Featured Posts

Recent Posts

நோயாளியைக் காணச் சென்றால்….

1414. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச்) சென்றால்’ அல்லது ‘நோயாளி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால்’ அவர்கள், ‘அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஃபாஅ இல்லா ஃபாஉக்க, ஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்” என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை …

Read More »

விஷமூட்டுதல்.

1413. யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். ‘அவளைக் கொன்று விடுவோமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், ‘வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். புஹாரி : 2617 அனஸ் (ரலி).

Read More »

இறைவேதத்தை விடுத்து வேறு புனித நூல்கள் உண்டா?

ஆம், உண்டு! அதுவே, முன்மாதிரியாக அமைந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறை! அரபிமொழி வழக்கில் இது ஸுன்னாஹ் எனப்படுகின்றது. அதாவது, முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் கடைப்பிடித்தவை, கூறியவை, அங்கீகரித்தவை, அவரது குணநலன்கள் அனைத்தும் இதனுள் அடங்கும். திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக, முஸ்லிம்களுக்கு பின்பற்றத்தக்க சிறந்த வழிமுறையாக அமைந்தது இதுவே! ஸுன்னாஹ் எனப்படுகின்ற முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையை நம்புவதும், அதனைப் பின்பற்றுவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியே! …

Read More »

கண் திருஷ்டி, சூன்யம் பற்றி….

1411. நபி (ஸல்) அவர்கள், ‘கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே” என்று கூறினார்கள். புஹாரி :5740 அபூஹூரைரா (ரலி). 1412. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ‘பனூஸுரைக்’ குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமை ஊட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் ‘ஒரு நாள்’ அல்லது ‘ஓரிரவு’ என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது …

Read More »

பணவீக்கமும் அரசியல் கணக்கீடுகளும்

கடந்த பதிமூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு நம்நாட்டின் பணவீக்கம் 10-12% அளவுக்கு உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி ஏறி, சகல தரப்பினரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மத்திய காங்கிரஸ் அரசு, பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறி கொண்டே, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. இவற்றை முன்வைத்து நடத்தப்படும் அரசியல் கணக்கீடுகளைக் அலசி தேசபக்தர்களை அடையாளம் காண்போம்! பணப்புழக்கம் அதிகமாகி,பணத்தின் கொள்வினை மதிப்புக் குறைந்து (Buying Capacity) விலைவாசி கூடுவதை பணவீக்கம் …

Read More »

மூவரில் இருவர் ரகசியம் பேசுதல் கூடாது.

1409. நீங்கள் மூவர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :6288 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) . 1410. நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்; நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும்வரை! ஏனெனில், (அவ்வாறு மூன்று பேர் இருக்கும்போது இருவர் மட்டும் பேசுவது) மூன்றாமவரை வருத்தமடையச் செய்யும் என …

Read More »

இதுதான் இஸ்லாம் (பகுதி-6)

ஜக்காத் கொடுத்தல் அல்லாஹ் குர்ஆனில் எங்கெல்லாம் தொழுகையை நிலைநாட்டுமாறு கூறுகின்றானோ அங்கெல்லாம் தொழுகையுடன் சேர்த்து ஜக்காத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகின்றான். ஜக்காத் என்பது வருடந்தோறும் வசதியுடையோர் தம் கைவசம் உள்ள பணம் நிலம் மற்றும் தங்க வெள்ளி அணிகலன்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ள வரையறைக்கு மேலாக உள்ள கணக்கைப் பார்த்து குர்ஆனில் நபிமொழிகளில் என்னென்ன விகிதாசாரப்படி கொடுக்கக் கூறியுள்ளதோ அதன் பிரகாரம் கொடுத்து விடவேண்டும். வாகனங்கள் கால் நடைகள் விவசாயம் புதையல் …

Read More »

சிரமத்திலிருக்கும் அந்நியப் பெண்ணுக்கு உதவுதல்.

1408. என்னை ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) (மக்காவிலிருக்கும் போதே) மணந்துகொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரின் குதிரையையும் தவிர வேறு எச்சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரின் தோல் சுமையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். …

Read More »

ஆண் பெண் அல்லாத அலிகள் பற்றி….

1407. என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) ‘அலி’ ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த ‘அலி’, (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம், ‘அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்” என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) …

Read More »

இதுதான் இஸ்லாம் (பகுதி-5)

தொழுகையை நிலை நாட்டுதல் இறைவனுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளில் ஒன்று தொழுகை. படைத்த இறைவனைப் போற்றிப் புகழ்ந்து துதித்து நம் வேண்டுதல்களைப் பணிவுடன் அவனிடம் கோரும் ஒரு வழிதான் தொழுகை. 2:45. மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

Read More »