டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த இச்செய்தியை படித்ததும் உண்மையில் மனம் நெகிழ்ந்தது. மும்பையில் தொழில் செய்துவரும் குஜராத்தைச் சார்ந்த தொழிலதிபர் தயால் பானுஷாலிக்கு கிட்னி மாற்று சிகிச்சைக்கு மும்பை கடற்படையில் பணியாற்றும் சயீது முஹம்மது கிட்னி கொடுத்து உதவியுள்ளார். அதேபோல் தயாள் பானுஷாலியின் மனைவி தமயந்தி தனது கிட்னியை சயீத் முஹம்மதின் மனைவி ஷமீமுக்கு கொடுத்துள்ளார். தம்பதிகளுக்கிடையிலான இதுபோன்ற கிட்னி பரிமாற்றம் இதற்குமுன் சண்டிகரில் ஏப்ரல் 2004 இல் நடந்து …
Read More »Yearly Archives: 2006
அரபியர்களின் கடவுட்க் கொள்கை!
அரபிகள் ஒருபோதும் கடவுள் நம்பிக்கையற்றவர்களாய் இருந்ததில்லை. ஆனால் ஏகனும், எவர் தயவும் – தேவையும் அற்றவனுமான இறைவன் தன்னைப் பற்றி எவ்வாறு குறிப்பிடுகின்றானோ, அந்தப் பொருளில் இறைவனை அவர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை! அவனுக்கு இணை கற்பித்துக் கொண்டிருந்தார்கள். இறைவனை எப்படி கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்தாதவர்களாகவும், எவ்வாறு அவனை வணங்கிட வேண்டுமோ அவ்வாறு வணங்காதவர்களாகவும் இருந்து வந்தார்கள். தமது முன்னோர்களில் நல்லடியார்களாகவும், கண்ணியத்திற்குரியவர்களாவும் திகழ்ந்தவர்களுக்கோ, அல்லது வானவர்களுக்கோ நினைவுச் சின்னங்களாகத் …
Read More »இஸ்ரேலின் வீரதீரபராக்கிரமங்கள்!
சிலவருடங்கள் வரை உலக நாடுகளின் குறிப்பாக இந்தியத் திருநாட்டின் அங்கீகாரத்தைப் பெறாத மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பலமுறை கண்டத்திற்காளான இஸ்ரேலைப் புகழ்ந்து சிலர் எழுதி வருகின்றனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில பழைய புள்ளி விபரங்களைப் பார்த்து விட்டு மேற்கொண்டு புகழ்பாடலாம்! கடந்த செப்டம்பர்-2000 முதல் ஜனவரி-2003 வரை பள்ளி மாணவ மாணவிகளின் மீதான இஸ்ரேலின் அக்கிரமங்கள்: 166 மாணவர்களும் 75 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்1289 பாலஸ்தீன பள்ளிகள் தற்காலிகமாக …
Read More »தமிழக முதல்வரின் சிந்தனைக்கு.
தமிழக முதல்வர் கலைஞரின் சிந்தனைக்கு. ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுள்ள டாக்டர் கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரது ஆட்சி நல்லாட்சியாகச் சிறந்து விளங்க இணை துணை இல்லாத ஏகன் இறைவனிடம் பிராரத்திக்கிறோம். ஆட்சி நல்லாட்சியாக அமைவதாக இருந்தால் பதவியேற்றுள்ள முதல்வர் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததாக வேண்டும். அப்படிப்பட்ட நடவடிக்கைகளால் உடனடியாக பலன் கிடைக்காவிட்டாலும், எதிர்காலத்தில் தமிழகம் தலை நிமிர்ந்து, சிறந்து விளங்க அது வழிவகுக்கும், தமிழகச் …
Read More »யாகாவா ராயினும் நாகாக்க – 1
தருமி’ என்ற புனைப்பெயரில் எழுதிவரும் திரு .சாம் ஜார்ஜ் கடைசியாக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ரிடையர்ட் ஆனவர். பிறப்பால் கிறிஸ்தவராக இருந்தவர் , கிறிஸ்தவத்தின் கோட்பாடுகள் பிடிக்காமல் மதங்களே மாயை என்ற முடிவுக்கு வந்து, ” எனக்கு மதம் பிடிக்கவில்லை” என்ற தலைப்பில் பல பதிவுகளை எழுதினார். கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறிய பேராசிரியர் சாம் ஜார்ஜ், கிறிஸ்தவத்தின் குறைபாடுகளாகத் தான் உணர்ந்ததை பதிவாக இட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் விளக்க …
Read More »ஜும்ஆவின் பாங்கிற்குப் பிறகு வியாபாரம் செய்தல்
அல்லாஹ் கூறுகிறான்: “இறைநம்பிக்கை கொண்டோரே! ஜும்ஆ நாளில் தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பக்கம் விரைந்து செல்லுங்கள். வியாபாரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இது உங்களுக்கு சிறந்ததாகும்” (62:9) சிலர் இரண்டாம் பாங்கு கூறப்பட்ட பிறகும் கடைகளில் வியாபாரம் செய்கின்றனர். அல்லது பள்ளிகளுக்கு முன்னால் தொடர்ந்து பொருட்களை விற்கிறார்கள். அவர்களிடம் வாங்குபவர்களும் பாவத்தில் கூட்டாகின்றனர். மிஸ்வாக் குச்சியை வாங்கினாலும் சரியே. அறிஞர்களின் சரியான கூற்றின்படி …
Read More »நபித்தோழர்களை நையாண்டி செய்யும் நவீனவாதிகள்
வழங்குபவர்: மவ்லவி ஹாமித் பக்ரி மன்பஈ
Read More »மதங்களும் பெண்ணியமும் – 2
பெண்ணுரிமை அமைப்புக்களின் அடிப்படை நோக்கம் மேற்கத்திய நாடுகளில் வழக்கத்தில் இருந்த ஊதியப் பாகுபாட்டைக் களைய வேண்டும் என்பதாகவே இருந்தன. அதாவது ஒரே அலுவலைச் செய்யும் ஆணுக்கும்-பெண்ணுக்கும் வெவ்வேறு விகிதமான ஊதியம் வழங்கப்பட்டது. இந்த அநீதியிலிருந்து பெண்களை மீட்டெடுக்கப் போராடுவதற்காகவே பெண்ணுரிமை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு போராட்டங்கள் மூலம் சமநீதி பெற வேண்டிய சூழல் உருவானது. இதில் ஓரளவு வெற்றிகண்ட அமைப்புகள் இன்னும் சில ஆணாதிக்கச் சிந்தனைகளிலிருந்து பெண்களை முற்றிலும் விடுவிக்கத் தொடந்து …
Read More »நஜஷ் – வியாபாரத்தில் வஞ்சித்தல்
நஜஷ் என்பது பொருளை வாங்காத ஒருவர் (இவர் வியாபாரியால் நிறுத்தப் பட்டிருப்பார்) அதன் விலையை அதிகப் படுத்துவதாகும். பிறரை ஏமாற்றுவதும் படிப்படியாக அவரை அதிக விலைக்குக் கொண்டு செல்வதும் தான் இதன் நோக்கமாக இருக்கும். ‘நீங்கள் வஞ்சக வியாபாரம் செய்யாதீர்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி. இது ஒரு வகையான ஏமாற்றுதலாகும் என்பதில் ஐயமில்லை. திண்ணமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (16)
அன்னிய ஆட்யின் கீழ் சிறுவரும் சிறுமியரும் பெற்ற புதுமுறைக் கல்வியினால் விளைந்த ஒழுக்கக் கேட்டை மிகைப்படுத்திக் கூறுவது கடினமாகும். அவர்கள் தம் சொந்த கலாச்சாரத்திற்குப் பதில் இழிந்த, பகட்டு மிக்க மேனாட்டுப் போலிக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். மேனாட்டு அறிவு தான் மிக்க உண்மையானது, நம்பத்தக்கது என்றும் மேனாட்டு ஒழுக்க முறை தான் தூய்மை மிக்கதென்றும் மேனாட்டு நாகரிகமே மனித மூளை தோற்றுவித்த மிகச் சிறந்த நாகரிகம் என்றும் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library