இஸ்லாமியவாதம்-பழமைவாதம்-பெண்ணடிமைவாதம்-தீவிரவாதம்- என அவதூறுகள் சொல்லி “வாதம்” பிடித்து இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அலையப் போகிறார்களோ? குர்ஆன்மீதும் நபிகளார்மீதும் சுமத்தப்படும் இத்தகைய அவதூறுகளுக்கு வயது 1426. என்ன ஆச்சரியம்! எத்தனை அவதூறுகள் வீசப்பட்ட போதிலும் வீழாமல் புன்முறுவலுடன் இஸ்லாம் வளர்ந்து வருகிறது. செப்டம்பர்-11, 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் வீழ்ந்தபோதே அமெரிக்காவில் வீழ்ந்திருக்க வேண்டிய இஸ்லாம் தான் அமெரிக்காவில் இன்று வேகமாகப் பரவும் மதம்! உலகின் அதிவேகமாக வளரும் மதம் இஸ்லாம். …
Read More »பொது? சிவில் சட்டம்
தேசத்தந்தை மஹாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவின் வாரிசுகள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைப்பெற்ற இம்ரானாவின் சம்பவத்தை மையமாக வைத்து மீண்டும் ஒரு பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கீறல் விழுந்த ரெக்கார்டை மறுபடி Play பண்ண ஆரம்பித்திருக்கிறது தேச விரோத சங்பரிவார் அமைப்பு. எத்தனையோ முறை பதில் கொடுக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்தாலும் கூட, மக்களின் மறதியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் …
Read More »76] ஹமாஸின் ஊழல் ஒழிப்புப் பிரிவு
நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 76 இஸ்ரேல் – பாலஸ்தீன் பிரச்னையின் தொடக்கம் மதம் சார்ந்ததாக இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அது முற்றிலும் அரசியல் சார்ந்ததொரு விவகாரமாகிவிட்டது. இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டபடியால்தான் யாசர் அராஃபத் பி.எல்.ஓ.வின் தலைமைப் பொறுப்புக்கு வந்தபோது, தொடக்கத்திலிருந்தே அரசியல் தீர்வுக்கும் ஒரு கதவைத் திறந்து வைத்தார். பேச்சுவார்த்தைகள், அமைதி ஒப்பந்தங்கள், போர் நிறுத்தம் உள்ளிட்ட சாத்வீக வழிகளுக்கும் சம்மதம் சொன்னார். ஆனால் பிரச்னையின் …
Read More »வஸீலா ஷபாஅத் என்னும் வார்த்தைகளில் ஏற்பட்ட சந்தேகங்கள்
வார்த்தைகளைப் பற்பல கருத்துக்களுக்குப் பிரயோகிப்பதை அறியாதவர்களும், புரட்டியும், திருப்பியும் சொற்களைக் கூறக் கூடியவர்களுமான சிலரிடத்தில் வஸீலா, தவஸ்ஸுல், ஷபாஅத் போன்ற சில வார்த்தைகள் கிடைத்தபோது அவற்றிற்கு அல்லாஹ்வும், ரஸூலும், ஸஹாபாக்களும், தாபியீன்களும், இமாம்கள் ஆகியோரெல்லாம் விலக்கியிருந்ததற்கு மாற்றமான கருத்துக்களைக் கொடுத்து மக்களை தவறின்பால் திருப்பி விட்டார்கள். இதனால் பலர் தவறினார்கள். இவ்வார்த்தையின் உட்கருத்தைப் புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. பொதுவாக கல்வி என்பது நன்றாக ஆராய்ந்து கற்று அறிந்து கொள்வதாகும். …
Read More »லண்டன் குண்டுவெடிப்பும் பர்தாவும்
லண்டன் மாநகரில் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான இன வெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் குறிப்பாக ஹிஜாப் (பர்தா) அணியும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இச்சூழலில் லண்டனில் உள்ள முஸ்லிம் கல்லூரியின் முதல்வரும், பிரிட்டன் பள்ளிவாசல் மற்றும் இமாம்கள் குழுமத்தின் தலைவருமான ஷேக் ஜக்கி பதாவி அவர்கள், “ஹிஜாப் அணிவதால் தாங்கள் தாக்குதலுக்கு இலக்காகுவோம் என்று அஞ்சும் பெண்கள் ஹிஜாப் அணிவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார். குண்டு …
Read More »அடிமைகள்.
காவி பக்தர் ஆரோக்கியம் என்பவர் //*அறிவியல் என்ற பதிவுகளுக்கு முஸ்லீம் முல்லாக்கள் தாவியதும் இந்த காரணத்தினால்தான்*// என்று தமது பதிவில் எழுதியிருக்கிறார். நாமும் சில மாதங்களுக்கு முன்பு ஒரிரு கேள்விகளை வைத்தபோது பதில் சொல்ல வக்கற்றவர்கள், வேறு விஷயங்களுக்கு திசை திருப்பி இறுதியில் மனோ தத்துவ டாக்டர்களின்(?) பின்னால் மறைந்து கொண்டார்களே இது எதற்காகவாம்? சொல்வாரா காவி பக்தர். பனூ முஸ்தலிக் போரில் கைது செய்யப்பட்டப் பெண்களை முஸ்லிம்கள் பலத்காரம் …
Read More »வஹி: இறைச்செய்தியும் – அறிவியலும்-5
பேரண்டத்தின் ஈர்ப்பு விசை! -5 ஏ.கே. அப்துர் ரஹ்மான் எல்லைகளக் கொண்ட ஆகாயப் பெருவெளியில் கணமும் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கும் பூகோளம் அதன் எல்லையைத் தாண்ட விடாமல் தடுக்கப்படுகிறது என 1400 வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டது பரிசுத்த குர்ஆன். இப்பரிசுத்த வசனத்தை நிரூபிக்கும் அறிவியல் சான்றுகளில் ஒன்றை முந்தைய கட்டுரையில் நாம் கண்டோம். இப்போது மற்றொரு சான்றையும் கவனியுங்கள். மெய்யாகவே இந்த பூகோளம் ஆகாயத்திலிருந்து விலகிச் செல்வதாக வைத்துக் கொண்டால், …
Read More »75] ஹமாஸ் (Harakat Al Muqawamah AlIslamiyah)
நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 75 ஹரக்கத் அல் முக்காவாமா அல் இஸ்லாமியா (Harakat Al Muqawamah AlIslamiyah) என்கிற நெடும்பெயரின் எளிய சுருக்கம்தான் ஹமாஸ் (Hamas). பொதுவாக டெல் அவிவில் குண்டு வெடித்தது என்கிற செய்தி வரும்போதெல்லாம் ஹமாஸின் பெயர் அடிபடுவதைப் பார்த்திருப்பீர்கள். மற்றபடி அந்த இயக்கத்தைப் பற்றி மேலதிக விவரங்கள் பெரும்பாலும் வெளியே வராது. அதிகம் படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லத்தக்க மிகப்பெரிய பண்டிதர்களின் வழிகாட்டுதலில் …
Read More »உள்ளத்தை உலுக்கிய கேள்வி…
(பணம் சம்பாதிப்பதை மட்டுமே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு, வாழ்வின் மென்மையான உணர்வுகளைக் கருகவிட்டுவிட்டு தன் கடைசி நாட்களில் எல்லாமிருந்தும் ஒன்றுமில்லாதவனாக தனிமைப்படுத்தப்படும் அ(ட)ப்பாவிகளுக்கு நினைவுறுத்தலாக…) அது ஒரு கற்பனைக்கதை தான் என்றாலும் கருத்தாழம் மிக்கதொரு கதை. சிட்டுக்குருவி ஒன்று குளிர்காலத்தில் கதகதப்பாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டது. சின்னச்சின்ன குச்சிகளை அதற்கென இளவேனில் காலம் தொட்டே சேகரிக்கத் துவங்கியது. அந்தோ பரிதாபம்! குளிர் காலம் வருமுன்பே குச்சி சேகரிக்கும் …
Read More »74] அமெரிக்கா தொடங்கி வைத்த வழக்கம்
நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 74 1967 – இஸ்ரேலிய அரேபிய யுத்தத்தின் விளைவுகளுள் மிக மிக முக்கியமானது, பாலஸ்தீனிய அரேபியர்களின் மனமாற்றம். ஒரு வரியில் சொல்லுவதென்றால், அரபு அரசாங்கங்கள் எதையுமே இனி நம்பக்கூடாது என்று பாலஸ்தீன் மக்கள் தீர்மானமே செய்தார்கள். அத்தனைபேருமே கையாலாகாதவர்கள் என்று பகிரங்கமாகவே அவர்கள் குற்றம் சாட்டினார்கள். நேற்று முளைத்த தேசம் இஸ்ரேல். மூன்று அரபு தேசங்கள் இணைந்து போர் புரிந்தும் வெல்லமுடியவில்லை என்றால், …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library