Featured Posts
Home » 2005 (page 31)

Yearly Archives: 2005

நபியின் ஷபாஅத்தை மறுக்கின்றவர்கள் யார்?

முஃதஸிலாக்கள், ஜய்திய்யாக்கள், கவாரிஜிகள் போன்ற பித்அத்துக்காரர்கள்தான் இவ்வுண்மையை ஏற்கமாட்டார்கள். நரகத்தில் அகப்பட்டவர்களுக்கு யாருடைய சிபாரிசும் பலனளிக்காது என்று அவர்கள் வாதாடுகிறார்கள். மனிதன் இரண்டே அமைப்புக்குரியவன். சுவனவாதி அல்லது நரகவாதி. நரகவாதியாக நரகில் பிரவேசித்தவனுக்கு என்றும் இருப்பிடம் நரகமே. சுவனத்தைத் தன் இருப்பிடமாக்கிக் கொண்டவனுக்கு என்றும் சுவனமே இருப்பிடமாகும். இவ்விரு இருப்பிடங்களிலிருந்தும் எக்காரணத்தாலும் இவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள். தண்டனையும், நற்செய்கைக்கான நல்ல கூலியும் ஒருபோதிலும் ஒன்று சேராது. இவ்வாறு இவர்கள் வாதாடுகிறார்கள்.

Read More »

மேல்மாடி மின்னல்கள்

கங்காவின் “தினம் ஒரு ஸென் கதை” விஷயங்கள் மேல்மாடி Capacity பிரச்சினையால் மண்டையில் ஏறுவதில்லை. ஆனால் “ஆமைகளின் சுற்றுலா” என்ற தலைப்பு ஈர்த்ததால் சொடுக்கி பார்த்தபோது மேல்மாடியில் பல மின்னல்கள் எழுந்தன. கங்கா தனது பதிவில் இட்ட அக்கதை இதுதான்: ஆமைகளின் சுற்றுலா ஒரு ஆமைக் குடும்பமானது சுற்றுலா செல்ல முடிவெடுத்தது. குடும்பத்தில் இருந்த எல்லா ஆமைகளும் சுற்றுலாவுக்கு வருவதற்கு சம்மதிக்க ஏழு வருடங்கள் பிடித்தன. இயல்பிலேயே மிகவும் மந்தமாக …

Read More »

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மதிப்பு.

நபிகள் (ஸல்) அவர்கள் எல்லா மக்களுக்கும் பரிந்து பேசி அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள். புகழுக்கு உரிய உன்னதமான ஸ்தானமும் அவர்களுக்கு உண்டு. பரிந்து பேசுகின்ற அனைத்து சிபாரிசுகாரர்களை விட மதிப்பிலும், அந்தஸ்திலும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்களாவார்கள். அவர்களின் அந்தஸ்தின் அருகில் எந்த நபிகளும், எந்த ரசூலும் நெருங்க முடியாது. இவர்கள் அல்லாஹ்விடம் எல்லோரையும் விட மதிப்புக்குரியவர். யார் யாருக்கு அவர்கள் இறைவனிடம் துஆச் செய்து மன்றாடி சிபாரிசு …

Read More »

நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும்

இஸ்லாத்தின் தோலை உரித்துக் காட்டுகிறேன் என்று தொடங்கிய நேசகுமார் அவர்கள் தனது விமர்சனங்களும் விளக்கங்களும் என்ற பதிவில் அவருடைய தன்னிலை விளக்கத்தை படிக்க நேர்ந்தது. தனி ஒரு மனிதனாக போராட வேண்டியிருக்கிறது, நானும் குடும்பஸ்தன், பன்முகங்கள் பல கொண்டவன், சமுதாய வாழ்க்கையில் பங்கு கொள்ளல் என்றெல்லாம் தனது இயலாமையை, இயல்பை எழுதியிருந்தார். அவரின் இந்த விஷப்போராட்டத்தில் தனது உண்மையான முகம் வெளிப்படப் போகிறது என்பதை அவர் புரிந்துக் கொள்ளும் நேரம் …

Read More »

மூல நூலாசிரியரின் வரலாறு – ஆசிரியர் முகவுரை!

இந்நூலின் மூல ஆசிரியரான ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு மாபெரும் மார்க்க மேதையும் சீர்திருத்தவாதியுமான அஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா என்பவர் ஹிஜ்ரி 661-ஆண்டு ரபீவுல் அவ்வல் 10(கி.பி 1263 ஜனவரி 22 ஆம் நாள்)சிரியாவில் ஹர்ரான் என்ற ஊரில் பிறந்தார். தந்தை ஷிஹாபுத்தீன் அப்துல் ஹலீம் இப்னு தைமிய்யா திமிஷ்கிலுள்ள (டமாஸ்கஸ்) ஜாமி வுல் உமவீ மஸ்ஜித் இமாமாகவும், தாருல் ஹதீதுஸ்-ஸகரிய்யா பேராசிரியராகவும் …

Read More »

திசை திருப்பும் உள் நோக்கம்.

ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களையும் முட்டளாக்கும் முயற்சியில், அவதூறுகளை சுமந்து களமிறங்கிய நேசகுமார் ”தனியொருவனாக பதிலளிப்பதின் சங்கடங்கள்” என்று இப்போது புலம்புகிறார். மந்தையில் அமர்களமாய் புகுந்த தனி நரியைப்போல, இஸ்லாத்தின் மீது அவதூறுச் சேற்றை வாரியிறைக்க தமிழ்மணம் வலைப்பதிவில் 3.12.2004ல் ”நபிகள் நாயகத்தின் வாழ்வு” என்று தொடங்கி.. நேசகுமார் தனி நபராகத்தான் வலிய களமிறங்கினார். நொங்கு தின்ன ஆசைப்பட்டவன், நோண்டித்தின்ன சங்கடப்பட்டானாம்.இஸ்லாத்தின் மீது பெய்யானக் குற்றங்களை அடுக்கடுக்காய் சுமத்துவதில் நேசகுமார் …

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 2

அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா தமிழகத்தில் இஸ்லாம்பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும். சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் …

Read More »

பாடம்-15 | ஷிர்க்கை நோக்கி இட்டுச்செல்லும் எல்லா வழிகளையும் முஸ்தபா (ஸல்) தடுத்தார்கள்.

ஷிர்க்கை நோக்கி இட்டுச்செல்லும் எல்லா வழிகளையும் முஸ்தபா (ஸல்) தடுத்தார்கள். ‘(விசுவாசிகளே!) உங்களிடமிருந்தே திட்டமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார்; (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டப்படுவது அவருக்கு மிக வருத்தமாக இருக்கும்; உங்கள் மீது மிக்க பேராசை கொண்டவர்; விசுவாசிகளோடு மிக இரக்கமுள்ளவர்; மிகக் கிருபையுடையவர். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் (உம்மை ஏற்காது) விலகிக் கொண்டால் (அவர்களிடம்) நீர் கூறுவீராக, அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன், அவனைத் …

Read More »

இது இஸ்லாம், இவர் முஸ்லிம்.

கொள்கைகளால் வேறுபட்டு பல மதங்களாக பிரிந்திருந்தாலும், மனிதயினத் துவக்கம் ஒரு மனிதரிலிருந்தே பல்கிப் பெருகிப் பரவியது என்றே இஸ்லாம் கூறுகிறது. மனிதர்களே! அவன்தான் உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். (திருக்குர்ஆன், 4:1, 7:189, 39:6) சாதி, இனம், மொழி, கொள்கையென்று வேறுபட்டு – பிரிந்து கிடந்தாலும் மனிதர்கள் அனைவரும் ஒரு தந்தை வழித் தோன்றிய, ஒரேகுடும்பத்தினரே என்பதை இஸ்லாம் அழுத்தமாகச் சொல்கிறது. //” இறைவன் ஒருவனே என்ற இந்த அழுத்தமான …

Read More »

பாடம்-14 | ஒரு நல்ல மனிதரின் அடக்கத்தலத்தில் செய்யும் செயல் எல்லை மீறுதல்

ஒரு நல்ல மனிதரின் அடக்கத்தலத்தில் செய்யும் செயல் எல்லை மீறும் போது அது மரித்தவரை விக்கிரகத்திற்கு சமமாக்கும். ‘யா அல்லாஹ்! என்னுடைய அடக்கத்தலத்தை காஃபிர்களின் விக்கிரகத்தைப் போன்று செய்து விடாதே. தங்கள் நபிமார்களின் அடக்கத்தலத்தை மஸ்ஜிதுகளாக மாற்றியமைத்த மக்கள் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையானது.’ என நபி முஹம்மத் (ஸல்) கூறியதாக இமாம் மாலிக் தன் முவத்தா என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்கள். ‘நீங்கள் (வணங்கும்) லாத்தையும், உஜ்ஜாவையும் கண்டீர்களா?’ (53:19) …

Read More »