Featured Posts

பொதுவானவை

பர்தாவும் பைபிளும்

சிலவருடங்களுக்கு முன் இலண்டனில் இஸ்லாத்தில் இணைந்த சகோதரிகளிடம் பிரபல ஊடக நிருபர், “நேற்றுவரை உங்களின் உணவுப் பழக்கம், நண்பர்கள், உறவுகள் அப்படியே இருக்கின்றன; இஸ்லாத்தில் இணைந்த பிறகு ஏன் உடையில் மட்டும் மாற்றம் ஏற்பட்டது? என்றார். அதற்கு அவர்கள், இவ்வுடையில் எங்களின் தனித் தன்மை பாதுகாக்கப் படுவதாக உணர்கிறோம்” என்றார்கள். அதேபோல்,நாகர்கோவில் பகுதியில் நடந்த பெண்ணியக் கருத்தரங்கில் பேசிய பெண் பேச்சாளர் ஒருவர், “இஸ்லாம் பெண்களை பர்தா போட்டு அடிமைப்படுத்துகிறது. …

Read More »

ஆபாசம் Vs. அமெரிக்கா

அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்யவிருந்த ஒருதாய், தன் குழந்தைக்கு பாலூட்டிய போது, விமானப் பணிப்பெண் ஒரு சால்வையைக் கொடுத்து மார்பை மறைத்துக் கொண்டு பாலூட்டச் சொன்னாராம். பொது இடத்தில் குழந்தைக்கு பாலூட்டும் உரிமையை யாரும் தடுக்க முடியாது என்று அத்தாய் மறுத்துவிட்டதால், பொது இடத்தில் ஆபாசமாக நடந்ததாகக் கூறி விமானத்திலிருந்து குடும்பத்துடன் இறக்கி விடப்பட்டிருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த இச்சம்பவத்தை பாதிக்கப்பட்ட பெண் பெண்ணுரிமை அமைப்புகளிடம் எடுத்துச்சென்று சம்பந்தப்பட்ட …

Read More »

மலம், மூத்திரம், நேசகுமார், கார்ட்டூன்

இந்தப் பதிவிற்கு கொஞ்சம் நாகரிகமாகத் தலைப்பிடத்தான் நினைத்தேன். ஆனால், தமிழிணையத்திலும் வலைப்பூக்களிலும் சாமான்யர் வேடமிட்டு ஏமாற்றி வந்த நேசகுமார் என்ற புனைவு(ச்சுருட்டு) நபரின் வேஷம் கலைக்கப்பட்டு விட்டதால் நிதானமிழந்து, தன்மீதான புனித பிம்பம் தகர்க்கப் பட்டால் தன்னால் எவ்வளவு தாழ்நிலைக்கும் இறங்க முடியும் என நிரூபித்து , தன் பதிவில் அநாகரிகப் பின்னூட்டங்களை அனுமதித்து, சபைநாகரிகம் மீறிய அவரின் போக்கால், அத்தகைய எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் . சென்ற வருடம், …

Read More »

வளைகுடாவில் மலம் அள்ளியவர்கள்

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் அயல்நாட்டவர்களில் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களில் பலர் தங்கள் தகுதிக்கு குறைவான சம்பளத்தைப் பெற்று வருகிறார்கள். பெரும்பாலான நாடுகளில் ஆசியர்களின் நிலை கிட்டத்தட்ட இந்த அவலநிலையிலேயே நீடிக்கிறது. அரபு நாடுகளில் நம்மவர்களுக்கு இழிநிலை தொடர்வதற்கு முக்கியக் காரணம், அங்குள்ள நம் இந்தியத் தூதரகங்களின் ஊழலும், ஊழியர்களின் அலட்சியமும் என்பதை நீண்டகாலம் அந்நாடுகளில் இருப்பவர்கள் அறிவார்கள். சவூதி அரேபியா தவிர மற்ற …

Read More »

வீடியோ பதிவு: குழலினிதா யாழினிதா?

20:113 மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம். அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்.

Read More »

சதாம் ஹுசைன் – ஒரு நிகழ்கால படிப்பினை

இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனை சாகும்வரை தூக்கிலிட இராக் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பேரழிவு ஆயுதங்களை வைத்துள்ளார் என்ற போலிக் காரணம் சொல்லி அராஜகமாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ள இராக்கில் அமெரிக்காவின் எடுபிடி அரசின் கீழுள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. அதுவும் அமெரிக்க உட்கட்சி தேர்தலுக்கு இரண்டு நாள் முன்னதாக பெறப்பட்டிருப்பதின் நோக்கம் தெளிவாகும். சர்வாதிகாரி, கொடுங்கோலன் போன்ற பட்டங்களைப் பெற்றுள்ள சதாம் ஹுசைன் 1991 ஆம் ஆண்டுவரை …

Read More »

நாட்டு நடப்பு

பதிவெழுதி ரொம்ப நாளாச்சு! இணையத்தில் மேய்ந்ததில் கிடைத்ததை பகிர்ந்து கொள்கிறேன். முழக்கம் # 1: பர்தா – ஆணாதிக்க அடக்குமுறை! நாட்டு நடப்பு # 1: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வரும் குடும்பப் பெண்களை அவர்கள் குனியும்போதும், சேலை விலகியுள்ள நிலையிலும், இடுப்புப் பகுதிகள், பின்புறம் உள்ளிட்ட பகுதிகளை செல்போன் கேமரா மூலம் படம் பிடித்து அவற்றை இணையதளத்தில் புழக்கம் விட்ட விஷமச் செயல் குறித்த தகவல்கள் வெளியானது. …

Read More »

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்-2006

கடந்த அக்டோபர்-26-2006 முதல் பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான மத்திய அமைச்சகம் சமீபத்தில் ‘குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் – 2006 ஐ அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்தின் பல அம்சங்களை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கியுள்ளது. குடும்ப வன்முறைச் சட்டம் 2005 இல் இருந்த பல குறைபாடுகளையும் ஓட்டைகளையும் சரிசெய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முழுபாதுகாப்பை உறுதி செய்கிறது. இச்சட்டத்தின்படி கணவனால் துன்புறுத்தப்பட்ட பெண் மட்டுமல்லாது சகோதரி,விதவை, ஆதரவற்ற …

Read More »

திரித்துக் கூறப்படும் திருக்குர்ஆன் தொகுப்பு வரலாறு (வீடியோ)

திரித்துக் கூறப்படும் திருக்குர்ஆன் தொகுப்பு வரலாறு வழங்குபவர்: ஜமால் முஹம்மத் மதனி

Read More »

அத்வானியைக் கொல்ல ஐ.எஸ்.ஐ. சதி!!!

மும்பை ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக சிலரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் பைசல் என்பவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ஷேக் என்பவர் தான் எங்களை ஒருங்கிணைத்து மும்பை தொடர் குண்டுவெடிப்புத் திட்டத்தைத் தீட்டிக் கொடுத்தார். 2002ம் ஆண்டு ஷேக் ஏற்பாட்டின் பேரில் நாங்கள் பாகிஸ்தான் சென்றோம். அங்கு ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளை சந்தித்தோம். அப்போது அத்வானி குறித்த தகவல்களை தங்களுக்குத் திரட்டித் தருமாறு ஐஎஸ்ஐ அதிகாரிகள் …

Read More »