Featured Posts
Home » 2007 (page 20)

Yearly Archives: 2007

பலிப்பிராணியை வாகனமாக்குதல்.

833. ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துச் செல்வதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘அதில் ஏறிக் கொள்வீராக!” என்று கூறினார்கள். அதற்கவர் ‘இது குர்பானி ஒட்டகமாயிற்றே!” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘(பரவாயில்லை) நீர் அதில் ஏறிக் கொள்ளும்!” என்றார்கள். (அவர் அதில் ஏறாததால்) இரண்டாவது முறையிலோ, மூன்றாவது முறையிலோ நபி (ஸல்) அவர்கள் ‘உமக்குக் கேடு உண்டாகட்டும்! ஏறுவீராக!” என்று கூறினார்கள். புஹாரி :1689 அபூஹூரைரா (ரலி). …

Read More »

ஜகாத்

ஜகாத் ஓரு மறு ஆய்வு -மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி Link: www.islamkalvi.com/fiqh/zakath/vimarsanam_vilakkam_text.htm அணியும் நகைகளுக்கு ஜகாத் உண்டா? -மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி Link: www.islamkalvi.com/fiqh/zakath/using_ornaments.htm ஜகாத் சட்டங்கள்: ஜனவரி(2006) ஏகத்துவத்தில் மீண்டும் குழப்பங்கள் -மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி Link: www.islamkalvi.com/fiqh/zakath/reply_to_ehathuvam_jan2006.htm

Read More »

பலிப்பிராணிகளை அலங்கரித்தல்.

831. நபி (ஸல்) அவர்களின் குர்பானி ஒட்டகங்களின் கழுத்து மாலைகளை நான் என்னுடைய கைகளாலேயே கோர்த்தேன். அதை நபி (ஸல்) அவர்கள் தங்களின் பிராணியின் கழுத்தில் போட்டு அதற்கு அடையாளமுமிட்டு அதை பலியிட்டார்கள். அதன் பிறகு அவர்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்த எந்தப் பொருளும் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருக்கவில்லை. (அதாவது இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள்.) புஹாரி : 1696 ஆயிஷா (ரலி). 832. ”பலிப்பிராணியைக் கொண்டு வருகிறவர் அதை பலியிடும்வரை ஹஜ் …

Read More »

கொடுக்கல் வாங்கல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

கொடுக்கல் வாங்கல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம் வழங்குபவர்: அஷ்ஷேய்க் M.I.M. அன்ஸார் தப்லீகி (அதிபர் குல்லிய்யது தத்பீகுஸ் ஷரீஆ) அகில இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்பின் (I.A.T) தேசிய தவ்ஹீத் மாநாடு 30.06.2007, புத்தளம்

Read More »

முன்மாதிரி முஸ்லிம்

முன்மாதிரி முஸ்லிம் வழங்குபவர்: அஷ்ஷெய்க் A.R.M. அர்ஹம் அகில இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்பின் (I.A.T) தேசிய தவ்ஹீத் மாநாடு 30.06.2007, புத்தளம்

Read More »

ஒட்டகத்தை நிற்க வைத்து அறுத்தல்.

830. ”இப்னு உமர் (ரலி), அறுப்பதற்காகத் தம் ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த ஒருவரிடம் வந்து, ‘அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக! அதுவே முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை!’ என்று கூறியதை பார்த்தேன்.” புஹாரி : 1713 ஜைது பின் ஜூபைர் (ரலி).

Read More »

சட்டத்தின் முன் அனைவரும் சமம்?

அரியவகை மான்களை வேட்டையாடிதால் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை ஜோத்பூர் நீதிமன்றம் விதித்துள்ளது. இதை முன்னாள் மத்திய பிராணி அமைச்சர் மேனகா காந்தியும் ‘மிருகாபிமான’ மனிதர்களும் வரவேற்றுள்ளார்கள்! நாகரிகச் சமூகத்தில் மனித உயிர், மற்ற உயிர்களைவிட மதிப்புள்ளதாகக் கருதப்படுகிறது! இதே சல்’மான்’கான் சில வருடங்களுக்கு முன் குடித்து விட்டு காரை வேகமாக ஓட்டி ஒரு மனிதனைக் கொன்றதாகப் படித்த நினைவு. அதற்கு என்ன தண்டனை பெற்றார் …

Read More »

ஹைதராபாத் குண்டு வெடிப்பு

நேற்று முன்தினம் ஹைதராபாதில் நடந்த குண்டு வெடிப்பில் வழக்கம் போல் ஏதேனும் ஒரு முஸ்லிம் பெயரிலுள்ள தீவிரவாத அமைப்பைச் சொல்லி வழக்கம்போல் விசாரனை முஸ்லிம்களைச் சுற்றியே இருக்கப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை!ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்கும் பின்னணியில் பயங்கர சதித்திட்டங்கள் உள்ளன. எப்பொழுதெல்லாம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படுகிறதோ, அதற்கு முன்/பின் ஏதேனும் பரபரப்பான விசயம் இருக்கிறது என்பதைப் பலரும் கவனித்திருக்கலாம். அமெரிக்க-இந்திய அணுசக்தி உடன்பாட்டினால் காங்கிரஸின் குடுமி, இடதுசாரிகளின் பிடியில் …

Read More »

பலியிட்ட பிராணியின் இறைச்சி தோல் தர்மம் பற்றி..

829. நபி (ஸல்) அவர்கள் தங்களின் குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்குக் கூலியாக, அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். புஹாரி : 1717 அலி (ரலி).

Read More »

அறுப்பு தினத்தில் தவாஃப் அல் இஃபாதா செய்வது.

824. நான் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் 8-ஆம் நாள் லுஹர், அஸ்ர் தொழுகைகளை எங்கு தொழுதார்கள் என்பதைப் பற்றித் தாங்கள் அறிந்ததை எனக்குத் தெரிவியுங்களேன் எனக் கேட்டேன். அதற்கவர் ‘மினாவில்’ என்றார். பிறகு நான், (ஹஜ் முடித்து மினாவிலிருந்து) திரும்பும்போது எங்கு அஸர் தொழுதார்கள் எனக் கேட்டதும் ‘அப்தஹ்’ எனுமிடத்தில் என்று கூறிவிட்டு, ‘உம்முடைய தலைவர்கள் செய்வது போன்றே செய்வீராக!’ என்றும் …

Read More »