Featured Posts
Home » Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான் (page 77)

Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்

ஸுப்ஹுத் தொழுகையில் சப்தமாக ஓதுதல்..

259– நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் உக்காழ் எனும் சந்தையை நோக்கி புறப்பட்டனர். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கு வானுலகச் செய்திகள் தெரிவது தடுக்கப் பட்டுவிட்டது. (ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் எறியப்பட்டன. (ஒட்டுக் கேட்க சென்ற) ஷைத்தான்கள் தம் தலைவர்கள் இடம் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) திரும்பிய போது உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். வானத்துச் செய்திகள் எங்களுக்கு தடுக்கப் பட்டுவிட்டன. எங்கள் மீது …

Read More »

குர்ஆனை செவி தாழ்த்தி கேட்டல்..

257– (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டு வரும்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் நாவையும், இரண்டு உதடுகளையும் (எங்கே மறந்து விடப்போகிறதோ என்ற அச்சத்தினால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் வதனத்திலேயே காணப்படலாயிற்று. எனவே, அல்லாஹ், ‘லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா” என்று தொடங்கும் (75 வது அத்தியாயத்திலுள்ள) ‘இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர …

Read More »

தொழுகையில் குரலை உயர்த்துதல் பற்றி..

256. (நபியே!) உங்கள் தொழுகையில் நீங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம். எனும் (17:110ஆவது) இறைவசனம் (பின்வரும் சூழ்நிலையில்) அருளப்பெற்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுதுகொண்டு) இருந்தார்கள். (அவ்வாறு தோழர்களுடன் சேர்ந்து தொழும்போது) குரலை உயர்த்(திக் குர்ஆனை ஒ)துவார்கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிடும்போது குர்ஆனையும் அதை அருளிய(இறை)வனையும் அதை (மக்கள் முன்) …

Read More »

பள்ளிக்கு வரும் பெண்கள்!

253- உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி- 5238: இப்னு உமர் (ரலி) 254- உமர் (ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமா அத்தாகத் தொழச் செல்வார். அவரிடம்(உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. …

Read More »

ஜமாஅத்தில் தொழும் பெண்கள் ஆண்களை முந்தலாகாது..

252- சில ஆண்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தனர்;. அவர்கள் சிறுவர்களைப் போன்று தங்களுடைய (சிறிய) வேஷ்டியை. தங்களுடைய கழுத்திலிருந்தே கட்டியிருந்தனர் (இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஆண்களின் பின்னால் தொழுத பெண்களிடத்தில் ஆண்கள் ஸுஜூதிலிருந்து எழுந்து அமர்வதுவரை நீங்கள் உங்களுடைய தலைகளை ஸுஜூதிலிருந்து உயர்த்தவேண்டாம் என்று கூறினார்கள். புகாரி-362:ஸஹ்ல் பின் ஸஅது (ரலி)

Read More »

ஜமாஅத் தொழுகையில் வரிசையைச் சீராக்குதல்..

248- வரிசையை ஒழுங்குப் படுத்துங்கள்! வரிசைகளை ஒழுங்குப் படுத்துவது தொழுகையை நிலைப் பெறச் செய்வதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி-723: அனஸ் (ரலி) 249- தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் எங்கள் பக்கம் முன்னோக்கி, வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முகத்துக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காணுகிறேன் எனக் கூறினார்கள். புஹாரி-719: அனஸ் (ரலி) 250- உங்களது வரிசைகளை நேராக அமைத்துக் …

Read More »

இமாமை முந்துதல் கூடாது..

247- உங்களில் ஒருவர் தொழுகயில் இமாமை முந்தித் தமது தலையை உயர்த்துவதால் அவருடைய தலையை கழுதையுடைய தலையாகவோ அல்லது அவருடைய உருவத்தை கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்சவேண்டாமா? என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி-691: அபூஹூரைரா (ரலி)

Read More »

தொழுகையில் பேணுதல்..

245- நான் கிப்லாத் திசையில் மட்டும் பார்க்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் அடக்கமாக இருப்பதும் உங்களின் ருகூவும் எனக்குத் தெரியாமலிருப்பதில்லை. நிச்சயமாக எனது முதுகுக்குப் பின்புறம் உங்களை நான் பார்க்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-418:அபூஹுரைரா (ரலி) 246- அல்லாஹ்வின் மேல் ஆணையாக ருகூவையும் ஸஜ்தாவையும் ஒழுங்காகச் செய்யுங்கள்! நான் எனக்குப் பின்புறமாக-அல்லது என் முதுகுக்குப் பின்- நீங்கள் ருகூவு செய்யும் …

Read More »

தஸ்பீஹ் கூறுதலும் கை தட்டுதலும்..

244- தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்கு உரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-1203: அபூஹூரைரா (ரலி)

Read More »

இமாம் தொழுகைக்கு வரப்பிந்தினால்…

243- அம்ர் பின் அவ்ப் குடும்பத்தாரிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் சென்றிருந்த போது, அங்கு தொழுகையின் நேரம் வந்து விட்டது. அப்போது முஅத்தின், அபூபக்ர்(ரலி) இடம் சென்று, நான் இகாமத் சொல்லட்டுமா? நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அபூபக்ர்(ரலி) ஆம்! என்று கூறிவிட்டுத் தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுதுக் கொண்டிருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் வரிசைகளை விலக்கிக் கொண்டு …

Read More »