Featured Posts

நூல்கள்

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!

ஐம்பது நாள் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அரசியல் குழப்பங்களால் இலங்கையின் நன்மதிப்புக்கு சரிவு ஏற்பட்டது. நாணயத்தின் மதிப்பிலும் சரிவு ஏற்பட்டது. இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாரிய வீழ்ச்சி…. என பல சரிவுகள் ஏற்பட்டன. அதனை சரி செய்ய வேண்டிய நிலையில் நாடு உள்ளது. நாட்டில் ஏற்பட்ட இந்த குழப்பநிலை முற்று முழுதாக முடிவுக்கு வந்துவிடவில்லை. விவாகரத்தை வேண்டி நிற்கும் தம்பதிகள் போல ஜனாதிபதியும் பிரதமரும் செயற்பட்டால் நாட்டைக் …

Read More »

மனிதனின் பலவீனம் | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-36 [சூறா அந்நிஸா–13]

மனிதனின் பலவீனம் يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّخَفِّفَ عَنْكُمْۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا “அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) இலகுபடுத்தவே விரும்புகின்றான். மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.” (4:28) அடிமைப் பெண்களைத் திருணம் செய்ய அனுமதித்த பின்னர் அல்லாஹ் இலகுபடுத்த விரும்புகின்றான் என்பது கூறப்படுகின்றது. அத்துடன் மனிதன் பலவீனமானவனாகவும் படைக்கப் பட்டுள்ளான் என்றும் கூறப்படுகின்றது. இங்கே மனித பலவீனமாகக் கூறப்படுவது எது என்பது குறித்து அறிஞர்கள் விபரிக்கின்ற போது, பெண்கள் விடயத்தில் ஆண்களும் …

Read More »

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-2 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-36]

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-35] அந்தக் கொடுங்கோல் அரசனின் அரச சபையில் ஒரு பிறவிக் குருடன் இருந்தான். அவனுக்கும் செய்தி எட்டியது. அவன் நிறைய பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்ட சிறுவனிடம் வந்தான். பொருட்களைக் காட்டி, “நீ என் கண்ணைக் குணமாக்கினால், இத்தனைப் பரிசுப் பொருட்களையும் உனக்குத் தருவேன்” எனக் கூறினான். அதற்கு சிறுவன், “என்னால் எவருடைய நோயையும் குணப்படுத்த முடியாது. அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நோய் நீக்க …

Read More »

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-35]

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள் அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள் என்றால் யார் என்று தெரியுமா? அவர்கள் ஏன் அழிக்கப்பட்டார்கள் எனத் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்வோம். கிடங்கு என்பது நெருப்புக் கிடங்காகும். அல்குர்ஆனில் சூறா ‘அல்புரூஜ் என்றறொரு (85) அத்தியாயம் உள்ளது. அதில் அல்லாஹுத்தஆலா இந்த வரலாற்றை சுருக்கமாகக் கூறுகின்றான். நபி(ஸல்) அவர்கள் அந்த சம்பவத்தை விவரித்துக் கூறுகின்றார்கள். வாருங்கள் அந்த வரலாற்றை வாசிப்போம். முன் ஒரு காலத்தில் கொடுங்கோல் அரசன் (ஒரு ஊரை …

Read More »

[E-Book] பைபிளின் மூல பிரதியின் மசொரிடிக் மற்றும் கும்ரான் சுருளில் உள்ள நுணுக்கமான முரண்பாடு | Qumran Biblical Scrolls

அலீபோ கோடக்ஸ் சுருக்கி மசொரிட்டிக் என்று எழுதி இருப்போம் சாக் கடல் சாசன சுருளை சுருக்கி கும்ரான் பிரதி என்று எழுதி இருப்போம் அதில் முதலாவது ALEPPO CODEX எபிரயத்தில் இருக்கக் கூடிய இது கி.பி 8 அல்லது 9 நூற்றாண்டில் எழுதப்பட்டது இதன் அடிப்படையில் தான் இன்று பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சாக் கடல் சாசன சுருள் எழுதப்பட்டது பிரெட் மில்லர் அடிப்படையில் கி.மு.1௦௦ 1)தாளத் அல்லது ரேஸ் …

Read More »

கற்றவரும் கல்லாதவரும் சமமாக மாட்டார்கள் | இறைமொழியும்… தூதர் வழியும்… – 02

இறைமொழியும் தூதர் வழியும் – 2 | கற்றவரும் கல்லாதவரும் சமமாக மாட்டார்கள் “(நிராகரிப்பவன் சிறந்தவனா?) அல்லது மறுமையைப்பயந்து, தனது இரட்சகனின் அருளை ஆதரவு வைத்து, சுஜூது செய்தவராகவும், நின்றவராகவும் இரவு நேரங்களில் அடிபணிந்து வழிபடுவரா? அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என(நபியே!) நீர் கேட்பீராக சிந்தனையுடையோர் தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.” (39:9) இந்தக்கேள்வி மூலம் கற்றவர்களும் கல்லாதவர்களும் சமமாக மாட்டார்கள் என்பதை அல்லாஹ் உணர்த்துகின்றான். “நரகவாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள். சுவர்க்கவாசிகளே …

Read More »

முதல் கட்டளை வாசிப்பீராக! | இறைமொழியும்… தூதர் வழியும்… – 01

முதல் கட்டளை: வாசிப்பீராக! (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (திருக்குர்ஆன் 96:1&5) இறுதித் தூதர் முஹம்மத் நபிக்கு முதன்முதலில் அருளப்பட்ட வேத வசனங்கள் இவைதான். “வாசிப்பீராக” என்ற கட்டளையுடன் வந்த வாழ்க்கை வசந்தமே இஸ்லாமாகும். முஹம்மத் நபி வாழ்ந்த காலம் …

Read More »

ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா? | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-35 [சூறா அந்நிஸா–12]

ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா? فَاِذَاۤ اُحْصِنَّ فَاِنْ ا تَيْن بِفَاحِشَة فَعَلَيْهِن نِصْف مَا عَلَى الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِ‌ ؕ ‘அவர்கள் திருமணம் முடித்த பின்னர் மானக்கேடான செயலைச் செய்து விட்டால், சுதந்திரமான கன்னிப் பெண்களுக்கு வழங்கும் தண்டனையில் அரைவாசியே அவர்களுக்குரிய தண்டனையாகும்.’ (4:25) மேற்படி வசனத்தை மொழிபெயர்ப்புச் செய்வதில் ஏற்பட்ட குளறுபடியில் இலங்கையில் பெரிய கொள்கைக் குழப்பமே ஏற்பட்டது எனலாம். இந்த அத்தியாயத்தின் 24, 25 ஆம் …

Read More »

அடித்துக் கொன்றவர்கள், அழிக்கப்பட்டனர்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-34]

அடித்துக் கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊருக்கு அல்லாஹ் மூன்று தூதர்களை அனுப்பினான். அந்த ஊர் மக்கள் அல்லாஹ்வின் அருளுக்குத் தகுதியானவர்களாக இருக்கவில்லை. அழிந்து போனார்கள்! ஆம் ‘அன்தாக்கியா’ எனும் ஊர் மக்கள் அறியாமையிலும் சிலை வணக்கத்திலும் மூழ்கியிருந்தனர். அங்கே அநியாயமான ஒரு ஆட்சியும் இருந்தது. அந்த ஊரில் ‘ஹபீப்’ என்ற ஒருவர் இருந்தார். அவர் சிலை வணக்கத்தை வெறுத்தார். மூட நம்பிக்கைகளை மறுத்தார். ஆனால் தனிமரம் தோப்பாகாதே! …

Read More »

நூஹ் நபியும்… கப்பலும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-33]

நூஹ் நபியும்… கப்பலும்… ஆதம் நபி காலத்தில் மக்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி வந்தனர். பல தெய்வ நம்பிக்கை அப்போது இருக்கவில்லை. சிலை வணக்கமும் இருக்கவில்லை. அந்த மக்களில் மிகச்சிறந்த சிலர் இருந்தனர். அவர்கள் இறந்த பின்னர் அவர்கள் மீது பற்றுக் கொண்ட மக்கள் அவர்களின் மண்ணறைகளில் சில அடையாளங்களை வைத்தனர். பிற்பட்ட காலத்தில் வந்த மக்கள் அந்த கப்ருகளில் ஏதோ விசேசம் இருப்பதாக எண்ணி அந்தகல்லறைகளை தரிசித்தனர். அங்கே …

Read More »