Featured Posts

Recent Posts

கஸ்ஸா நகரின் கோரக் காட்சிகள்!

பஹ்ரைன் ஸல்மானியா மெடிக்கல் சென்டரிலிருந்து கஸ்ஸாவுக்கு மருத்துவ சேவைக்குச் சென்று திரும்பியுள்ள டா க்டர் அலி அல் இக்ரி மற்றும் நபீல் தம்மாம் ஆகியோர் கூறிய செய்திகள் கல்நெஞ்சங்களையும் கரையச் செய்வதாய் உள்ளன.விமான நிலையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இருவரும் கூறிய செய்திகளாவன.

Read More »

பிறரைப் புகழ்ந்து பேசுதல்.

1888. ஒருவர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி (ஸல்) அவர்கள், ‘அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர்” என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, ‘தன் சகோதரனைப் புகழ்ந்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உங்களில் இருப்பவர், இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன். அல்லாஹ் (உண்மை நிலையை …

Read More »

ஒரு மூமின் இருமுறை கொட்டுப்பட மாட்டான்.

1887. இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6133 அபூ ஹுரைரா(ரலி) .

Read More »

எலிகளாக உருமாற்றப் பட்டோர்.

1886. பனூ இஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டு விட்டதாக)வே கருதுகிறேன். அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக் குடித்து விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் அவர்கள் சொன்னார்கள். இதை நான் கஅபுல் அஹ்பார் (ரலி) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், …

Read More »

கொட்டாவி வந்தால்….

1885. கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்தவரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் ‘ஹா’ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3289 அபூஹுரைரா (ரலி).

Read More »

தும்மலின் போது….

1884. நபி (ஸல்) அவர்களுக்கருகில் இரண்டு மனிதர்கள் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) அவர்கள் (‘யர்ஹமுகல்லாஹ் – அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக’ என்று) மறுமொழி கூறினார்கள். மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லை. அப்போது அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘இவர் (தும்மியவுடன்) ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று இறைவனைப் புகழ்ந்தார். அவர், ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று இறைவனைப் புகழவில்லை. (எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். அவருக்கு மறுமொழி பகரவில்லை)” என்று …

Read More »

மறுமை நாள் (அத்தியாயம்-7)

உலக அழிவும், மறுமை நாளின் தோற்றமும். மறுமை நாளின் தோற்றம் இவ்வுலகின் அழிவோடு ஆரம்பமாகும் என அல்குர்ஆனும், ஸுன்னாவும் விளக்குகின்றன. அதாவது அது இன்னொரு உலகின் தோற்றம். மனிதனின் இன்னொரு வாழ்வின் ஆரம்பம். அது பிரபஞ்சத்தின் வித்தியாசமான இன்னொரு தோற்றப்பாடு. மனிதனுக்கு அது வித்தியாசமான இன்னொரு வாழ்வு! இரு கட்டங்களின் பிறகு மனிதனின் அந்த இரண்டாவது வாழ்வு உருவாகும் என அல்குர்ஆனும், ஸுன்னாவும் விளக்குகின்றன. ஒன்று இவ்வுலகின் அழிவு. மற்றொன்று, …

Read More »

ஒரு ஜோடி போதாது!

கடந்த மூன்று வாரங்களாக பாலஸ்தீனர்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இஸ்ரேலின் அடக்குமுறைகள், அநியாயங்கள், அராஜகங்கள், கொடுமைகள், படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு மற்றும் என்னென்ன மனிதகுலவிரோதச் செயல்கள் உண்டோ அத்தனையையும் செய்துமுடித்துக் களைத்துத்துப்போய், தற்போது போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இதை உலகநாடுகள் வரவேற்றுள்ளதோடு நிதியுதவிகளும் நிவாரணமும் வழங்க ஆயத்தமாகியுள்ளன. புதிய உலக ரட்சகனாகப் பேசப்படும் ஒபாமா, தன் பங்குக்கு நிவாரணம் அறிவிக்கக்கூடும். முதற்கட்டமாகப் போர் நிறுத்த அறிவிப்பை ஒபாமா வரவேற்றுள்ளார். இதோ கவுண்டவுன் …

Read More »

நல்லதை ஏவி தீயதைத் தடுத்தல்.

1882. உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் இன்னாரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆயிற்றே!)” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நான் உங்கள் எதிரில் உங்களுக்குக் கேட்கும்படி (பொதுவான விஷயங்களை)யே தவிர அவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்குக்) கதவைத் திறந்து விடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே பேசுகிறேன். (ஏனெனில், …

Read More »

ஃபலஸ்தீன் – தொடரும் யூத பயங்கரவாதம்!

மோசடி, சூழ்ச்சி, துரோகம், நயவ ஞ்சகம் இவற்றுக்குப் பெயர்போனவர்கள் யூதர்கள் என்றால் மிகையாகாது. வரலாறு நெடுகிலும் இத்தகைய குணம் கொண்ட யூதர்கள் இன்று உலகிலேயே மிகப் பெரிய பயங்கரவாத சக்திகளாக விளங்குகின்றனர். “உங்களைக் கடுமையாக நோவினை செய்து, உங்கள் ஆண்மக்களை அறுகொலை செய்து உங்கள் பெண்மக்களை மட்டும் வாழ விட்ட ஃபிர்அவ்னிடமிருந்து உங்களைக் காப்பாற்றினானே அதை நினைத்துப் பாருங்கள்” (2:49) என்று அல்லாஹ் இந்த யூதர்களுக்குச் செய்த அருட்கொடையை நினைவூட்டிய …

Read More »