ஷைத்தான் சந்தர்பங்களை, வாய்ப்புகளை தனக்கு சாதகமாக்கி தீண்டுதல்களை, ஊசலாட்டங்களை உங்கள் உள்ளங்களில் ஏற்படுத்துவான். குறிப்பாக உங்கள் தனிமையில். தீர்வு: இவ்வாறான ஷைத்தானிய தீண்டுதல்களை உணர்ந்தவுடன் சிரிதும் அவனுக்கு அவகாசம் கொடுத்துவிடாமல் உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ளுங்கள். أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ யாவற்றையும் செவியேற்கின்ற, யாவற்றையும அறிந்த அல்லாஹ்விடம் எறியப்பட்ட ஷைத்தானை விட்டு பாதுகாப்புத் தேடுகின்றேன். ஆதாரம்: وَإِمَّا …
Read More »நூல்கள்
ஹிஜாப் – தெளிவை நோக்கி
கடந்த காலங்களில் BBS அமைப்பு முஸ்லிம் சமூகத்திற்குப் பெரும் தலையிடியாக இருந்தது. முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவதை ஒரு பெரும் பிரச்சினையாக சித்தரிக்க அவர்கள் முற்பட்டனர். அவர்களது பிரச்சாரம் முஸ்லிம்களின் மனதில் பலத்த குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. தற்போது அவர்கள் ஓரளவு அடங்கிப் போனாலும் அவர்கள் முன்னெடுத்த பிரச்சினைகளை இன்று நம்மவர்கள் தமக்குள்ளேயே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒன்றுதான் பெண்கள் முகத்தை மூடுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலையும் தவறான …
Read More »பைபிளில் முஹம்மத் (ஸல்) – 03
முஹம்மத்(ச) அவர்கள் பற்றி பைபிளில் வந்துள்ள முன்னறிவிப்புக்களில் ஒன்றை கடந்த இரண்டு இதழ்களில் பார்த்துள்ளோம். அடுத்த பகுதிக்குச் செல்வதற்கு முன்னர் அடிப்படையான சில உண்மைகளை இங்கு சுட்டிக் காட்டுவது அவசியமெனக் கருதுகின்றேன். 01. மூடலானது: பொதுவாக முன்னறிவிப்புக்கள் மூடலாகத்தான் இருக்கும். அதில் சொல்லப்பட்ட விடயங்களை வைத்து நிதானமாக நோக்கும் போதே அதன் உண்மைத் தன்மை உறுதியாகும். இந்த அடிப்படையில் முன்னறிவிப்புக்கள் மிக மிகத் தெளிவாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் …
Read More »அல்குர்ஆன் விளக்கக் குறிப்புகள்
தடம் புரளும் உள்ளங்கள் ‘எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புறளச் செய்து விடாதே! மேலும், உன்னிட மிருந்து அருளை எமக்கு வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய்.’ (3:8) முதஷாபிஹத்தான வசனங்களை வைத்து உள்ளத்தில் குழப்பமுள்ளவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்று எச்சரிக்கை செய்த பின்னர் இந்த துஆவை அல்லாஹ் எமக்குக் கற்றுத் தருகின்றான். நேர்வழி என்பது அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது. உள்ளத்தில் நோய் …
Read More »நாற்பது வயதில் புரியும்..
‘மனிதன் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென, நாம் உபதேசித்தோம். அவனை அவனது தாய் சிரமத்துடனே சுமந்து, சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுத்தாள். அவனை(க் கர்ப்பத்தில்) சுமப்பதும், அவனுக்குப் பால் குடியை மறக்கடிக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும் போது, ‘என் இரட்சகனே! நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடை களுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் …
Read More »சூழ்ச்சி-01 :- பாவங்களையும் தீமைகளையும் அலங்கரித்துக்காட்டுதல்
ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் (புதிய தொடர்) நமது பகிரங்க விரோதியான ஷைத்தானின் சூழ்ச்சிகளை இனங்கண்டு அதிலிருந்து நாம் முழுமையாக விடுபடுவதற்கே இத்தொடர். அல்குர்ஆன், ஸுன்னா அடையாளப்படுத்தும் ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும். அவன் ஒவ்வொரு நொடியும் நமக்கு எதிரியே, நமது உடலிளிருந்து இறுதி மூச்சுகள் பிரியும் வரை அவனது சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவனது சூழச்சிகளை இனங்காணவில்லை யென்றால் நமது ஈருலக வாழ்வும் அழிந்து விடும். சந்தர்பம் …
Read More »எதிர்ப்புணர்வுகளுக்கு எண்ணெய் வார்க்கும் எம்மவர்கள்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – முஸ்லிம் சமூகத்தை சீண்டிப் பார்ப்பதற்காகவும் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிகளைக் கக்குவதற்காகவும் இஸ்லாமிய விரோத சக்திகள் காலத்துக்குக் காலம் சில பிரச்சினைகளைத் தூக்கிப் பிடிப்பதுண்டு! அதில் ஒன்றுதான் பொது சிவில் சட்டம் எனும் கோஷமாகும். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இனவாத, மதவாத சிந்தனைப் போக்குடைய PJP …
Read More »பைபிளில் முஹம்மத் (ஸல்) – 02
தொடர் – 02 மூஸாவைப் போன்ற தூதர்: மூஸாவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வருவார் என பைபிள் கூறுகின்றது. முன்னறிவிக்கப்பட்ட அந்தத் தூதர் இயேசுதான் என கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆனால், இஸ்ரவேல் சமூகத்தில் மோஸேவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வந்ததில்லை என பைபிளே கூறுகின்றது. அதே வேளை முஹம்மத் நபியை அல் குர்ஆன் மூஸா நபிக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றது. குறித்த முன்னறிவிப்புக்குப் பொருத்தமானவர் முஹம்மத் நபியா? அல்லது இயேசுவா? இருவரில் …
Read More »பிக்ஹுல் இஸ்லாம் தொடர் – 19 – தஹிய்யதுல் மஸ்ஜித்
பள்ளிக்குள் நுழைபவர் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தஹிய்யதுல் மஸ்ஜித் (மஸ்ஜித் காணிக்கைத் தொழுகை) தொழுவது சுன்னத்தாகும். ‘உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத்துக்கள் தொழும் வரை அமர வேண்டாம்’ என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: கதாதா இப்னு ரபீஃ(வ) ஆதாரம்: புஹாரி (444), இப்னு குஸைமா(1827), இப்னுமாஜா (1012) பள்ளிக்குள் நுழைந்தவர் அதில் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என இந்த ஹதீஸ் …
Read More »அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் – சூறா ஆலு இம்றான் தொடர் – 02
அல்லாஹ் மட்டும் அறிவான் முதஷாபிஹத்தான ஆயத்துக்களின் விளக்கத்தையும் இறுதி முடிவையும் அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று பொருள் செய்வதுதான் பொருத்தமானது என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம். அதற்கு மாற்றமாக பொருள் செய்யும் போது அனைத்தும் எமது இறைவனிடம் இருந்தே வந்தன என அல்லாஹ்வும் அறிவுடையோரும் கூறுவார்கள் என அர்த்தம் செய்ய நேரிடும். இது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என்பதைக் கண்டோம். முஹ்கம், முதஷாபிஹாத் இரண்டுமே ஒன்றுபோன்றது என்றால் அல்லாஹ் இரண்டையும் வேறுபடுத்திக் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library