Featured Posts
Home » 2009 (page 4)

Yearly Archives: 2009

நபிவழியில் நம் ஹஜ்

“பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் முன்னுரை மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் விருந்தினர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு எல்லாப்புகழும் ஏக வல்லவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே! அவனுடைய அன்பும் அருளும் உலகத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட நம் உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின் தொடந்த தாபியீன்கள், நல்லடியார்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

Read More »

[பாகம்-5] முஸ்லிமின் வழிமுறை.

அதிகாரம் வகிப்பவர்கள். ஒரு முஸ்லிம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதை கடமை என்று கருத வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். மேலும் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் (கீழ்ப்படியுங்கள்) (அல்குர்ஆன்: 4:56) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அதிகாரம் உடையவர்களுக்கு) நீங்கள் செவிசாயுங்கள்; கட்டுப்படுங்கள். உலர்ந்த திராட்சையைப் போன்ற தலையுடைய ஒரு நீக்ரோ அடிமை உங்களுக்குத் தலைவரானாலும் சரியே. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) …

Read More »

நற்பண்புகள்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (துல்-கஃஅதா – 1430) வழங்குபவர்: K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அழைப்பாளர், அல்கோபர் தஃவா நிலையம் நாள்: 23-10-2009 இடம்: தஃவா நிலையம் (பள்ளி வளாகம்) வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ் பிரிவு)

Read More »

துல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்

நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இறைவனின் இக்கட்டளையை நிறைவேற்ற முற்பட்டபோது அல்லாஹ் அதனைத் தடுத்து ஓர் ஆட்டைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இவர்களின் இந்தத் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் மற்றவர்களும் ஈதுல் அழ்ஹா தினத்தில் பிராணியைப் பலியிட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்குர்ஆனில் பின்வருமாறு இந்த விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

Read More »

ஹஜ்-உம்ரா பெண்களுக்கான சட்டங்கள்

ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமை நிறைவேற்றப்படுவது இஸ்லாமிய உம்மாவின் மீது விதியாக்கப்பட்ட கடமையாகும். உம்மத்தின் அங்கத்தவனான வசதி படைத்த ஒரு முஸ்லிம், ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ்ஜை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளான். இஸ்லாத்தின் அர்கான்கான்களில் ஒன்றான ‘ஹஜ்’ கிரிகை பெண்களுக்கான ‘ஜிஹாத்’ என்ற அந்தஸ்துப் பெற்றதொரு கடமையாக இருக்கின்றது.

Read More »

உஷார்! உஷார்!! இன்னும் இவர்களை நம்ப வேண்டுமா? எச்சரிக்கை!!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் சமுதாய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுககு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!’ (அல்அஹ்ஸாப் : 70) உணர்வு வார இதழின் உரிமை 14 குரல் 9, 8-ம் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் எங்களது நாச்சியார்கோயில் திருநரையூர் உமர் (தவ்ஹீத்) பள்ளிவாசல் நிர்வாகிகளான ஜாஃபர் அலி மற்றும் ஒலி முஹம்மது ஆகியோர் குறித்து வெளியான செய்திகள் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

Read More »

இஸ்லாமும் பாடல்களும்

மனிதன் உலகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு,  சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியையும் வழங்கி இருக்கின்றது. அதில் ஒன்றுதான் பாடல்களை கேட்டு ரசிப்பது. இஸ்லாத்தில்   பாடல்கள் கேட்பதற்கு எந்த தடையுமில்லை, ஆனால் பாடல்கள் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று ஷிர்க்கில்லாத பாடலாக இருக்க வேண்டும், இரண்டாவது தவறான கருத்துக்களில்லாத பாடலாக இருக்க வேண்டும். மூன்றாவது இசை இல்லாத பாடலாக இருக்க வேண்டும்.

Read More »

[பாகம்-4] முஸ்லிமின் வழிமுறை.

காரிகள், ஃபிக்ஹ், ஹதீஸ் கலை வல்லுனர்கள். ஒரு முஸ்லிம் அவர்களை நேசிக்க வேண்டும். அவர்களுக்காக அருளை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் சிறப்பை ஒப்புக் கொள்ள வேண்டும். அவர்களைப் பற்றி நல்லதையே கூற வேண்டும். அவர்களைப் பற்றி குறை கூறவோ தப்பபிப்ராயம் கொள்ளவோ கூடாது. திண்ணமாக அவர்கள் அல்லாஹ்வுக்காகவே தூய உள்ளத்தோடு (குர்ஆன், ஹதீஸை) ஆய்வு செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்குப் பின் …

Read More »

பதிவிறக்கம்: தஃப்ஸீர் மற்றும் அரபி அணி இலக்கணம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..), ஷேக் ரஹ்மத்துல்லா இம்தாதி அவர்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் குர்ஆனை புரிந்து படிப்பதற்கான வகுப்புக்குரிய பாடங்கள் அனைத்துப் பாடங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு தஃப்ஸீர் ஒரு பாடமாகவும், அரபி அணி இலக்கணம் (ஸர்ஃப்) ஒரு பாடமாகவும் இத்துடன் pdf கோப்புகளாக இணைக்கப்பட்டுள்ளன. இவைகளை மற்றவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் கிடைக்கும்படி முயற்சி செய்யுங்கள்.

Read More »

[தொடர் 18] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

கப்று வணக்கத்தை நியாயப் படுத்துகின்றவர்களின் வாதங்களும் அவற்றிற்கான மறுப்பும்: வாதம் 6: உத்தம நபியின் மண்ணறையில் மன்றாடிய ‘உத்பி’ என்ற கிராம வாசிக்கு மன்னிப்புக் கிடைத்ததாக ‘இப்னு கஸீர்’ என்ற தப்ஸீருடைய இமாம் கூறி இருக்கிறார்களே! அவரை விட நீங்கள் பெரிய அறிஞரா? பதில்: மண்ணறையில் அடங்கப்பட்டவர்களிடம் மன்றாடுவது கூடும் என நியாயப்படுத்துவோர் இந்த உத்பி என்ற விலாசமற்ற கிராமப்புற ஒரு மனிதன் பேரில் புனையப்பட்ட சம்வத்தையும் ஆதாரமாகக் கொள்வது …

Read More »