Featured Posts
Home » 2005 » August (page 3)

Monthly Archives: August 2005

லண்டன் குண்டுவெடிப்பும் பர்தாவும்

லண்டன் மாநகரில் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான இன வெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் குறிப்பாக ஹிஜாப் (பர்தா) அணியும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இச்சூழலில் லண்டனில் உள்ள முஸ்லிம் கல்லூரியின் முதல்வரும், பிரிட்டன் பள்ளிவாசல் மற்றும் இமாம்கள் குழுமத்தின் தலைவருமான ஷேக் ஜக்கி பதாவி அவர்கள், “ஹிஜாப் அணிவதால் தாங்கள் தாக்குதலுக்கு இலக்காகுவோம் என்று அஞ்சும் பெண்கள் ஹிஜாப் அணிவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார். குண்டு …

Read More »

அடிமைகள்.

காவி பக்தர் ஆரோக்கியம் என்பவர் //*அறிவியல் என்ற பதிவுகளுக்கு முஸ்லீம் முல்லாக்கள் தாவியதும் இந்த காரணத்தினால்தான்*// என்று தமது பதிவில் எழுதியிருக்கிறார். நாமும் சில மாதங்களுக்கு முன்பு ஒரிரு கேள்விகளை வைத்தபோது பதில் சொல்ல வக்கற்றவர்கள், வேறு விஷயங்களுக்கு திசை திருப்பி இறுதியில் மனோ தத்துவ டாக்டர்களின்(?) பின்னால் மறைந்து கொண்டார்களே இது எதற்காகவாம்? சொல்வாரா காவி பக்தர். பனூ முஸ்தலிக் போரில் கைது செய்யப்பட்டப் பெண்களை முஸ்லிம்கள் பலத்காரம் …

Read More »

வஹி: இறைச்செய்தியும் – அறிவியலும்-5

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை! -5 ஏ.கே. அப்துர் ரஹ்மான் எல்லைகளக் கொண்ட ஆகாயப் பெருவெளியில் கணமும் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கும் பூகோளம் அதன் எல்லையைத் தாண்ட விடாமல் தடுக்கப்படுகிறது என 1400 வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டது பரிசுத்த குர்ஆன். இப்பரிசுத்த வசனத்தை நிரூபிக்கும் அறிவியல் சான்றுகளில் ஒன்றை முந்தைய கட்டுரையில் நாம் கண்டோம். இப்போது மற்றொரு சான்றையும் கவனியுங்கள். மெய்யாகவே இந்த பூகோளம் ஆகாயத்திலிருந்து விலகிச் செல்வதாக வைத்துக் கொண்டால், …

Read More »

75] ஹமாஸ் (Harakat Al Muqawamah AlIslamiyah)

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 75 ஹரக்கத் அல் முக்காவாமா அல் இஸ்லாமியா (Harakat Al Muqawamah AlIslamiyah) என்கிற நெடும்பெயரின் எளிய சுருக்கம்தான் ஹமாஸ் (Hamas). பொதுவாக டெல் அவிவில் குண்டு வெடித்தது என்கிற செய்தி வரும்போதெல்லாம் ஹமாஸின் பெயர் அடிபடுவதைப் பார்த்திருப்பீர்கள். மற்றபடி அந்த இயக்கத்தைப் பற்றி மேலதிக விவரங்கள் பெரும்பாலும் வெளியே வராது. அதிகம் படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லத்தக்க மிகப்பெரிய பண்டிதர்களின் வழிகாட்டுதலில் …

Read More »

உள்ளத்தை உலுக்கிய கேள்வி…

(பணம் சம்பாதிப்பதை மட்டுமே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு, வாழ்வின் மென்மையான உணர்வுகளைக் கருகவிட்டுவிட்டு தன் கடைசி நாட்களில் எல்லாமிருந்தும் ஒன்றுமில்லாதவனாக தனிமைப்படுத்தப்படும் அ(ட)ப்பாவிகளுக்கு நினைவுறுத்தலாக…) அது ஒரு கற்பனைக்கதை தான் என்றாலும் கருத்தாழம் மிக்கதொரு கதை. சிட்டுக்குருவி ஒன்று குளிர்காலத்தில் கதகதப்பாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டது. சின்னச்சின்ன குச்சிகளை அதற்கென இளவேனில் காலம் தொட்டே சேகரிக்கத் துவங்கியது. அந்தோ பரிதாபம்! குளிர் காலம் வருமுன்பே குச்சி சேகரிக்கும் …

Read More »

74] அமெரிக்கா தொடங்கி வைத்த வழக்கம்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 74 1967 – இஸ்ரேலிய அரேபிய யுத்தத்தின் விளைவுகளுள் மிக மிக முக்கியமானது, பாலஸ்தீனிய அரேபியர்களின் மனமாற்றம். ஒரு வரியில் சொல்லுவதென்றால், அரபு அரசாங்கங்கள் எதையுமே இனி நம்பக்கூடாது என்று பாலஸ்தீன் மக்கள் தீர்மானமே செய்தார்கள். அத்தனைபேருமே கையாலாகாதவர்கள் என்று பகிரங்கமாகவே அவர்கள் குற்றம் சாட்டினார்கள். நேற்று முளைத்த தேசம் இஸ்ரேல். மூன்று அரபு தேசங்கள் இணைந்து போர் புரிந்தும் வெல்லமுடியவில்லை என்றால், …

Read More »

வஹி: இறைச்செய்தியும் – அறிவியலும்-4

விண்ணகத்தின் பரப்பெல்லை -4 ஏ.கே.அப்துர் ரஹ்மான் கோள்கள், துணைக்கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் நீந்திச் செல்ல அவைகளின் படைப்பாளானால் வடிவமைக்கப்பெற்ற பேரண்டப் பெருவெளியே ஆகாயம். இது பூகோளத்தைப் போன்று பற்பல கோள்களையும், நிலவைப் போன்று பற்பல துணைக் கோள்களையும் கொண்டிருந்தாலும், அவை எவற்றிலும் வாழ்வதற்குரிய வசதியை இதுவரை கண்டறியாத அறிவியல் கண்களுக்கு இப்பூமியில் காணப்படும் வாழ்க்கை வசதி அளப்பறிய வியப்பை அளிக்கிறது. அத்துடன் முந்தைய பகுதிகளில் ஆய்வு செய்த குர்ஆனிய வசனங்களான, …

Read More »

கப்றும் திருவிழாக்களும்

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் ஒரு ஹதீஸில் ‘அல்லாஹ்வுக்குப் பூமியில் வந்து போகின்ற மலக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக என்னுடைய உம்மத்திலுள்ளவர்கள் என்மீது கூறுகின்ற ஸலாம் எனக்கு சேர்த்து வைக்கப்படுகிறது’ என்று அறிவிக்கிறார்கள். (நஸாயீ, அபூஹாதிம்) தூரத்திலிருக்கும் ஒரு முஸ்லிம் நபியின் மீது சொல்லும் ஸலாம் மலக்குகள் வழியாக நபியின்பால் சேர்த்து வைக்கப் படுகின்றது என்று இந்த ஹதீஸுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

Read More »

வாழைப்பழ விவகாரம்!

வெகு காலமாக நடந்து கொண்டிருந்த ஒரு வினோத வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. வெகுகாலமாக என்றால் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த காலத்திலிருந்து. உலகின் பலம் பொருந்திய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கின் மூல காரணம் வாழைப்பழம்! ஆம்.. வாழைப்பழம்தான். இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு, ஐரோப்பிய நாடுகளான ஃபிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் ஆகியவற்றிடம் காலனியாக இருந்த பல சிறிய நாடுகள் சுதந்திரமடைந்தன. இருந்தாலும் தமது முன்னாள் காலனி நாடுகளின் …

Read More »

காவல் ஆய்வாளரின் கொலைவெறித் தாக்குதல்

முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் போராடத் தெரியாது என்ற காலம் போய், போராட்டமும், சட்டமும் பேசுவது பாசிசவாதிகளுக்கு எரிச்சலை தந்துள்ளது. முஸ்லிம்களை ஒழிக்க காவி சிந்தனையாளர்கள் போட்ட திட்டத்தில் முக்கியமானது அனைத்து துறையிலும் பாசிச காவி சிந்தனையாளர்களை புகுத்துவது. ஆகவே ஆட்சி மாறினாலும் அடாவடித்தனம் மாறுவதில்லை. அப்படித்தான் பின்வரும் நிகழ்ச்சி நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் தாழையூத்து தமுமுக தலைவர் எம். அப்துல் பஷீர். இவரைக் களங்கப்படுத்தும் விதமாக sms அனுப்பிய ஏ. …

Read More »