Featured Posts
Home » 2007 (page 53)

Yearly Archives: 2007

குர்ஆனிய வசனங்கள் சில மறந்துவிடுதல் பற்றி..

451.ஒருவர் இரவு நேரத்தில் ஓர் அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருப்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன இன்ன அத்தியாயங்களிலிருந்து எனக்கு மறக்க வைக்கப்பட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டி விட்டார்” என்று கூறினார்கள். புஹாரி:5038 ஆயிஷா (ரலி) 452.குர்ஆனை(ப் பார்த்தோ மனப்பாடமாகவோ) ஓதுகிறவரின் நிலையெல்லாம், கயிற்றால் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தின் உரிமையாளரின் நிலையை ஒத்திருக்கிறது. அதனை அவர் கண்காணித்து வந்தால் தன்னிடமே அதை அவர் தக்கவைத்துக் …

Read More »

நீங்கள் சிறுபான்மையினரா அல்லது பெரும்பான்மையினரா?

மாயமில்லை! மந்திரமில்லை!! நீங்கள் 2% சிறுபான்மையினரில் ஒருவரா அல்லது 98% பெரும்பான்மையினரில் ஒருவரா என்று சோதிக்கும் எளிய கணக்கு! மின்மடலில் வந்தது. சற்று ஆச்சரியமானதும் கூட!! நீங்களும் முயன்று பாருங்களேன். அதற்குமுன், கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் ஒவ்வொன்றாக பதில் சொல்லுங்கள். முதல் கேள்விக்கான பதில் சொல்லும்வரை அடுத்த கேள்விக்குச் செல்லக் கூடாது. விரைவாக பதில் சொன்னால் உங்கள் புருவங்கள் விரைவில் ஆச்சரியத்தால் உயரும் என்பதற்கு 100% உத்திரவாதம்! அ) ஒன்று …

Read More »

தொழுகையில் தாம் எதை ஓதுகிறோம் என்ற உணர்வுடன்

448.நபி (ஸல்) அவர்கள் (பள்ளிக்கு) வந்தபோது இரண்டு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. ‘இந்தக் கயிறு ஏன்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘இது ஸைனபு (ரலி)க்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றில் சாய்ந்து கொள்வார்’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கூடாது. இதை அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகத்துடன் இருக்கும்போது தொழ வேண்டும். …

Read More »

அன்பின் நண்பன்

அன்பின் அபூமுஹை, வேலைப்பளு காரணமாக, வெறும் இணைப்புகளை மட்டும் கொடுத்து விட்டு, வேறு எதுவும் எழுத முடியாமல் போய்விட்டது. குரான் மொழி பெயர்ப்பில், சிறந்தவை எனவும், ஆதாரப்பூர்வமானது என அங்கீகாரம் பெறப்பட்டதுமான மொழி பெயர்ப்புகளைத் தான் நான் கொடுத்துள்ளேன். அவர்களில் ஒருவரின் வரலாறு மிகவும் சுவையானது. அவர் – பிக்தால். வில்லியம் மர்மட்யூக் பிக்தால். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் குரானை இவர் தான் செய்தார். அர்த்தங்களைத் தான் தன்னால் …

Read More »

காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி..

442.நபி (ஸல்) அவர்களிடம் காலை விடியும் வரை (தொழுகைக்கும் எழுந்திருக்காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அந்த மனிதரின் இரண்டு காதுகளிலும் – அல்லது அவரின் காதில் – ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று பதிலளித்தார்கள். புஹாரி:3270 இப்னு மஸ்வூத் (ரலி) 443.நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் என்னிடமும் ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் வந்தார்கள். ‘நீங்கள் இருவரும் தொழவில்லையா? என்று கேட்டார்கள். அப்போது …

Read More »

kaaba புனித ஆலயம்.

மக்காவில் அமைந்துள்ள காபத்துல்லாஹ் எனும் இறையில்லம் முஸ்லிம்களின் முதன்மை வணக்கத்தலமாகத் திகழ்கிறது. இது மிகவும் தொன்மையான ஆலயம். ”பழமையான அந்த ஆலயத்தை அவர்கள் தவாஃப் செய்யட்டும்” (022:029) ”மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம்” (003:096) என்று திருக்குர்ஆன் சான்று பகர்கின்றது. இங்கு காபத்துல்லாஹ்வின் வரலாறு பற்றி எழுதும் நோக்கமல்ல. சவூதி அரபியா நாட்டில் மக்கா எனும் நகரத்தில் அமைந்த இந்த இறையில்லம், உலக முஸ்லிம்களுக்கு தொழும் திசையாக இருக்கிறது. முஸ்லிம்கள் …

Read More »

இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல்.

437-நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்து தம் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்கிக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவிடாமல், நடுநிலையாக அங்கசுத்தி (உளூ) …

Read More »

ரமலானில் இரவுத் தொழுகை.!

435-‘நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். புஹாரி:36 அபூஹூரைரா (ரலி). 436-நபி (ஸல்) அவர்கள் நள்ளிரவில் (வீட்டைவிட்டுப்) புறப்பட்டுப் பள்ளியில் தொழுதார்கள். சிலர் அவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழலானார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறுநாள்) அதை விட அதிகமானவர்கள் திரண்டு நபி …

Read More »

பாரதியாரை அவமதிப்பவர்கள் யார்?

“பாரதி இஸ்லாமிய அடிப்படைவாத வட்டங்களில் எப்பொழுதுமே இழிவு படுத்தி பேசப்படுபவர்தாம்…பாரதியைக்கூட நம்மால் அவமானப் படுத்தப் படுவதிலிருந்து தடுக்க முடியவில்லை என்றால் தமிழர் என நம்மை சொல்வதிலேயே பொருள் இல்லை.” – உணர்வுகள் என்ற வலைப்பதிவரின் பதிவில் இப்படி ஒரு அபாண்டத்தைச் சுமத்தியிருப்பவர், இதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் அரவிந்தன் நீலகண்டன். “நம்மால் அவமானப் படுத்தப் படுவதிலிருந்து தடுக்க முடியவில்லை“எங்கிருந்தய்யா வந்தது இந்தத் திடீர் “நம்மால்” பாசம்? 3000 ஆண்டுகளுக்கு முன்வந்திருக்கக் …

Read More »

இரவுத் தொழுகையின் சிறப்பு!

434-‘நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்’. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1145 அபூஹூரைரா (ரலி).

Read More »