Featured Posts
Home » 2007 » January (page 2)

Monthly Archives: January 2007

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? (Dr. அஷ்ரஃப்)

மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நாள்: 15-09-2006  –  இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாயியா, ஜித்தா மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ (தலைப்பு: நிகழ்ச்சியின் நோக்கம்) சிறப்புரை: மௌலவி டாக்டர் அஷ்ரஃப் ஹதீஸ் கலை வல்லுனர் மற்றும் பேராசிரியர், மன்னர் காலித் பல்கலைக்கழகம், அப்ஹா, சவுதி அரேபியா

Read More »

நபியின் எளிய வாழ்க்கை.

தருமி அவர்களே, நீங்கள் அடிக்கடி எம்மை நினைவுபடுத்திக் கொள்கிறீர்கள் நன்றி! உங்களின் மறுமொழியை அனுமதித்தேன். தொழில் நுட்பக் கோளாறோ என்னவோ தெரியவில்லை, மறுமொழி சம்பந்தப்பட்ட பதிவில் வெளி வரவில்லை. மீண்டும் அனுமதித்துப் பார்த்தேன் இது ஏற்கெனவே வந்து விட்டதென்று ஏற்க மறுத்து விட்டது. நீங்கள் கேள்வியாக வைத்திருப்பதால், விளக்கத்தைத் தனிப் பதிவில் சொல்லலாமே என்று இப்பதிவு! உங்கள் மறுமொழி… Dharumi has left a new comment on your …

Read More »

குடியரசு தின உறுதிமொழி

ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் “2020 ஆம் ஆண்டில் வல்லரசு இந்தியா” கனவு கூடிய விரைவில் நனவாகும் சாத்தியக் கூறுகள் தென்படத் துவங்கியுள்ளன. பாதுகாப்பு ரீதியில் வல்லரசாகும் முன் பொருளாதார ரீதியில் தற்போதைய வல்லரசுகளை இன்னும் பத்தாண்டுகளில் பின்னுக்குத் தள்ளிவிடும் என்ற செய்தி 58 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்தியர்களின் காதில் தேன் வார்க்கும் என்றால் மிகையில்லை! In 10 years, India’s GDP will surpass UK’s …

Read More »

தொழுகைக்கு தக்பீர் கட்டியதும் என்ன ஓதுவது?

349– நபி (ஸல்) அவர்கள் தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சற்று நேரம் மவுனமாக இருப்பார்கள். அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தாய் தங்களுக்கு அர்ப்பணம். தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மவுனமாக இருக்கும் சமயத்தில் என்ன கூறுவீர்கள்? என்று நான் கேட்டேன். இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போல், எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப் படுவது போல் என் …

Read More »

தொழுகையை முடித்ததும் செய்யும் திக்ருகள்..

347– வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத் தவிர எவரும் இல்லை. அவன் ஏகன் அவனுக்கு நிகராக எவருமில்லை. ஆட்சி அவனுக்குரியது. புகழும் அவனுக்குரியது. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. எந்த மதிப்பு உடையவனும் உன்னிடம் எந்தப் பயனும் அளிக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் கூறக் கூடியவர்களாக இருந்தனர். புஹாரி-844: …

Read More »

ஸூஃபிகள் கொடுக்கும் தட்டு, தகடு, தாயத்து!

ஸூஃபியிஸம்: இக்கொள்கையை உடையவர்கள் தங்களின் ஸூஃபிகள் கொடுத்த தட்டு, தகடு, தாயத்து போன்றவற்றை ஆபத்து, சிக்கல்களிலிருந்து பாதுகாவல் பெறுவதற்காக பயன்படுத்துகின்றனர்.

Read More »

அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரும் விஷயங்கள்..

344– நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் பாதுகாப்புத் தேடுவதை நான் செவியுற்றுள்ளேன். புஹாரி-833: ஆயிஷா (ரலி) 345– இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபி (ஸல்) …

Read More »

பெற்றோர்களின் கடமைகள்

7-ஆம் ஆண்டு இஸ்லாமிய கருத்தரங்கம், ரஹீமா, சவுதி அரேபியா நாள்: 24.11.2006 வழங்குபவர்: மௌலவி ஜமால் முஹம்மத் மதனி

Read More »

‘இல்லை’ என்பதா பகுத்தறிவு?

தீவிர கடவுள் மறுப்பாளராக இருந்த பெரியார். ஈ.வெ.ராமசாமி அவர்களிடம் ஒரு ஆத்திகர், “ஐயா! கடவுள் இல்லை என்கிறீர்களே! ஒருநாள் கடவுள் உங்கள் முன் தோன்றி நான்தான் கடவுள் என்றால் என்ன செய்வீர்கள்?” என்றதற்கு, பெரியார் “கடவுள் உண்டு என்பேன்!” என்றாராம்! கடவுள் இல்லை எனும் நாத்திகர்கள் “லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்” என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான “வணக்கத்திற்குரிய கடவுள் இல்லை; அல்லாஹ் ஒருவனைத் தவிர!” என்ற நம்பிக்கையில் முதல் …

Read More »