Featured Posts
Home » 2020 (page 28)

Yearly Archives: 2020

ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் (தொடர்-2)

அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற நேரமாகும். இந்த நேரத்தை தேவையற்ற பேச்சுக்கள், மற்றும் வீணான விளையாட்டுக்களைக் கொண்டு வீணடிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. இஷாத் தொழுகைக்குப் பின் தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடுவது. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதிவரைத் தாமதப்படுத்துவார்கள். இஷாத் தொழுகைக்கு முன் …

Read More »

முகத்தால் நடப்பவன்!

முகம் மனித உடலில் ஒரு முக்கியப் பகுதியாகும். தலையின் முன் பகுதியாக அமைந்திருப்பது முகம். பலவித புலன்களுக்குரிய உறுப்புக்கள் அதாவது பார்க்கும் திறன்கொண்ட கண், உயிர் வாழச் சுவாசிக்கும் திறன்கொண்ட மூக்கு, கேட்கும் திறன்கொண்ட காது, உண்ணுபதற்கும் அழகாகப் பேசுவதற்கும் பயன்படுத்தப்படும் வாய், அழகிய தோற்றத்தை வெளிப்படுத்தும் கன்னங்கள், இன்னும் சிரம் பணிவதில் முதலிடம் வகிக்கும் நெற்றி, போன்ற முக்கிய உருப்புக்களைக் கொண்டது முகம். மனிதன் தன் குணம் சார்ந்த சில உணர்ச்சிகளைத் தனது முகத்தின் மூலமாக வெளிப்படுத்துவதால் …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் முஃஜிஸாவும் கராமத்தும்

– அல் ஹாபிழ் இன்திகாப் உமரி 1) முஃஜிஸா என்றால் என்ன..? நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நுபுவ்வத்தை உண்மைப்படுத்தும் முகமாக அவ்வப்போது செய்து காட்டிய அற்புத நிகழ்வுகள் முஃஜிஸாவாகும். இதை பொறுத்த வரை எந்த நபியும் சுயமாக எந்த அற்புதத்தையும் செய்ய வில்லை அவ்வாறு அவர்களால் சுயமாக செய்யவும் முடியாது அதே சமயம் தன்னால் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்று எந்த ஒரு நபியும் வாதிடவுமில்லை அல்லாஹ்வின் கட்டளை …

Read More »

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்

எம்.ஏ. ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையில் நடைபெற்ற முதல் போராட்டமான பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் மகத்தான மாற்றத்தையும், புரட்சிகரமான திருப்பத்தையும் ஏற்படுத்தியது. நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஏற்பட்ட பலப்பரீட்சையில், சத்தியத்திற்காகப் போராடியோர் சிறு குழுவினராக இருந்து கொண்டே அசத்தியத்திற்காகப் போராடியோரைத் தமது இறை நம்பிக்கையின் வலிமையால் தோற்கடித்தனர். சத்திய ஒளிக்கும் அசத்திய இருளுக்கும் இடையே நடந்த இப்போரில் இருளை ஒளி வெற்றிகொண்டுவிட்டது. இஸ்லாமியப் போர்கள் தொடர்பாக …

Read More »

பஞ்சமான காலத்தை எதிர்கொள்ள நபி யூஸுப் அலை அவர்கள் கையாண்ட நிர்வாக முறைகள்

அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ (சற்று நீளமான கட்டுரை இன்றைய காலத்துக்கு தேவையான அறிவுரை) பொருளாதாரத்தில் உச்சத்தை நாம் தொட்டு விட்டோம், தன்னை மிஞ்ச யாருமில்லை, நாம் நினைத்தால் யாரையும் வீழ்த்தி விடலாம், என அமெரிக்கா , சீனா, இஸ்ரேல் , ஈரான் போன்ற வல்லரசு நாடுகள் மார்தட்டிக் கொண்டிருந்த வேலையில் உலக மக்களின் உயிர்களை மாத்திரமின்றி பொருளாதரத்தையும் ஆட்டம்காண வைக்க இப்பூமிக்கு சோதனையாக இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட அணு அளவே …

Read More »

நவீனக் கொள்கைக் குழப்பங்களிலிருந்து எமது ஈமானைப் பாதுகாத்துக் கொள்வோம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.. அன்பார்ந்த சகோதரர்களே..!அல்லாஹ்வால் இறுதித் தூதராக இந்த பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்ட முஹம்மதுர் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவத்தை சரிவர நிறைவேற்றி எம்மை நேரான வெண்மையான பாதையில் விட்டுச் சென்றார்கள். அதன் இரவு கூட பகலைப் போன்றதாகும் . நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வபாத்திற்க்குப் பின்னர் நபித்தோழர்களின் காலத்திலேயே இஸ்லாத்தின் பெயரால் பல வழிகேடுகள் தோற்றம் பெற ஆரம்பித்து விட்டன. இது …

Read More »

ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் (தொடர்-1)

ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற நேரமாகும். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இந்த இரவு நேரத்தை பல அமற்களைக் கொண்டு அலங்கரித்துள்ளார்கள். எனவே இவ்வாக்கத்தில் நபிகளாரின் இரவு நேர அமற்களைப் பற்றிய சிறு தொகுப்பை உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன். நபிகளாரின் வாழ்நாளில் இஷா தொழுகையின் பின் சுன்னத்துக்குப் பிறகு அவர்கள் செய்துள்ள காரியம் என்ன என்று நாம் தேடினோம் எனில் இரவுத்தொழுகையை அவர்கள் …

Read More »

கஃபாவை அண்மித்த பகுதிகளை விட்டும் மக்கள் தடுக்கப்பட்டமை மறுமை நாளின் அடையாளமா..?

அண்மையில் சில தினங்களுக்கு முன் உம்ராவுக்காக மக்கள் வெளிநாடுகளில் இருந்து மக்காவுக்கு வருவதையும் கஃபாவை அண்மித்த பகுதிகளில் வணக்கங்களில் ஈடுபடுவதையும் பாதுகாப்பு மற்றும் சுகாதார வேலைகளுக்காக சவுதி அரசு தடை செய்ததை முன்னிட்டு சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் இது மறுமையின் அடையாளங்களில் ஒன்று என்ற ஒரு பதிவு வேகமாக பரவி வருவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் நெருங்கி வரும் மறுமையின் சிரிய பெரிய அடயாளங்களை …

Read More »

உணவளிப்பவன் (பகுதி: 02)

மனிதனின் முதல் தேவை உணவுதான் என்பதையும், அந்த உணவைப் பெற்றுக் கொள்வதற்கான வழியை இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கின்றான் என்பதையும் சென்ற தொடரில் பார்த்தோம். எந்த உயிரினமும் தம் உணவைத் தாமே சுமந்துகொண்டு திரிவதில்லை! மாறாக மனிதர்களுக்கும் இன்னும் பிற உயிரினங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கின்றான் என்பதாக அல்குர்ஆன்:-29:60 வசனம் கூறுகின்றது. இதன் விளக்கத்தை அறிவதற்கு முன் இதற்கு முன்னுள்ள நான்கு வசனங்களின் விளக்கத்தையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். அதாவது அல்குர்ஆன் 29:56,57,58,59,60. ஆகிய ஐந்து வசனங்களுக்கும் பின்னணியில் முக்கியமான …

Read More »

சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 5)

எம்.ஏ.ஹபீழ் ஸலபி இதுவரை சிறுபான்மை சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் எவ்வாறு அமைந்திருந்தது தொடர்பாக நோக்கினோம். முஸ்லிம் ஆட்சியில் பிற இன சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை இத்தொடர் விளக்குகிறது. அந்நிய சமூகத்துடன் அண்ணல் நபியின் அழகிய அணுகுமுறைகள் இந்த உலகத்தில் அரசியல், ஆன்மிகம், சமூகவியல்  ஆகிய துறைகளில் ஒரு சேர மகத்தான வெற்றிபெற்று, அழுத்தமான தாக்கத்தை எற்படுத்தி, அளப்பெரிய செல்வாக்குடன் வாழ்ந்து,  அழியாப் புகழ் பெற்றவர்களில் இறுதித் துாதர் முஹம்மது …

Read More »