Featured Posts

Recent Posts

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2)

தௌபா – பாவமீட்சி தேடல் இறைமார்க்க அறிஞர்கள் கூறுவர்: அனைத்துப் பாவங்களில் இருந்தும் பாவமீட்சி தேடுவது கடமையாகும். மனித உரிமையுடன் தொடர்பில்லாமல் – மனிதனுக்கும் இறைவனுக்கும் மத்தியிலான பாவமாக இருந்தால் அதிலிருந்து மீட்சி பெறுவதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன. அந்தப் பாவத்திலிருந்து முற்றாக விடுபடுதல் அதனைச் செய்தது குறித்து வருந்துதல் இனி எப்போதும் அந்தப் பாவத்தைத் திரும்பச் செய்வதில்லை என்று உறுதி கொள்ளல் இந்த மூன்று நிபந்தனைகளில் ஒன்று விடுபட்டால் …

Read More »

நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்-2

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் ஷமீம் ஸீலானி. தலைப்பு: நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்-2 (தஜ்ஜால் வருகையும் குழப்பமும்) நாள்: 25-06-2010 இடம்: அல்-ஜுபைல் துறைமுகப் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா அல்-ஜுபைல் வெள்ளி மேடை-61 Download mp3 audio – Size: 14.4 MB

Read More »

நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்-1

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் ஷமீம் ஸீலானி நாள்: 28-05-2010 இடம்: அல்-ஜுபைல் துறைமுகப் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா அல்-ஜுபைல் வெள்ளி மேடை-57 Download mp3 audio – Size: 14 MB

Read More »

புனித வேதங்களின் வெளிச்சத்தில் கடவுள் கொள்கை

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் Vs Dr. ஜாகிர் நாயக் – பெங்களூர் விவாதம் Islamic Research Foundation இயக்குனரும், இஸ்லாமிய பிரச்சாரகருமான டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் “Art of Living” என்ற அமைப்பின் நிறுவனரும் இந்துமத விற்பன்னருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் பங்குகொண்ட கருத்துப் பரிமாற்ற அரங்கத்தின் தமிழ் வடிவம். நாள்: 21-01-2006 Your browser does not support the video tag. Download mp4 Video Size: …

Read More »

மிஃராஜ் உருவாக்க விரும்பிய சமூக அமைப்பு

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) சமூகக் கட்டமைப்புச் சீராக அமைய சமூகத் தொடர்புகள் சீர்பெற வேண்டும். இந்த வகையில் சமூகத் தொடர்பில் அயலவர்கள் முக்கியமானவர்களாவர். குடும்பங்கள் அருகருகே வசிக்கும் போது அந்தக் குடும்பங்களுக்கு மத்தியில் சீரான தொடர்பாடல் இருக்க வேண்டும்.

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-12)

12. பாறையை அகற்றிய பிரார்த்தனைகள்! அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்)அவர்கள் இவ்வாறு கூறிட நான் கேட்டுள்ளேன்: ‘உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பேர் (ஒருபாதை வழியே) நடந்து சென்றனர். ஒருகுகையில் இரவு தங்க வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாயினர். அவர்கள் குகையினுள் சென்றதும் மலையிலிருந்து ஒருபாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்துக் கொண்டது. அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்: நாம் செய்த நல்ல அமல்களின் …

Read More »

துணிந்து நின்றால் பணிந்து வருவார்கள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) நபி(ஸல்) அவர்களது வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சிகளில் இஸ்ரா-மிஃராஜ் பயணம் முக்கியமானதாகும். ஒரே இரவில் நபி(ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீல் மூலமாக மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹறாமில் இருந்து பலஸ்தீனில் உள்ள பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்நிகழ்வு ‘இஸ்ரா’ என அழைக்கப்படுகின்றது.

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-11)

11 –  ஏராளமான நன்மைகளைப் பெறுவது எப்படி? அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருட்பேறும் உயர்வும் மிக்கவனாகிய தம் இறைவன் கூறியதாக அருளினார்கள்: ‘திண்ணமாக அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் பதிவு செய்து விட்டான்’ பிறகு அதற்கு விளக்கம் அளித்தார்கள்: ஒருவன் ஒரு நன்மையை நாடினால் அதனை அவன் செயல்படுத்தாவிட்டால் அல்லாஹ் அதனைத் தன்னிடத்தில் முழுமையானதொரு நன்மையாகப் பதிவு செய்து கொள்கிறான். மேலும் ஒருவன் நன்மை செய்ய …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-10)

10. ஜமாஅத்துடன் தொழுவது கடமையே! அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் ஜமாஅத்துடன் நிறைவேற்றும் தொழுகை, அவர் தனது வீட்டில் தொழும் தொழுகையை விடவும் தனது கடைத்தெருவில் தொழும் தொழுகையை விடவும் இருபதுக்கும் அதிகமான அந்தஸ்துகளைப் பெறுகிறது. அதற்குக் காரணம், ஒருவர் அழகாக உளூ செய்துகொண்டு பிறகு பள்ளிவாசல் நோக்கி வருகிறார் எனில் – தொழுகையைத் தவிர வேறதுவும் அவரை வெளிக்கிளப்பவில்லை என்றிருந்தால், …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-9)

9. இருவரும் குற்றவாளிகளே! அபூபக்ரா நுஃபையிப்னு ஹாரிஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்: இரண்டு முஸ்லிம்கள் தங்களின் வாட்களைக் கொண்டு மோதிக் கொண்டார்கள் எனில் கொல்பவனும் கொல்லப்படுபவனும் நரகம்தான் செல்வர். நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! இவனோ கொலை செய்தவன். கொலை செய்யப்பட்டவனின் நிலை என்ன? (அவன் ஏன் நரகம் செல்லவேண்டும்?) அதற்கு நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: நிச்சயமாக அவன் தன் சகோதரனைக் கொலை செய்யப் பெரிதும் ஆசைப்பட்டவனாக …

Read More »