Featured Posts
Home » 2006 » March (page 3)

Monthly Archives: March 2006

வே(ா)ட்டு!

ஓட்டு போட்டோம்விரலில் கரி பூசப்பட்டதுமுகத்தில் பூசுவதற்குமுன்னோட்டமாக! ஆதரவு கேட்டுமனிதரைத் தவிரமற்ற எல்லோரும்வந்தார்கள் விலை மதிப்பற்ற வாக்குகளைவலையில் விழவைக்கபணப் பெட்டகம் தேவையில்லைபிரியாணி பொட்டலமே போதும்! வாகனத்தில் ஒலியெழுப்பும்சிவப்பு விளக்கு சொன்னது…அபாயம் வருகிறதென்று…நம்பவில்லை…மனுகொடுக்கமந்திரியை…தேடிய போதுதான் தெரிந்ததுஅவர் –சிவப்பு விளக்கில் இருப்பது. இப்போதெல்லாம்பிறர்தலை எடுத்துப் பழகியவர்தான்தலைவராகதலையெடுக்க முடிகிறது… மெழுகு வர்த்தியைப் போல்இருப்போம் என உருகினார்கள்தேவையில்லைஎங்கள் மேனியை எரிக்கும்தீப்பந்தமாய்மாறாதிருந்தாலே போதும்! கவிதை: ஆளூர் ஷா நவாஸ்

Read More »

தமிழக முஸ்லிம்களை ஆண்டவன்தான் காப்பாற்றனும்!

சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பெரும்பாலான தொகுதிகளில் நிர்ணயிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் இருக்கின்றனர். தேர்தல் திருவிழாவில் ஓட்டுக்காக முஸ்லிம்களை தாஜா செய்வது எல்லா அரசியல் கட்சிகளும் மதசார்பின்றி கடைபிடிக்கும் யுக்தி. சுதந்திரப் போராட்டங்களில் இணைந்து செயல்பட்ட தொப்புல் கொடி உறவால் காங்கிரஸுடன் பெரும்பாலான தேர்தல்களில் கூட்டனி வைத்து சில தொகுதிகளில் வெல்வதோடு இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பு இருந்து வருகிறது. தமிழகத்திலும் இந்த நிலை கடந்த ஐம்பது …

Read More »

ழிஹார்

அறியாமைக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட – இந்த சமுதாயத்திலும் பரவி இருக்கின்ற பல வார்த்தைகளில் ழிஹாரும் ஒன்று. அதாவது ஒரு கணவன் தன் மனைவியிடம் ‘நீ எனக்கு என் தாயைப் போன்றவள்’, ‘நீ எனக்கு என் சகோதரியைப் போன்றவள்’ என்பன போன்ற மோசமான வார்த்தைகளைக் கூறுவர். இதற்கு ழிஹார் எனப்படும். பெண்ணுக்கு இதிலே அநீதியிருப்பதால் இறைமார்க்கம் இதை அறுவருப்பாகக் கருதுகிறது. இது பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான்: “உங்களில் எவர்கள் தம் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (10)

கல்விக்கு ஏற்பாடின்மை.மேலே நாம் கூறியது போல முடியரசின் கீழ் இஸ்லாமிய ஒழியைப் பரப்பும் பெரும்பணி தனி மனிதர்களின் பொறுப்பாக மாறிற்று. உலமா, சூபிப் பெருமக்கள், ஏன் வர்த்தகர்களும் கூடக் காட்டிய பேரார்வத்தின் காரணமாகத் தொடர்ந்து இஸ்லாத்தின் பால் பலர் கவரப்பட்டு வந்தனர். ஒரு காலத்தில் பேரருவியாக ஓடிக் கொண்டிருந்த புது முஸ்லிம்களின் பெருக்கம் நாளடைவில் சிற்றோடையாகச் சுருங்கிற்று. ஆனால் அது ஒரு போதும் வற்றி வரண்டு விடவில்லை. அரசர்களின் ஆதரவு …

Read More »

காரணமின்றி பெண் விவாகரத்துக் கோரல்

பெரும்பாலான பெண்கள் ஒரு சின்னப் பிரச்சனை ஏற்பட்டாலும் தங்கள் கணவன்மார்களிடம் விவாகரத்தைக் கோர விரைகின்றனர். அல்லது தான் விரும்பும் பொருளை தன் கணவன் கொடுக்காவிட்டால் மனைவி அவனிடம் விவாகரத்தைக் கோருகின்றாள். சில சமயம் அவள் சில குழப்பமூட்டுகின்ற உறவினரால் அல்லது அண்டை வீட்டாரால் இவ்வாறு நடந்து கொள்வதற்குத் தூண்டப்படுகிறாள். சில சமயம் ‘நீ ஓர் ஆண் பிள்ளையாக இருந்தால் என்னை விவாகரத்துச் செய்து பார்’ என்பது போன்ற உணர்வுகளைத் தூண்டக்கூடிய …

Read More »

பிரார்த்தனையின் படித்தரங்கள் (3) இறுதி பகுதி!

புனிதமான மார்க்கம் நமது இஸ்லாம். இது இரு அடிப்படைகள் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று: இறைவனுக்கு இணை துணை கற்பிக்காமல் வணக்க வழிபாடுகள் செலுத்துவது. இரண்டு: எப்படி அல்லாஹ்வை வணங்க வேண்டுமென்று நபிகள் காட்டித் தந்தார்களோ அப்படி அவனை வணங்குவது. இவ்விரு அடிப்படைகளையும் முழுமையாக நாம் எடுத்து செயல்படுவதினால் கலிமத்துஷ் ஷஹாதாவின் உண்மையான தாத்பரியத்தை மெய்ப்பித்தவர்களாக ஆக முடியும். இறைவன் அடியார்களின் இதயத்தால் பயந்து, வழிபட்டு, உதவிகோரி, நேசித்து, பெருமைப்படுத்தி, கண்ணியப்படுத்தி, …

Read More »

அணுகுண்டு வீசப்பட்டால்..

சென்னை மாநகர் மீது அணுகுண்டு வீசப்பட்டால்… ஒருநாள் காலை 8மணி வெயில் லேசாக வரத்தொடங்கியிருக்கிறது. சென்னை சுறுசுறுப்பாக புதிய நாளைத் தொடங்குகிறது. செவ்வாய்கிழமை, லட்சக்கணக்கானவர்கள் வேலைக்கும், பள்ளி அல்லது கல்லூரிக்கும் கிளம்பிக்கொண்டு இருக்கின்றனர். வழக்கமான வேலை நாள். சரியாக 8மணிக்கு சென்னை சென்டரல் ரயில் நிலையத்தின் மீது ஓர் அணுகுண்டு போடப்படுகிறது. 16கிலோ டன் குண்டு – கிட்டத்தட்ட ஹிரோஷிமா மீது போடப்பட்ட குண்டைப் போன்றது. 1998 மே 11ம் …

Read More »

பறவைக் காய்ச்சல்: ஜீவகாருண்யம் கிலோ என்ன விலை?

ஏவியான் ஃப்ளூ வைரஸால் பறவைக் காய்ச்சல் பீதி ஒரு பக்கமிருக்க இன்னொரு பக்கம் தங்கள் வாழ்வாதாரம் நசிந்துவிடுமோ என்ற பீதியில் கோழிப்பண்ணை உரிமையாளர்களும் அவற்றை நம்பி தொழில் நடத்துபவர்களும் “சிக்கன் மேளா” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பறவைக் காய்ச்சல் பீதிக்கு முன் கிலோ 75-85 ரூபாய்க்கு விற்கப்பட்ட கறிக்கோழிகள் கிலோ 15/= என்றளவுக்கு சரிந்தது. கோழி முட்டை கிலோக் கணக்கில் விற்கப்பட்டதும், வீடு வீடாக எடுத்துச் சென்றும் தெருவில் கூவி விற்கப்பட்டன. …

Read More »

தீர்ப்பு :: பெஸ்ட் பேக்கரி படுகொலைகள்

இந்தியாவை உலுக்கிய பெஸ்ட் பேக்கரி படுகொலைகள்:வெறியர்களுக்கு ஆயுள் தண்டனை மும்பை நீதிமன்றம் தீர்ப்பு காவி கேடிகளால் குஜராத் இனப்படுகொலையில் 14 பேர் கொளுத்தி கொல்லப்பட்ட பெஸ்ட் பேக்கரி நிகழ்வை யாராலும் மறக்க முடியாது. அந்த வழக்கு குஜராத் மாநில வடோதரா விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்ட 21 பேரும் விடுவிக்கப்பட்டனர். இது இந்திய அளவில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. உறவினர்களை கொழுந்து விட்டு எரிந்த நெருப்பில் பரிகொடுத்த அபலைப் …

Read More »

வேண்டாம் அணுத்திமிர்!

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் புஷ் ஆகிய இருவரும் இரு நாடுகளின் ஒப்பந்தமாக அணுசக்தி பிரச்சனை பற்றிய பேச்சு வார்த்தையில் நல்லதொரு உடன்படிக்கையை எட்டியிருக்கிறார்கள். – அணுசக்தியை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தி, அழிவை நோக்கி அகிலத்தை மிரட்டும் அணு(ஆயுத)த்திமிர் ஏற்படாதவரை – இது மிகவும் வரவேற்கத்தக்க, நாட்டுக்கு நலனைத்தரும் நல்ல விஷயம்தான் – உலக நாடுகள் அனைத்தும் அணுத்திமிரை கைவிட வேண்டும். அன்புடன்,அபூ முஹை அணு பேரழிவு…ஆயுதமாக …

Read More »