Featured Posts

Recent Posts

முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) ஏகத்துவப் புத்துயிர்ப்பும் வஹ்ஹாபிய வாதமும் ஒரு விமர்சனப் பார்வை – தொடர் 2

எம்.ஏ.ஹபீழ் ஸலபி.ரியாதி (M.A.) சீர்திருத்தப் பணிகள் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 1115ல் (கி.பி1703) உயைய்னா என்ற பாலைவனக் கிராமத்தில் பிறந்தார்கள். இவர் அன்றைய அரேபியாவில் புகழ் பெற்ற பனூ தமீம் குலத்தைச் சேர்ந்தவராவார். இவரின் பாட்டனார், சுலைமான் இப்னு அலி உயைய்னா நீதவானா(காழியா)கவும் நஜ்த் மாகாணத்தின் ஷெய்குல் இஸ்லாமாகவும் இருந்தார். முஹம்மதின் தந்தை ஷெய்க் அப்துல் வஹ்ஹாப் உலமாவாகவும் உள்ளுர் காழியாக(நீதவானா)வும் விளங்கினார். இமாம் …

Read More »

கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 2

– எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி. M.A, (cey) இஸ்லாம் அறிமுகம் செய்துள்ள உணவுப்பழக்க வழக்கங்கள், சுத்தம் தொடர்பான வழிகாட்டல்கள் பற்றி ஆராய்ந்தால் குரோனா போன்ற கொடிய வைரஸ் தொற்றுக்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடும் தெளிவானதாகும் என்பதை நடுநிலையோடு படிப்பவர்கள் முடிவு செய்வர். 1500 ஆண்டுகளுக்கு முன்னால் இறைவனின் இறுதித் தூதராக வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலக மக்களுக்கு ஒரு அருட்கொடை என்ற கருத்தை இந்த வைரஸ் …

Read More »

கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 1

எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி. M.A, (cey) முன்னுரை புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. தூதர்களில் இறுதியானவராகிய மனித குல வழிகாட்டி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் வழி நடக்கும் நல்லுங்கள், உலக சமாதான விரும்பிகள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக! இஸ்லாம் இறை மார்க்கமாகும். அதனால் அதில் காணப்படுகின்ற அனைத்து வழிகாட்டல்களும் தெய்வீகம் சார்ந்ததாகவும் மனித இனத்தின் நலனைக் கருத்தில் …

Read More »

முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) ஏகத்துவப் புத்துயிர்ப்பும் வஹ்ஹாபிய வாதமும் ஒரு விமர்சனப் பார்வை – தொடர் 1

எம்.ஏ.ஹபீழ் ஸலபி.ரியாதி (M.A.) முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் இஸ்லாமிய உலகில் நன்கு அறிமுகமான ஓர் நல்லறிஞர். அவர், அல்குர்ஆன் – சுன்னாவின் நிழலில் முஸ்லிம் சமூகப் புனர் நிர்மாணத்தை மிகப் பெரும் தியாகத்துடன் மேற்கொண்டார். முஹம்மத் என்பது அவரது இயற் பெயர். அப்துல் வஹ்ஹாப் என்பது அவரது தந்தையின் பெயர். எனினும், அல்குர்ஆன் – சுன்னாவின் பரம எதிரிகள், தந்தையின் பெயரில் அவரை அப்துல் வஹ்ஹாப் …

Read More »

பல்கலைக்கழகங்களைப் பலிபீடமாக்கும் பகிடிவதை – நூல் அறிமுகம்

A.H. அப்துல்லாஹ் அஸாம் சமூகத்திற்கு மத்தியில் பெரும் அதிர்வுகளைத் தோற்றுவித்துள்ள பகிடிவதை தொடர்பாக எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.)அவர்களினால் பல்கலைக்கழகங்களைப் பலிபீடமாக்கும் பகிடிவதை என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பை ஹம்னா பதிப்பகம் 2020 மார்ச் மாதம் துவக்கத்தில் வெளியிட்டுள்ளது. பல தசாப்தகாலமாகத் தடுக்க முடியாமல் தொடரும் இவ்வன்கொடுமை தொடர்பில் பெற்றோரும், புதுமுக மாணவர்களும், நாடும் அதிர்ச்சியில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில், பல்வேறு விளைவுகளைத் தோற்றுவித்து, தற்போது பேசுபொருளாகியுள்ள இப்பிரச்சினை …

Read More »

வளம் கொழித்தபோதும் பலம் இழந்தவர்கள் – தொடர் 2

ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கூறிவிட்டுக் கூறப்பட்டவர்கள் நன்கு புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் உதாரணங்களும், எடுத்துக்காட்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன. படிப்பவர்களும், கேட்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதால் எடுத்துக்காட்டு என்ற யுக்தி (வழிமுறை) கையாளப்படுகின்றது. அல்குர்ஆனிலும் ஏராளமான உதாரணங்களும், எடுத்துக்காட்டுகளும் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. முன் சென்றுபோன சமுதாயத்தவர்களின் வாழ்க்கையையும் அவர்களின் முடிவையும் அல்லாஹ் பல இடங்களிலும் பல உதாரணங்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றான். اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ …

Read More »

வளம் கொழித்தபோதும் பலம் இழந்தவர்கள் – தொடர் 1

அல்லாஹ் என்பவன் யார்? அவனை ஏன் வணங்கவேண்டும்? அவனது தூதரை ஏன் பின்பற்றவேண்டும்? சுவர்க்கம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன? சுவர்க்க வாதிகள் யார்? நரகவாதிகள் யார்? என்பனவற்றைத் திருமறை குர்ஆன் கூறுவதோடு இந்த சமுதாயம் படிப்பினை பெறவேண்டும் என்பதற்காக முன் சென்ற சமுதாயத்தவரின் வரலாறுகளையும் அல்குர்ஆன் விவரிக்கின்றது. அறிவுரைகளும் போதனைகளும் புறக்கணிக்கப்பட்டு, தீமைகளும் பாவங்களும் தலைவிரித்தாடும்போது அல்லாஹுவின் தண்டனையும், சோதனையும் அந்த சமூகத்தை வந்து சூழ்ந்துகொள்கின்றது. وَلَقَدْ …

Read More »

ஃபிக்ஹுல் இஸ்லாம் – 47

-S.H.M. Ismail Salafi கிதாபுல் ஜனாயிஸ் -(ஜனாஸாவின் சட்டதிட்டங்கள்) குளிப்பாட்டத் தகுதியானவர்கள்: ஜனாஸாவைக் குளிப்பாட்டும் விடயத்தில் யார் பொருத்தமானவர்கள் என்பது குறித்து ஏற்கனவே பல விடயங்களை அவதானித்தோம். குளிப்பாட்டுபவர் விடயத்தில் யார் பொருத்தமான வர்கள் என்பது குறித்து ஏற்கனவே பல விடயங்களை அவதானித்தோம். குளிப்பாட்டுபவர் விடயத்தில் பொதுவாக கவனிக்க வேண்டிய இரண்டு அம்சங்கள் உள்ளன. 1. நல்லவர்கள்: குளிப்பாட்டுபவர்கள் மார்க்க விழுமியங் களைப் பேணி நடப்பவராக இருக்க வேண்டும். அவர் …

Read More »

உண்மை உதயம் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகள் மற்றும் தொடர்கள்

உண்மை உதயம் மாத இதழில் பிரசுரமாகி பிறகு இஸ்லாம்கல்வி.காம் தளத்தில் பதிவுசெய்வதற்காக இதழாசிரியர் அனுப்பிய ஆக்கங்களை வாசகர்களின் வசதிக்காக வரிசைப்படுத்தியுள்ளோம்.

Read More »

வர்ணம் தீட்டுவோம்!

ஆசிரியர் பக்கம் – ஜனவரி 2020 அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகின்றான் (முஸ்லிம்) என்பது இறைத்தூதர் முஹம்மத்(ச) அவர்களது போதனையாகும். அல்லாஹ்வைப் பற்றி குர்ஆன் அறிமுகம் செய்யும் போது, ”அஹ்ஸனுல் ஹாலிகீன்’ – அழகிய படைப்பாளன்’ (23:14, 37:125) என்று குறிப்பிடுகின்றது. இந்த வகையில் இஸ்லாம் அழகுணர்வை ஆர்வமூட்டக் கூடிய மார்க்கமாகும். ‘நாம் வானத்தில் கோள்களை அமைத்து, பார்ப்போருக்கு அதனை அலங்கரித்துள்ளோம்;.’ (15:16) வானத்தில் கோள்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு …

Read More »