Featured Posts
Home » பொதுவானவை (page 124)

பொதுவானவை

அந்நியப் பெண்ணுடன் தனித்திருத்தல்

ஷைத்தான் மனிதர்களை குழப்புவதற்கும் விலக்கப்பட்டவைகளில் அவர்களை வீழ்த்துவதற்கும் பெரும் ஆர்வம் கொண்டவன். இதனால்தான் அல்லாஹ் நம்மை இப்படி எச்சரிக்கிறான்: “நம்பிக்கை கொண்டவர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். யாரேனும் அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் மானக்கேடானவை மற்றும் தீயவற்றைச் செய்யுமாறே ஷைத்தான் அவனை ஏவுவான்” (24:21). மனிதனின் இரத்தம் ஓடும் நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடுகின்றான். மனிதர்களை மானக்கேடானவற்றில் வீழ்த்துவதற்கு ஷைத்தான் கையாளும் வழிகளில் ஒன்றுதான் அந்நியப் பெண்ணுடன் ஒரு ஆண் தனித்திருப்பதாகும். …

Read More »

மனைவியருக்கிடையில் அநீதமாக நடத்தல்

அல்லாஹ் தனது வேதத்தில் நமக்கு அறிவுறுத்திய விஷயங்களில் மனைவியருக்கிடையே நீதமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஒன்றாகும். அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நேர்மையாக நடந்து கொள்வது சாத்தியமாகாது. ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் விடப்பட்டவள் போன்று ஆக்கி விடாதீர்கள். நீங்கள் உங்கள் நடத்தையைச் சீராக்கிக் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்தால் திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணையுள்ளவனாகவும் இருக்கிறான்” (4:129) …

Read More »

நாஸ்திகர்களெல்லோரும் அறிவாளிகளா?

திரு.தங்கமணி அவர்களின் சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது? ” என்ற பதிவில் “உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக் கூடிய மனிதராக ஆக முடிகிறது” என்ற வாசகத்தைக் காண நேர்ந்தது. கடவுள் நம்பிக்கையற்றவர்களை அறிவாளிகள் என்று விளித்திருப்பதன் மூலம் அதன் எதிர் நிலை நம்பிக்கையாளர்களை அறிவாளிகளுக்கு எதிர்ப்பதமாக சொல்லப் பட்டதாகக்கொண்டு, கடவுள் …

Read More »

மலப்பாதையில் உடலுறவு

பலவீனமான ஈமானுடைய ஒரு சிலர் தம் மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்வதிலிருந்து விலகி பேணுதலாக இருப்பதில்லை. இது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இவ்வாறு செய்பவரை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘பெண்ணின் பின் துவாரத்தில் புணர்பவன் சாபத்திற்குரியவன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அஹ்மத்) இன்னும் சொல்வதானால் ‘மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணிடம் அல்லது பெண்ணின் பின் துவாரத்தில் உடலுறவு கொண்டவன், அல்லது குறிகாரனிடம் …

Read More »

மாதவிடாய்க் காலத்தில் உடலுறவு

“இன்னும் மாதவிடாய்ப் பற்றியும் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அது ஓர் தூய்மையற்ற நிலை, ஆகவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டும் விலகி இருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்” (2:222) அவள் தூய்மையடைந்து குளிக்காத வரை அவளிடம் உறவு கொள்வது கூடாது. அல்லாஹ் கூறுகிறான்: “பிறகு அவர்கள் தூய்மையடைந்து விட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்” (2:222)இது எவ்வளவு பெரிய மோசமான பாவமென்பதை பின்வரும் …

Read More »

இந்தியாவில் இஸ்லாம்-19

தொடர்-19: தோப்பில் முஹம்மது மீரான் யார் அஞ்சுவண்ணத்தார்? அஞ்சுவண்ணத்தாரைப் பற்றியும், மணிக்கிராமத்தாரைப் பற்றியும் இரண்டாவது செப்பேட்டின் முதல் பக்கத்தில் 34, 35 வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அஞ்சுவண்ணமும் மணிக்கிராமமும் இரு வியாயார அமைப்புக்கள் என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடில்லை. ஆனால் எது யாருடைய அமைப்பு என்பதில்தான் குளறுபடிகள். இந்த இடத்தில் சற்று நிதானமாகவும், அறிவுப்பூர்வமாகவும் இதை அணுகவேண்டும். அஞ்சுவண்ணம் யூதர்களுடைய வியாபார அமைப்பு (Trade Association) என்றும், மணிக்கிராமம் கிருத்தவர்களுடைய …

Read More »

வே(ா)ட்டு!

ஓட்டு போட்டோம்விரலில் கரி பூசப்பட்டதுமுகத்தில் பூசுவதற்குமுன்னோட்டமாக! ஆதரவு கேட்டுமனிதரைத் தவிரமற்ற எல்லோரும்வந்தார்கள் விலை மதிப்பற்ற வாக்குகளைவலையில் விழவைக்கபணப் பெட்டகம் தேவையில்லைபிரியாணி பொட்டலமே போதும்! வாகனத்தில் ஒலியெழுப்பும்சிவப்பு விளக்கு சொன்னது…அபாயம் வருகிறதென்று…நம்பவில்லை…மனுகொடுக்கமந்திரியை…தேடிய போதுதான் தெரிந்ததுஅவர் –சிவப்பு விளக்கில் இருப்பது. இப்போதெல்லாம்பிறர்தலை எடுத்துப் பழகியவர்தான்தலைவராகதலையெடுக்க முடிகிறது… மெழுகு வர்த்தியைப் போல்இருப்போம் என உருகினார்கள்தேவையில்லைஎங்கள் மேனியை எரிக்கும்தீப்பந்தமாய்மாறாதிருந்தாலே போதும்! கவிதை: ஆளூர் ஷா நவாஸ்

Read More »

தமிழக முஸ்லிம்களை ஆண்டவன்தான் காப்பாற்றனும்!

சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பெரும்பாலான தொகுதிகளில் நிர்ணயிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் இருக்கின்றனர். தேர்தல் திருவிழாவில் ஓட்டுக்காக முஸ்லிம்களை தாஜா செய்வது எல்லா அரசியல் கட்சிகளும் மதசார்பின்றி கடைபிடிக்கும் யுக்தி. சுதந்திரப் போராட்டங்களில் இணைந்து செயல்பட்ட தொப்புல் கொடி உறவால் காங்கிரஸுடன் பெரும்பாலான தேர்தல்களில் கூட்டனி வைத்து சில தொகுதிகளில் வெல்வதோடு இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பு இருந்து வருகிறது. தமிழகத்திலும் இந்த நிலை கடந்த ஐம்பது …

Read More »

ழிஹார்

அறியாமைக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட – இந்த சமுதாயத்திலும் பரவி இருக்கின்ற பல வார்த்தைகளில் ழிஹாரும் ஒன்று. அதாவது ஒரு கணவன் தன் மனைவியிடம் ‘நீ எனக்கு என் தாயைப் போன்றவள்’, ‘நீ எனக்கு என் சகோதரியைப் போன்றவள்’ என்பன போன்ற மோசமான வார்த்தைகளைக் கூறுவர். இதற்கு ழிஹார் எனப்படும். பெண்ணுக்கு இதிலே அநீதியிருப்பதால் இறைமார்க்கம் இதை அறுவருப்பாகக் கருதுகிறது. இது பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான்: “உங்களில் எவர்கள் தம் …

Read More »

காரணமின்றி பெண் விவாகரத்துக் கோரல்

பெரும்பாலான பெண்கள் ஒரு சின்னப் பிரச்சனை ஏற்பட்டாலும் தங்கள் கணவன்மார்களிடம் விவாகரத்தைக் கோர விரைகின்றனர். அல்லது தான் விரும்பும் பொருளை தன் கணவன் கொடுக்காவிட்டால் மனைவி அவனிடம் விவாகரத்தைக் கோருகின்றாள். சில சமயம் அவள் சில குழப்பமூட்டுகின்ற உறவினரால் அல்லது அண்டை வீட்டாரால் இவ்வாறு நடந்து கொள்வதற்குத் தூண்டப்படுகிறாள். சில சமயம் ‘நீ ஓர் ஆண் பிள்ளையாக இருந்தால் என்னை விவாகரத்துச் செய்து பார்’ என்பது போன்ற உணர்வுகளைத் தூண்டக்கூடிய …

Read More »