Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » சத்தியத்திற்காகச் சோதனைகளைச் சந்திப்போர் இருக்கின்ற பாதையே சரியான பாதையாகும்! [உங்கள் சிந்தனைக்கு… – 012]

சத்தியத்திற்காகச் சோதனைகளைச் சந்திப்போர் இருக்கின்ற பாதையே சரியான பாதையாகும்! [உங்கள் சிந்தனைக்கு… – 012]

அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“(சத்தியத்திற்காகச் சோதனைகளைச் சந்திப்போர் இருந்து வருகின்ற) பாதையே சரியான பாதையாகும்!. இப்பாதையில்தான் ஆதம் (அலை) அவர்கள் களைப்படைந்தார்கள்; இந்த சத்தியத்திற்காக வேண்டித்தான் நூஹ் (அலை)அவர்கள் கடும் கஷ்டங்களை அனுபவித்தார்கள்; ‘அல்லாஹ்வின் தோழர்’ என்றழைக்கப்படும் இப்ராஹீம் (அலை) அவர்களும் நெருப்பில் எறியப்பட்டார்கள்; அறுவைக்காக இஸ்மாஈல் (அலை) அவர்கள் பூமியில் மல்லாக்கக் கிடத்தப்பட்டார்கள்; அற்ப விலைக்கு யூசுப் (அலை) அவர்கள் விற்கப்பட்டு, சில வருடங்கள் சிறையிலே தங்கினார்கள்; ஸகரிய்யா (அலை)அவர்கள் வாளால் அரியப்பட்டார்கள்; கண்ணியத்திற்குரியவராகவும், ஒழுக்க நெறியுடையவராகவும் இருந்த யஹ்யா (அலை) அவர்கள் அறுக்கப்பட்டார்கள்; நோயின் தீங்கையெல்லாம் அய்யூப் (அலை) அவர்கள் தாங்கிக் கொண்டு, தாவூத் (அலை) அவர்களது அழுகையின் அளவைவிட தனது அழுகையை அதிகப்படுத்திக்கொண்டார்கள்; ஈசா (அலை) அவர்கள் தனிமையுடன் பயணித்தார்கள்; வறுமைக்கும், பலவிதமான தொல்லைகளுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் கொடுத்து அதற்கான சிகிச்சையையும் அளித்தார்கள்! மனிதா! நீயோ வீண் விளையாட்டுக்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றாய்!!
{ நூல்: ‘அல்பfவாஇத்’, பக்கம்: 42 }

قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
[ الطريق طريق تعب فيه آدم، وناح لأجله نوح، ورمي في النار الخليل، وأضجع للذبح إسماعيل، وبيع يوسف بثمن بخس ولبث في السجن بضع سنين، ونشر بالمنشار زكريا، وذبح السيد الحصور يحي، وقاسى الضّرّ أيوب وزاد على المقدار بكاءا داود، وسار مع الوحش عيسى، وعالج الفقر وأنواع الأذى محمد، وتزهو أنت باللّهو واللّعب!! ] {الفوائد لابن القيم ، ص – ٤٢ }

தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *