Featured Posts
Home » 2004 (page 3)

Yearly Archives: 2004

தவறான புரிதலுக்கு தக்க பதில்.

சகோதரர் நேசகுமார், விமர்சிக்கும் நோக்கத்தில் இஸ்லாத்தின் மீது சில குற்றச்சாட்டுக்களை வீசியிருக்கிறார். அவற்றிற்கான விளக்கத்தை பார்ப்பதற்கு முன் அனைத்து முஸ்லிம் சகோதரர்களையும் அழைத்து அவர் குறிப்பிட விரும்புவது இதுதான்… //இங்கு நான் சலாஹீதீன் மற்றும் அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கு குறிப்பிட விரும்புவது இதுதான். இஸ்லாத்தின் தத்துவக் கொள்கைகளுள் ஒன்று, முகமது நபி அவர்கள் ஏனைய மனிதர்களைப் போன்றவர்தாம் என்பது. அவர் கடவுள் அல்ல. அவர் தப்பே செய்யாதவர் அல்ல. அவர் …

Read More »

4] கி.பி.

நிலமெல்லாம் ரத்தம் 4 – பா.ரா யூதர்களின் சரித்திரத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மிக முக்கியமானதொரு நிகழ்ச்சி. மோஸஸுக்குப் பிறகு இன்னுமொரு தேவதூதனின் வரவு அவர்களுக்கு நியாயமாக மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், யூத குலத்தின் அடையாளமே ‘தேவதூதனுக்காகக் காத்திருக்கும் குலம்’ என்பதுதான். ஆனால் இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை. பெத்லஹெமில் (Bethlehem) இயேசு …

Read More »

முஹம்மது நபியைப் பின்பற்றுவதற்கான இறை வழிகாட்டல்

அல்லாஹ் கூறுகிறான். (நபியே) கூறும், நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்… (அல்குர்ஆன் 3:31) மனிதன் இறைவனை நேசிப்பதற்கும், இறைவன் மனிதனை நேசிப்பதற்கும் அளவுகோல் முஹம்மது நபியைப் பின்பற்றுவதுதான் என்பதே இறைவனின் வழிகாட்டல். இனி… நபி மனிதத்தன்மைக்கும் அப்பாற்பட்டவரா? நபி தன்னைக்கடவுளாக வணங்க கட்டளையிட்டிருக்கிறாரா? அடுத்த பதிப்பில் இவற்றைப்பார்ப்போம். சகோதரர் நேசகுமாரிடம் ஒரு வேண்டுகோள். நபியின் மனைவியரில் ஒருவரான அன்னை ஸஃபியாவின் வரலாற்றை கண்டு அதிர்ச்சியுற்றதாக …

Read More »

முஹம்மது நபியை நேசித்தல்

விஷயத்துக்கு வருவோம். ஸலாஹுத்தீன் எழுதிய விமர்சனம் பற்றி சகோதரர் நேசகுமார் எழுதியவற்றிலிருந்து, முஹம்மது நபியையும், நபியின் மனைவிமார்களையும், கண்ணியமாக எழுதுங்கள் என்று கேட்டக்கொண்டிருக்கிறார் என்று விளங்க முடிகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் முஹம்மது நபியை தன் உயிரினும் மேலாக மதிக்க வேண்டும் என்றே இஸ்லாம் கட்டளையிடுகிறது. அல்லாஹ் கூறுகிறான். (நபியே) கூறும், உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் …

Read More »

இஸ்லாத்தின் மீதான விமர்சன, விளக்கம்

அன்பின் தமிழ் சகோதரர்களுக்கு. உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டும். இஸ்லாம் ஓர் முழு அறிமுகம் என்ற தலைப்பில் ‘இஸ்லாம் பற்றிய எதிர்மறை விவாதங்கள், கருத்துக்கள். என சகோதரர் நேசகுமார் தனது விமர்சனங்களை இஸ்லாத்தின் மீது பதித்திருக்கிறார். இதுவரை இஸ்லாம் முழுமையாக அறிமுகப்படுத்தப்படவில்லையோ? என்ற சந்தேகம் அவரின் தலைப்பில் தொக்கியிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆரோக்கியமான விமர்சனங்களை இஸ்லாம் வரவேற்று, தக்க விளக்கங்களையும் வழங்கியே வந்திருக்கிறது. சகோதரர் …

Read More »

3] யூதர்கள்

நிலமெல்லாம் ரத்தம் 3 – பா.ரா அது, 44வது வருடம். அதாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய நாற்பத்து நான்காவது வருடம். ஜெருசலேம் நகரிலிருந்த நீதி மன்றத்துக்கு ஒரு வழக்கு வந்திருந்தது. நீதிமன்றம் என்றால் அரசின் நீதிமன்றம் அல்ல. அது யூத மதகுருக்களின் நீதிமன்றம். மன்னர்களைக் காட்டிலும் அன்றைக்கு அவர்களுக்குத்தான் அதிகாரம் இருந்தது. மத குருக்கள் ஒரு தீர்ப்புச் சொல்லிவிட்டார்கள் என்றால் மன்னரேகூட அதனை மாற்றுவது சிரமம். காரணம், மக்கள் மன்னர்களை …

Read More »

2] ஆப்ரஹாம் முதல்

நிலமெல்லாம் ரத்தம் 2 – பா.ரா அந்தப் பெரியவருக்கு வயது எண்பத்தைந்து. நிறைவாழ்வு வாழ்ந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஒரு குறை இருந்தது. அவருக்குக் குழந்தை இல்லை. அவரது மனைவிக்கும் இது சம்பந்தமாக வருத்தம்தான். ஆனால் வருந்தி என்ன பயன்? அப்படித்தான் விதித்திருக்கிறது போலிருக்கிறது என்று பெரியவர் நினைத்தார். ஆனால் அவர் மனைவிக்கு மட்டும் ஒரு யோசனை. ஒருவேளை பிரச்னை தன்னிடம்தான் இருக்குமோ? தன்பொருட்டுத் தன் கணவர் எதற்காக போகிற …

Read More »

1] அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்

நிலமெல்லாம் ரத்தம் – பா.ரா 1 ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டதாகக் கருதி, விம்மியழுதது வியப்பு. இரங்கல் தெரிவித்த நாடுகளெல்லாம் உள்ளார்ந்த துக்கத்தை வடிக்கச் சொற்கள் போதாமல் என்னென்னவோ சொல்லிப் புலம்பியது வியப்பு. படித்தவர்கள், பாமரர்கள், அறிவுஜீவிகள், உழைப்பாளிகள், சிந்தனையாளர்கள், சோம்பேறிகள், …

Read More »

நிலமெல்லாம் ரத்தம் தொடர் – எரியும் பிரச்னையின் புரியம் வடிவம் – Index

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை குறித்து யூத, கிருஸ்துவ, முஸ்லிமல்லாத ஒருவருடைய ஆய்வு. தனது ஆய்வுக்கு இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களையும் விட்டுவைக்கவில்லை, விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியத்தை அறிந்துக்கொள்வதற்காக. எழுத்துக்கள் பலவகை உண்டு. ஏன்தான் படிக்கத் தொடங்கினோமோ என்று நினைக்கக்கூடியது. மற்றொன்று தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை அவ்வெழுத்துகளோடு ஐக்கியப்படுத்திவிடுவது. இதில் இரண்டாம் வகைதான் பா.ராகவனின் எழுத்துக்கள். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வருவதை சேமிப்பதில் எனக்கு முன்னோடி, நண்பர் கிருஸ்டோபர் ஜான் அவர்கள். …

Read More »

அன்புக்குறியவர்களே! நீங்கள் சிந்தித்தது உண்டா?

கலாச்சார நிலையம் ஏற்பாடு செய்திருந்த மதினா பயணத்தில், ஒவ்வொருவரும் அடுத்தவரிடம் பகிர்ந்துக்கொள்வதற்காக சில விஷயங்களை எடுத்து வந்திருந்தார்கள். நான் இஸ்லாம் சம்பந்தமான சில கவிதைகளை எடுத்துவந்திருந்தேன். சிலர் திண்பண்டங்கள் எடுத்துவந்திருந்தனர். என் நண்பரின் மாமனார் அவரும் படிப்பதற்கு சிலவற்றை எடுத்துவந்திருந்தார். நான் கவிதை தொகுப்புகளை அவரிடம் நீட்டியபோது பதிலுக்கு ஒரு பிரசுரத்தை என்னிடம் நீட்டினார். அதில் புகைத்தலுக்கு எதிரான எச்சரிக்கைகள் இடம்பெற்றிருந்தது. வெளியீடு: குளச்சல் ஏ.என். மீரான், ஜித்தா என்றிருந்தது. …

Read More »