மறுமையில் பாவிகளின் நிலை ? சென்ற முதலாவது தொடரில் உலகம் அழியும் போது இந்த உலகத்தின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும், எடுத்துக் காட்டியிருந்தேன். இப்போது உலகம் மையானமாக காட்சி தரும் வேலையில் சூர் (எக்காளம்) ஊதப்படும். அப்போது மீண்டும் விசாரணைக்காக மண்ணறையிலிருந்து மக்கள் எழுப்பப்படும் காட்சிகளை குர்ஆனும் ஹதீஸூம் நமக்கு காட்சிப் படுத்துவதை தொடர்ந்து அவதானிப்போம். சூர் ஊதப்படல்… இந்த உலகத்தை முற்றிலும் அழிக்கப்படுவதற்கு முன் …
Read More »ஷைய்க் யூனுஸ் தப்ரீஸ்
நபியின் மீது எப்படி நேசம் வைப்பது?
– யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இந்த உலகத்தில் நேசம் வைப்பதற்கு தகுதியான முதன்மையானவர் நபி (ஸல்) அவர்கள் ஆகும்.தனது தாய், தந்தை, ஏனைய அனைவர்களை விடவும், உலகத்தில் உள்ள அனைத்து படைப்புகளை விடவும் நபியவர்கள் மீது நேசம் வைக்க வேண்டும். ஒரு நபித் தோழர், யா ரஸூலுல்லாஹ் ! மறுமை நாள் எப்போது வரும் என்று நபியிடம் கேட்ட போது, அந்த மறுமைக்கு என்ன தயார் பண்ணி …
Read More »விளக்கு ஏற்றுவது இணைவைப்பா?
அந்நியர்கள் ஒரு விசேசமான நிகழ்ச்சியை செய்யும் போது, அந்த நிகழ்ச்சி சிறந்ததாக அமைய வேண்டும் என்றடிப்படையில் மங்கள விளக்கு என்று சொல்லக் கூடிய குத்து விளக்கை ஏற்றுவார்கள். அப்படியான குத்து விளக்கு ஏற்றும் வைபவத்தில் ஒரு சில முஸ்லிம்களும் கலந்து, அவர்களுடன் சேர்ந்து குத்து விளக்கை பற்ற வைக்கலாமா என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விடை காண்போம். ஜாஹிலிய்யா காலம் என்று சொல்லக் கூடிய அறியாமை காலத்தில் பல நூறு …
Read More »மொட்டை அடிப்பது சுன்னத்தா?
நபியவர்களின் வழி முறைகளை நாம் பின் பற்ற வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு கட்டளை இடுகிறான். அதே போல் என்னால் காட்டித் தரப்பட்ட அமல்களை நீங்கள் நடை முறைப் படுத்துங்கள் என்று நபியவர்கள் நமக்கு தெளிவாக கூறியுள்ளார்கள். அமல் ரீதியாக நாம் எதை செய்தாலும் நபியவர்கள் செய்ததை, அப்படியே செய்வது தான் மிகவும் ஏற்றதாகும். அதை மட்டும் தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். அது இல்லாமல் மக்களால் நல்லது என்றடிப்படையில் …
Read More »உலக அழிவும், மறுமை விசாரணையும்… [01]
இந்த உலகத்தைப் படைத்த அல்லாஹ் உலக அழிவுக்கு என்று ஒரு நாளை ஏற்ப்படுத்தியுள்ளான். அந்த குறிப்பிட்ட நாள் வந்து விட்டால், இந்த உலகம் முற்றாக அழிக்கப்பட்டு விடும். அதன் பிறகு மறுமை விசாரணை நாள் உண்டாகும். இந்த உலகம் எப்போது அழியும் என்பதில் விஞ்ஞானம் துறைச் சார்ந்தவர்களுக்கு மத்தியில் பல கருத்துகள் காலத்துக்கு காலம் முன் வைக்கப்பட்டாலும்,அவைகள் உறுதியான செய்திகள் அல்ல என்பதை காலம் நிரூபித்து வருகிறது. நபியவர்கள் மறுமை …
Read More »ஈமானில் உறுதி வேண்டும்…
ஒவ்வொரு மனிதனும் தான் கொண்ட கொள்கையில் ஆழமான நமபிக்கை, உறுதியோடு இருக்க வேண்டும். கொள்கை உறுதியும், அமல்களில் தெளிவும், இந்த இரண்டும் நம்மை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கி வைக்கும் களமாக உள்ளது. கொள்கையில் உறுதியாக இருந்து, அமல்களில் தெளிவில்லாமல் அமல்கள் செய்தாலும், அல்லது அமல்களில் தெளிவிருந்து, கொள்கையில் உறுதியில்லை என்றால் நமது முடிவு மோசமாக அமைந்து விடும். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் அவசியம் போல, நாம் மறுமையில் வெற்றி …
Read More »ஹிஜ்ரத்தின் போது நடந்த சில சம்பவங்கள்…
நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் தப்பிச் சென்று விட்டார்கள் என்ற செய்தி மக்கமா நகர் முழுவதும் பரவியவுடன் முஹம்மதையோ அல்லது அபூ பக்கரையோ, உயிருடனோ அல்லது கொலை செய்தோ இங்கு கொண்டு வந்தால் இவ்விருவரில் ஒவ்வொரு தலைக்கும் நூறு ஒட்டகங்கள் அன்பளிப்பாக வழங்கப்படும் என்ற அறிப்பு எதிரிகளால் செய்த உடன் அதற்காக மக்கள் பல பகுதிகளில் தேட ஆரம்பிக்கிறார்கள். சுராக்கா இப்னு மாலிகின் பேராசை… எப்படியாவது நபியவர்களையும், அபூபக்கரையும் பிடித்து …
Read More »ஹிஜ்ரத்தின் நோக்கமும் படிப்பினைகளும்…
முஹர்ரம் மாதம் வந்து விட்டால், நபியவர்களின் ஹிஜ்ரத்தைப்பற்றி பல ரீதியான செய்திகளை தொடராக பேசி வருவார்கள். நபியவர்களின் வரலாறுகள் அடிக்கடி பேசப்பட வேண்டும். அந்த வரலாறுகளில் சொல்லப்பட்ட சான்றுகளை படிப்பினையாக நாம் வாழ்க்கையில் எடுத்து நடக்க வேண்டும். அந்த வரிசையில் இந்த ஹிஜ்ரத் ஏன் நடைப் பெற்றது, அந்த ஹிஜ்ரத்தின் மூலம் நபியவர்கள் நமக்கு என்ன பாடங்களை சொல்லித் தருகிறார்கள், என்பதை தொடர்ந்து அவதானிப்போம். நபியவர்களின் ஹிஜ்ரத்தை கொச்சைப்படுத்த வேண்டும் …
Read More »யஃஜூஜ் – மஃஜூஜ் கூட்டம் வரும் நாள்…!
அல்லாஹ் இந்த உலகத்தில் பல கோடி படைப்புகளைப் படைத்து, அந்த படைப்புகளை காலத்திற்கும், நேரத்திற்கும், ஏற்ப அல்லாஹ் வெளியாக்கிக் கொண்டிருக்கிறான். அல்லாஹ்வால் படைக்கப்பட்டு மறைக்கப்பட்ட படைப்புகளில் முக்கியமானதொரு படைப்பு தான் இந்த யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டமாகும். இந்த யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டங்கள் எங்குள்ளார்கள்? இவர்களை நேரடியாக கண்டவர்கள் யார்? இவர்கள் எப்போது வெளி வருவார்கள் என்பதை குர்ஆன், ஹதீஸிலிருந்து தெளிவுப் படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யார் இந்த துல்கர்னைன்… துல்கர்னைன் என்றால் இரண்டு கொம்புக்காரர் அல்லது இரட்டை மணிமுடியார் …
Read More »பிறர் மானத்தில் கை வைக்காதீர்கள்.. .. ..!
அல்லாஹ் மனிதர்களை பல பாவங்களுக்கு மத்தியில் படைத்துள்ளான். மனிதன் பாவம் செய்து விட்டால் அதற்கான பரிகாரமான தவ்பாவையும் ஏற்பாடு செய்து, மனிதன் தான் செய்த பாவத்தை எண்ணி, மனம் வருந்தி படைத்தவனிடம் மன்றாட வேண்டும் என்பதை அல்லாஹ் நமக்கு அழகான முறையில் வழிக் காட்டியுள்ளான். பாவத்தை இஸ்லாம் இரண்டாக பிரிக்கிறது. முதலாவது மனிதன் அல்லாஹ்விற்கு செய்யும் பாவங்கள். இரண்டாவது மனிதன் மனிதனுக்கு செய்யும் பாவங்களாகும். முதலாவது பாவமான மனிதன் அல்லாஹ்விற்கு …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library