Featured Posts
Home » 2007 (page 21)

Yearly Archives: 2007

கல்லெறிதல் அறுத்து பலியிடுதல் தலைமுடியை மழித்தல்.

821. ‘நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) தங்கள் தலை முடியைக் களைந்தார்கள். அவர்களின் முடியிலிருந்து முதன் முதலாக அபூ தல்ஹா (ரலி) எடுத்தார்” இதை அனஸ் (ரலி) அறிவித்தார். புஹாரி :171 அனஸ் (ரலி). 822. ‘நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது மினாவில் நின்றிருந்தார்கள். மக்கள் அவர்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘நான் மார்க்கச் சட்டங்கள் அறிந்தவனல்ல. எனவே, …

Read More »

ஷஅபான் மாத சிறப்புகளும் பித்அத்களும்

அல்-ஜுபைல் தஃவா சென்டர் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் மன்சூர் மதனீ இடம்: துறைமுக கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 16.08.2007 Download mp3 Audio [audio:http://www.mediafire.com/dowload/1lpgjg5qwd72v4w/month_of_sahban-mansoor_madani.mp3]

Read More »

முடியைக் குறைத்தல் அல்லது மழித்தல் பற்றி..

818. நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஹஜ்ஜின்போது தலையை மழித்தார்கள். புஹாரி : 1726 இப்னு உமர் (ரலி). 819. ‘இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரி!’ எனக் கூறியதும் தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! முடியைக் குறைத்துக் …

Read More »

ஜமராவில் கல்லெறிதல் பற்றி..

816. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்ததும், தம் இடப் பக்கத்தில் இறையில்லம் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும் படி நின்று கொண்டு, ஏழு சிறு கற்களை எறிந்தார். பிறகு ‘இவ்வாறுதான், பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்களும் எறிந்தார்கள்!” என்று கூறினார்கள். புஹாரி :1748 அப்துர்ரஹ்மான் பின் யஸீத் (ரலி). 817. ஹஜ்ஜாஜ் மிம்பர் மீது ஏறி, ‘பசுமாடு பற்றிக் …

Read More »

இமாம்கள் – “பேரைச் சொன்னாலே அதிருதுல’’

இமாம் பசந்த் கேள்விப்பட்டிருப்பீர்கள்! நம்நாட்டு மாம்பழ வகைகளுள் ஒன்றின் பெயர்! அதுவன்றி தற்போதெல்லாம் ‘இமாம்’ என்ற பெயரைக் கேட்டாலே சிலருக்குக் கசக்கிறது! குறிப்பாக கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகக் கருத்து சொல்லும் கசப்பான இமாம்கள் பற்றி தெளிவு படுத்தும் முயற்சி !   டெல்லி ஷாஹி இமாம்: அவ்வப்போது இஸ்லாத்தை இந்திய அரசியலுக்குள் குழப்பி கருத்துச் சொல்லிவரும் இவர் எமர்ஜென்ஸியின்போது நிழல் பிரதமராக இருந்த சஞ்சய் காந்தி நடத்திய ஜுமா மசூதித் …

Read More »

பெண்களும் வயது முதிர்ந்த பலவினர்களும் முஜ்தலிஃபாவை விட்டு இரவில் வெளியேறுதல்.

812. நாங்கள் முஸ்தலிஃபாவில் தங்கினோம். அப்போது ஸவ்தா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், மக்கள் புறப்படுவதற்கு முன்பாக, தாம் அங்கிருந்து (மினாவுக்குப்) புறப்பட அனுமதி கேட்டார். ஏனெனில், அவர் மெதுவாக நடக்கக் கூடியவராக இருந்தார். எனவே, நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி கொடுத்தார்கள். அவ்வாறே, மக்கள் அங்கிருந்து புறப்படும் முன் அவர் புறப்பட்டுவிட்டார். நாங்கள் மட்டும் ஸுப்ஹு வரை அங்கேயே தங்கிவிட்டு, பிறகு நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து …

Read More »

முஜ்தலிஃபாவில் ஃபஜ்ரை முன்பாகவே தொழுதல்.

811. ”நபி (ஸல்) அவர்கள் எந்தத் தொழுகையையும் (அதற்குரிய நேரத்தில் தொழாமல்) வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை… இரண்டு தொழுகைகளைத் தவிர! ஒன்று : (முஸ்தலிஃபாவில்) மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதது இன்னொன்று : ஃபஜ்ரை அதற்கான (வழக்கமான) நேரத்திற்கு முன் (முஸ்தலிஃபாவிலேயே) தொழுதது,” புஹாரி : 1682 இப்னு மஸ்ஊத் (ரலி).

Read More »

முஜ்தலிஃபாவில் மக்ரிப் இஷா தொழுதல்.

807. ‘(ஹஜ்ஜில்) நபி (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபா) சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு கணவாயில் வாகனத்தை விட்டு இறங்கிச் சிறுநீர் கழித்தார்கள். பின்னர் சுருக்கமாக உளூச் செய்தார்கள். அப்போது, ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் தொழப் போகிறீர்களா?’ என்று நான் கேட்டதற்கு, ‘தொழுகை உமக்கு முன்னர் (முஸ்தலிஃபாவில்) நடைபெறும்’ என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறினார்கள். முஸ்தலிஃபா என்ற இடம் வந்ததும் இறங்கி மீண்டும் உளூச் செய்தார்கள். இப்போது உளூவை முழுமையாகச் …

Read More »

காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? பகுதி-2

ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2007 மக்காவில் அமைந்திருக்கும் காபாவை, உலக முஸ்லிம்கள் புனித ஆலயமாகத் தமது வணக்க வழிபாட்டை அதை நோக்கி அமைத்துக் கொள்கிறார்கள். காபா ஆலயத்தை வன்முறை நோக்கத்தோடு தாக்கி அழிப்பதற்கு எவரேனும் முயன்றால் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதை திருக்குர்ஆன் 105வது அத்தியாயம் கூறுகிறது. அதற்கான வரலாற்று சான்றுகளை பகுதி- 1ல் காணலாம். மேலும், ”ஒரு படை காபாவின் மீது படையெடுக்கும், அப்படையை பூமி விழுங்கிவிடும்” என்று நபி …

Read More »

அரஃபா நாளில் தல்பியா கூறுதல்.

806. நாங்கள் மினாவிலிருந்து அரஃபாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது அனஸ் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடன் நீங்கள் எவ்வாறு தல்பியா கூறிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘தல்பியா கூறியவர்கள் தல்பியா கூறினர்; அது ஆட்சேபிக்கப்படவில்லை தக்பீர் கூறியவர் தக்பீர் கூறினர்; அதுவும் ஆட்சேபிக்கப்படவில்லை’ என்று விடையளித்தார்கள். புஹாரி :970 முஹம்மது பின் அபூபக்கர் அத்தகபீ (ரலி).

Read More »