி வந்த அமைப்புதான் TNTJ என்ற அமைப்பாகும். அதனது வளர்ப்புப் பிள்ளையாக இலங்கையிலே தோற்றம்பெற்றது SLTJ எனும் அமைப்பு. பீஜே வெளியேற்றத்தினால் அவ்வமைப்பின் உறுப்பினர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக சிலர் வெளியேறியதுடன் இன்னும் சிலர் வெளியேற்றப்பட்டார்கள். அதன்பிற்பாடு வெளியேறியவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் தனித்தனியாக தமக்கென்றொரு அமைப்பை உருவாக்கி, அதற்கென்றொரு தலைவர் – உபதலைவர் – செயலாளர் என்றொரு நிலைப்பாட்டில் செயல்படுகிறார்கள். அந்த அடிப்படையில்; …

Read More »

மகளெனும் தேவதைக்கு

இதயத்தில் குறித்திருக்கிறேன் அந்த அபூர்வ கணத்தை. சிறகுகள் உணராத செல்ல தேவதையே.. என் வாழ்வின் பொருளே.. சந்தோஷமே… அப்போது தான் நீ கண்மலர்ந்தாய் வெறும் சிப்பியென்றிருந்த எனக்குள் முத்தாக நீ வந்தாய். ரோஜாக் குவியலாய் உனைக் கையிலேந்திய அந்தத் தருணத்தில் வானத்தில் மிதக்கத் தொடங்கியிருந்தேன். இன்று வரை இறங்கவில்லை. ஏனையில் நீ உறங்குகையில் உன்னுடைய அந்தப் புன்சிரிப்பை அள்ளிக் கொண்டு தான் என் நாளை நிரப்பிக் கொள்வேன் அப்போதெல்லாம். ஆதியில் …

Read More »

அவரா சொன்னார்? அப்ப அது உண்மையாகத்தான் இருக்கும்!! [உங்கள் சிந்தனைக்கு… – 068]

அவரா சொன்னார்!? அப்ப அது உண்மையாகத்தான் இருக்கும்!! இமாம் முஸனீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: (எனது ஆசான்) இமாம் ஷாfபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எனக்கு இவ்வாறு கூறினார்கள்:- “(ஈராக்கின்) பக்தாத் நகரத்தில் ஒரு இளைஞனை நான் கண்டேன். அவர், ‘(இந்த ஹதீஸை, அல்லது இச்செய்தியை இன்னார்) எங்களுக்குத் தெரிவித்தார்!’ என்று கூறினால், ‘உண்மையையே அவர் உரைத்துவிட்டார்!’ என்று மக்கள் எல்லோரும் சொல்வார்கள். அப்போது நான் இமாம் ஷாfபிஈ அவர்களிடம், யார் அவர்?’ …

Read More »

மருந்து, மாத்திரைகள் மாத்திரம் நோய் நிவாரணியல்ல [அறிஞர்களின் பார்வையில் – 02]

بسم الله الرحمن الرحيم இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அதிகமான நோயாளிகள் மாத்திரைகளின்றியே நிவாரணம் பெறுகின்றனர். ஏற்றுக்கொள்ளப்பட்ட துஆவைக் கொண்டு அல்லது பிரயோசனமான ஓதிப் பார்த்தல் முறையைக் கொண்டு அல்லது உள்ளத்தில் உள்ள பலத்தைக் கொண்டு அல்லது அல்லாஹ்வின் மீதுள்ள சிறந்த நம்பிக்கையைக் கொண்டு அவர்கள் நோய் நிவாரணம் பெறுவர். மஜ்மூஉல் பதாவா: 12/563 தமிழில்… அஸ்கீ அல்கமீ (பலகத்துறை, நீர்கொழும்பு) 19.09.2018

Read More »

ஆஷுரா தினத்தில் பேண வேண்டியவை… [அறிஞர்களின் பார்வையில் – 01]

بسم الله الرحمن الرحيم இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: இந்த ஆஷூரா தினத்தில் (விஷேசமாக) கவலையை வெளிப்படுத்துவது அல்லது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது இரண்டுமே நபிவழிக்கு முரணாகும். இத்தினத்தில் நோன்பு நோற்பதைத் தவிர (விஷேசமாக) வேறெதுவும் நபியவர்களைத் தொட்டும் இடம்பெறவில்லை. மஜ்மூஉல் பதாவா: 16/194 தமிழில்… அஸ்கீ அல்கமீ (பலகத்துறை-நீர்கொழும்பு) 18.09.2018

Read More »

தமிழ் உலகில் ஹதீஸ் நிராகரிப்பின் முன்னோடி பீ.ஜே. எந்த அணியில் சேர்க்கப்படல் வேண்டும்? முஜ்தஹித்? முஃப்ஸித் ?

அறிஞர்கள் இருவகையினர். ஒரு சாரார் அல்லாஹ்வும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல் ) அவர்களும் காண்பித்த வழியில் சமூகத்தை வழி நடத்த தம்மை அற்பணித்த அருள்பாகாகியம் பெற்ற இமாம்கள், நல்லவர்கள். இந்த இலக்கை அடைவதற்காக அவர்கள் மேற்கொண்ட அறிவியல் பயணங்கள், ஹதீஸ் பகுப்பாய்வு முயற்சிகள், உலகில் மேற்கொண்ட பயணங்கள், தூரப் பிரதேசங்களில் பதித்த தடயங்கள் என்பன இஸ்லாமிய வரலாற்றின் அழியாப் புகழ் பெற்ற அத்தியாயங்களாகும். இவர்கள் தான், …

Read More »

எப்படியானவருக்கு எனது மகளை நான் திருமணம் முடித்துக் கொடுக்கலாம்? [உங்கள் சிந்தனைக்கு… – 067]

எப்படியானவருக்கு எனது மகளை நான் திருமணம் முடித்துக் கொடுக்கலாம்? ஒருவர், இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம்: “எனது மகளை எப்படியானவருக்கு நான் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டார். அதற்கவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வை அஞ்சி நடப்பவருக்கு முடித்துக் கொடுங்கள்! ஏனெனில், அவளை அவர் நேசித்து விட்டால் அவளை கண்ணியப்படுத்துவார்; அவளை வெறுத்துக் கோபித்து விட்டால் அவளுக்கு அநியாயம் செய்யமாட்டார்”. { நூல்: ‘முஹ்தஸரு மின்ஹாஜில் காஸிதீன்’, பக்கம்:102 …

Read More »

பொது சிவில் சட்டம் இப்போது தேவையில்லை

பொதுசிவில் சட்டம் இப்போது தேவையில்லை; சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தது சட்ட ஆணையம். -அத்தேஷ் ஜி 2014 மே மாதம் நரேந்திர மோடி தலைமையில் அமைந்த பாஜக அரசு தங்களின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றான பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது. பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் சாத்தியக் கூறுகளை ஆராயும் படி, 21 வது சட்ட ஆணையத்தை 2016, ஜூன் 17 ஆம் தேதி மோடி அரசு கேட்டுக்கொண்டது. …

Read More »

கோணலை ஒரேயடியாக நிமிர்த்தப் போகாதீர்கள் [உங்கள் சிந்தனைக்கு… – 066]

கோணலை ஒரேயடியாக நிமிர்த்தப் போகாதீர்கள்; ஒடித்து விடுவீர்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “தமது மனைவிமார்கள் (குணநலன்களில் குறைபாடுகளின்றி) பூரணத்துவமான நிலையில் இருக்க வேண்டும் என்றே கணவன்மார்களில் அதிகமானவர்கள் விரும்புகிறார்கள்! இது, முடியாத விடயமாகும். இதன்மூலம் பெரும் கஷ்டத்தில் இவர்கள் வீழ்ந்து, தமது மனைவிமார்கள் மூலம் இல்லற இன்பத்தையும் ஏனைய சுகத்தையும் அனுபவிக்க முடியாதவர்களாகியும் விடுகின்றனர். சிலவேளை இது, நபியவர்கள் கூறியதுபோல ‘தலாக்’ எனும் மணவிலக்கிற்கும் …

Read More »

அன்பு சகோதரர் அல்தாஃபி மற்றும் YMJ உறுப்பினர்களுக்கு எனது வேண்டுகோள்…

புதிய பாதையில் இலட்சிய பயணம் என்ற தலைப்பின் கீழ் நீங்கள் நேற்று ஒரு இயக்கத்தை உருவாக்கி கொள்கை பிரகடனம் செய்து நிர்வாக கட்டமைப்பையும் உருவாக்கி விட்டீர்கள் . TNTJ யில் இருந்து பிரிந்து ஒரு புதுப்பாதையை தெரிவு செய்துள்ள நீங்கள் புதிய பாதையின் தேவைப்பாடு என்ன? என்பதை மக்களுக்கு உணர்த்தும் போது TNTJ நிர்வாகரீதியில் விட்ட தவறுகளையும், உங்களுடைய விடயத்தில் நடந்துகொண்ட மிக கீழ்தரமான முறையையும், மார்க்க விடயங்களில் விட்ட …

Read More »