Featured Posts
Home » நூல்கள் (page 173)

நூல்கள்

நபி (ஸல்) அவர்கள் கண்ட அல்லாஹ்வின் சான்றுகள்

104- நான் (மிஃராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா அவர்களை ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான சுருள் முடிகொண்ட மனிதராகக் கண்டேன். ஈஸா அவர்களை நடுத்தர உயரமும், சிகப்பும், வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்புக் கொண்டவர்களாகவும் (சுருள்,சுருளாக இல்லாமல்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும் (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகாப்பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். …

Read More »

தொழுகை கடமையாகுதல்!

103- நான் இறை இல்லம் கஃபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விளிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தட்டு என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் காரை எழும்பிலிருந்து அடிவயிறுவரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம் ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பபட்டது. கோவேறுக் கழுதையை விட சிறியதும் கழுதையை விட பெரியதுமான புராக் என்னும் (மின்னல் வேக) …

Read More »

நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணம் பற்றி…

102- நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம் ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டி விட்டு, அதை மூடி விட்டார்கள். பிறகு ஜிப்ரீல் கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை …

Read More »

யா அய்யுஹல் முத்தஸ்ஸீர்!

101- நான் அபூ ஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் முதன் முதலாக அருளப் பெற்ற திருக்குர்ஆன் வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அன்னார் போர்த்தியிருப்பவரே! (யா அய்யுஹல் முத்தஸ்ஸீர்) எனும் (74:1 ஆவது) வசனம் என்றார்கள். நான் (நபியே!) படைத்த உங்கள் இறைவனின் பெயரால் ஓதுக! (இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லஃதீ கலக்) எனும் (96:1 ஆவது) வசனம் என்றல்லவா மக்கள் கூறுகின்றார்கள் என்றேன். அதற்கு அபூ ஸலமா …

Read More »

போர்வை போர்த்தியவரே எழுவீராக!

100- நான் நடந்து கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒருக் குரலைக்கேட்டு என் பார்வையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்துக்கும் பூமிக்கும் இடையே ஒரு ஆசனத்தில் அமர்திருக்கக் கண்டு அச்சமுற்றேன். (வீட்டிற்குத்) திரும்பி வந்து (கதீஜாவிடம்) என்னைப் போர்த்துங்கள் என்றேன். அப்போது போர்வை போர்த்தியவரே எழுவீராக! (மக்களுக்கு) எச்சரிக்கை செய்வீராக! (74:1) என்பது தொடங்கி அசுத்தங்களை விட்டு ஒதுங்கி விடுவீராக! என்பது வரை ஜந்து …

Read More »

நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கிய வஹீயின் துவக்கம் பற்றி…

99- நபி(ஸல்)அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போலத் தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையில் இருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தனர், தமது குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கி இருந்து) வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த நாட்களுக்கான உணவை தம்மோடு கொண்டு செல்வார்கள். (அந்த உணவு …

Read More »

"தாலிக்க முஸ்த்தகர்ருல் லஹா"

98- அல்லாஹ்வின்தூதர் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி( ஸல்) அவர்கள், அபூதர்ரே! இது (சூரியன்) எங்கு செல்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று சொன்னேன்.அதற்கு அவர்கள், இது இறைவனுக்கு(அவனது அரியாசனத்திற்குக் கீழே) சிரவணக்கம் (ஸஜ்தா) செய்ய அனுமதி கேட்பதற்காகச் செல்கின்றது. அதற்கு அனுமதி வழங்கப்படும். அதனிடம் நீ எங்கிருந்து வந்தாயோ, …

Read More »

இந்நேரம் கொள்ளும் விசுவாசம் பயனளிக்காது என்பது பற்றி..

97- அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாதவரை உலக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாகி மக்கள் அதைப் பார்க்கும் போது அவர்கள் அனைவருமே இறைநம்பிக்கைக் கொள்வார்கள். அது எந்த மனிதருக்கும் அவரது (அப்போதைய புதிய) நம்பிக்கை பயனளிக்காத நேரமாகும் என்று கூறிவிட்டு, உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (இறுதி) நாளில் முன்னரே நம்பிக்கைக் கொள்ளாதிருந்த மனிதருக்கும் அவர் (அப்போது) …

Read More »

பின் தொடரும் மஃமூமாக ஈஸா (அலை)!

96- உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்களுக்கு(த் தொழுவிக்கும்) இமாமாக இருக்க மர்யமின் மைந்தர் உங்களிடையே இறங்குவாரேயானால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-3449: அபூஹூரைரா (ரலி)

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (18)

விடுதலை இயக்கம் மேனாடுகளிலிருந்து பெற்ற அரசியல், பொருளாதாரக் கருத்துக்கள் ஒவ்வொரு முஸ்லிம் நாட்டிலும் விடுதலை இயக்கத்திற்கு ஊக்கமளித்தன. விடுதலைக்காக போராடி வெற்றி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம் நாட்டிலும் ஒரே வகையான நிகழ்ச்சித் தொடர் இடம் பெற்றது. எல்லா நாடுகளிலும் மேனாட்டுக் கல்வி பெற்றவர்களே விடுதலை இயக்கத்தின் முன்னணியில் நின்றனர். எல்லா நாடுகளிலும் இஸ்லாத்தின் பெயரால் வேண்டுகோள் விடுப்பது கொண்டே முஸ்லிம் பொதுமக்கள் செயல்படத் தூண்டப்பட்டனர். இப்போராட்டத்தின் பின் தோன்றிய ஆட்சி …

Read More »